12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 12 உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 20
கேள்வி 20 : அயல் சிற்றினங்களின் படையெடுப்பு ஓரிட சிற்றினங்களுக்கு அச்சுறுத்தலாக விளங்குகின்றது-வாக்கியத்தை நிருபி.
முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :
- அன்னிய இனங்கள் உயிரினங்களின் அழிவிற்கு இரண்டாவது முக்கிய காரணியாகக் கருதப்படுகின்றன.
- அவை ஆக்கிரமிப்புத் தன்மையுடன் இருப்பதால், உள்ளூர் இனங்களை வெளியேற்றுகின்றன.
- அயல் இனங்கள் நீர் மற்றும் தரைச் சூழ்நிலை மண்டலங்களுக்குத் தீங்கு விளைவிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளன.
- உதாரணமாக, 1952 இல் தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட திலேப்பியா (ஜிலேபி கெண்டை) கேரளாவின் உள்ளூர் நீர்நிலைகளை ஆக்கிரமித்ததால், பன்கிஸ் டுபியஸ் மற்றும் லேபியோ கோண்டியஸ் போன்ற உள்ளூர் மீன் இனங்கள் அழியும் நிலையில் உள்ளன.
- கொல்கத்தாவின் சதுப்பு நிலப்பகுதியில் உள்ளூர் மீன்களின் இனத்தொகையை அமேசான் துடுப்பு பூனை மீன்கள் குறைக்கின்றன.
- இந்தியாவில் உள்ள அனைத்து அயல் இனங்களை விடவும் ஆப்பிரிக்கா ஆப்பிள் நத்தை மிக அதிகமாக ஆக்கிரமித்துள்ளது.


0 Comments