Tuesday, October 04, 2022

TNPSC G.K - 170 | டெல்லி சுல்தான்கள்.

டெல்லி சுல்தான்கள் :


இந்தியாவின் மீது முஸ்லிம்கள் நடத்திய படையெடுப்புகளின் விளைவாக டெல்லி சுல்தானியர்களின் ஆட்சி நிறுவப்பட்டது.


டெல்லி சுல்தானியர்களின் ஆட்சியானது, கி.பி. 1206 முதல் 1526 ஆம் ஆண்டு வரை நீடித்தது.


ஐந்து வம்சங்களான : அடிமை, கில்ஜி, துக்ளக், சையது, லோடி ஆகியன டெல்லி சுல்தானியத்தை ஆட்சி செய்தன.


வட இந்தியா முழுவதையும் கைப்பற்றியதோடு நிற்காமல், அவர்கள் தக்காணத்திலும் தென்னிந்தியாவிலும் நுழைந்தனர்.


இந்தியாவில் அவர்களது ஆட்சி, சமூகம், ஆட்சித் துறை மற்றும் பண்பாட்டு நிலைமைகளில் பெருத்த மாற்றங்களை ஏற்படுத்தின.


அடிமை வம்சம் :


அடிமை மரபை தோற்றுவித்தவர் - குத்புதின் ஐபக்.


அடிமை என்பதன் பொருள் - மம்லுக்.


முகமது கோரியின் அடிமை குத்புதின் ஐபக் ஆவார்.


குத்புதின் ஐபக் டெல்லியில் கட்டி தொடங்கிய மசூதியின் பெயர் - க்யூவாட் உல் இஸ்லாம்.


குத்புதின் ஐபக் ‘லக்பாக்க்ஷா’ என அழைக்கப்பட்டார்.


”லக்பாக்க்ஷா” என்பதன் பொருள் லட்சங்களை அள்ளி தருபவர்.


குத்புதின் ஐபக் டெல்லியில் கட்டிய புகழ் பெற்ற கட்டிடம் - குதுப்மினார்.


குத்புதின் ஐபக் போலோ விளையாட்டின் போது தவறி விழுந்து இறந்து போனார்.


போலோ விளையாட்டிற்கு வேறு பெயர் - சவ்கன்.


குத்புதின் ஐபக் பின் ஆட்சிக்கு வந்தவர் - இல்துமிஷ்.


இல்துமிஷ் :


குத்புதின் ஐபக் பின் ஆட்சிக்கு வந்தவர் - இல்துமிஷ்.


இல்துமிஷ் என்பவர் குத்புதின் ஐபக்கின் மருமகன் ஆவார்.


குத்புதின் ஐபக் மருமகன் - இல்துமிஷ்.


குத்புதின் ஐபக் மகன் - அராம்.


இல்துமிஷ் வெளியிட்ட வெள்ளி நாணயத்தின் பெயர் - டாங்கா.


குதுப்மினாரை கட்டி முடித்தவர் - இல்துமிஷ்.


இல்துமிஷ் மகளின் பெயர் - ரசியா சுல்தான்.


இல்துமிஷ் பின் ஆட்சிக்கு வந்தவர் - ரசியா சுல்தான்.


டெல்லியை ஆண்ட முதல் பெண் சுல்தான் - ரசியா சுல்தான்.


ரசியா சுல்தான் கணவர் பெயர் - அல்துனியா.


ரசியா சுல்தான் பின் ஆட்சிக்கு வந்தவர் - நஸ்ருதீன் முகமது.


இல்துமிஷ் கடைசி மகன் - நஸ்ருதீன் முகமது.


நஸ்ருதீன் முகமது முக்கிய ஆலோசகர் - கியாசுதின் பால்பன்.


நஸ்ருதீன் முகமது பின் ஆட்சிக்கு வந்தவர் - கியாசுதின் பால்பன்.


அடிமை வம்சத்தின் சிறந்த அரசர் - கியாசுதின் பால்பன்.


40 துருக்கிய பிரபுக்களை ஒழித்தவர் - கியாசுதின் பால்பன்.


கியாசுதின் பால்பன் ஆதரித்த பாரசீக கவிஞர் - அமீர் குஸ்ரு.


இந்தியக் கிளி என்று அழைக்கப்படுபவர் - அமீர் குஸ்ரு.


கியாசுதின் பால்பன் பின் ஆட்சிக்கு வந்தவர் - கைகுபாத்.


அடிமை மரபின் கடைசி அரசர் - கைகுபாத்.


கில்ஜி மரபு :


கில்ஜி மரபை தோற்றுவித்தவர் - ஜலாலுதீன் கில்ஜி.


ஜலாலுதீன் கில்ஜி அறியனை ஏறும் போது வயது - 70.


ஜலாலுதீன் கில்ஜிக்கு பின் ஆட்சிக்கு வந்தவர் - அலாவுதீன் கில்ஜி.


ஜலாலுதீன் கில்ஜி மருமகன் - அலாவுத்தீன் கில்ஜி.


ஜலாலுதீன் கில்ஜி, அலாவுத்தீன் கில்ஜியால் கொல்லப்பட்டார்.


கில்ஜி வம்சத்தின் தலைசிறந்த அரசர் - அலாவுத்தீன் கில்ஜி ஆவார்.


ஜலாலுதீன் கில்ஜி மருமகன் - அலாவுத்தீன் கில்ஜி ஆவார்.


அலாவுத்தீன் கில்ஜி குஜராத் மீது படையெடுத்த ஆண்டு - கி.பி. 1297.


குஜராத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட அலாவுத்தீன் கில்ஜி படைதளபதி - மாலிக்காபூர்.


அலாவுத்தீன் கில்ஜியால் தோற்கடிக்கப்பட்ட மேவர் அரசர் - ராணபீம்சிங்.


ராணபீம்சிங் மனைவி பெயர் - ராணி பத்மினி.


ராணி பத்மினி, ஜவகர் முறையில் தன் கணவரின் இறப்பிற்கு பின் உயிர் துறந்தார்.


ஜவகர் முறை என்பது தீக்குளித்து உயிர் விடும் முறையாகும்.


தென்னிந்தியாவில் இராமேஸ்வரம் வரை படையெடுத்து வந்த முதல் கில்ஜி படைதளபதி - மாலிக்காபூர்.


அசோகருக்கு பின் மிக பரந்த நிலப்பரப்பை ஆட்சி செய்தவர் - அலாவுத்தீன் கில்ஜி.


குதிரைக்கு சூடு போடும் முறைக்கு தாக் முறை என்று பெயர்.


தாக் முறை அறிமுக படுத்தியவர் - அலாவுத்தீன் கில்ஜி.


அலாவுத்தீன் கில்ஜியால் ஆதரிக்கப்பட்ட பாரசீக கவிஞர் - அமீர் குஸ்ரு.


அமீர் குஸ்ரு எழுதிய நூல் - லைலா மஜ்னு.


அமீர் குஸ்ரு கண்டுபிடித்த இசை கருவி - ஷெனாய்.


அலாவுத்தீன் கில்ஜி இறப்பு கி.பி. 1316.


அலாவுத்தீன் கில்ஜி பின் ஆட்சிக்கு வந்தவர் - குத்புதின் முபாரக்.


கில்ஜி வம்சத்தின் கடைசி அரசர் - குத்புதின் முபாரக்.


துக்ளக் மரபு :


துக்ளக் மரபு தோற்றுவித்தவர் - கியாசுதின் துக்ளக்.


கியாசுதின் துக்ளக் தந்தை வழி மரபு - துருக்கி.


கியாசுதின் துக்ளக் தாய் வழி மரபு - பாஞ்சாப் (ஜாட்) வகுப்பு.


கியாசுதின் துக்ளக் மகன் பெயர் - முகமது பின் துக்ளக்.


முகம்மது பின் துக்ளக் காலத்தில் இருந்த சரித்திர ஆசிரியர் - பரணி.


இரு நதிகளுக்கு இடைப்பட்ட வளமான பகுதி - தோவாப்.


தன் தலைநகரை டெல்லியில் இருந்து தேவகிரிக்கு மாற்றியவர் - முகம்மது பின் துக்ளக்.


தேவகிரிக்கு முகம்மது பின் துக்ளக் வைத்த பெயர் - தௌலதாபாத்.


அடையாள செப்பு நாணயங்களை வெளியிட்டவர் - முகம்மது பின் துக்ளக்.


முகம்மது பின் துக்ளக் எடுத்த இரு படையெடுப்பு - 1. பாரசீக படையெடுப்பு. 2. குமோன் படையெடுப்பு.


முரண்பாடுகளின் மொத்த உருவம் என்று அழைக்கப்படுபவர் - முகம்மது பின் துக்ளக்.


முகம்மது பின் துக்ளக் பின் ஆட்சிக்கு வந்தவர் - பெரோஸ் துக்ளக்.


கியாசுதின் இளைய சகோதரர் - பெரோஸ் துக்ளக்.


துக்ளக் மரபில் சிறந்த அரசர் - பெரோஸ் துக்ளக்.


ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் - பெரோஸ் துக்ளக்.


துக்ளக் மரபு சிதறுண்டு போக காரணம் - தைமூர் படையெடுப்பு.


துக்ளக் மரபு கடைசி அரசர் - பெரோஸ் துக்ளக்.


சையது மரபு :


சையது மரபு தோற்றி வித்தவர் - கிசிர்கான்.


கிசிர்கான் தலைநகரம் - டெல்லி.


கிசிர்கான் பின் ஆட்சிக்கு வந்தவர் - முபாரக் ஷா.


முபாரக் ஷா பின் ஆட்சிக்கு வந்தவர் - முகம்மது ஷா.


முகம்மது ஷா அமைச்சர் - பஹ்லுல் லோடி.


சையது மரபின் கடைசி அரசர் - முகம்மது ஷா.


லோடி மரபு :


லோடி மரபு தோற்றுவித்தவர் - பஹ்லுல் லோடி.


பஹ்லுல் லோடி மகன் - சிக்கந்தர் லோடி.


லோடி வம்சத்தில் சிறந்த அரசர் - சிக்கந்தர் லோடி.


டெல்லியில் இருந்து தலைநகரை ஆக்ராவிற்கு மாற்றியவர் - சிக்கந்தர் லோடி.


சிக்கந்தர் லோடியின் மகன் இப்ராஹிம் லோடி.


சிக்கந்தர் லோடி படைதளபதி - தௌலத்கான் லோடி.


பாபரை இந்தியாவின் மீது படையெடுத்து வருமாறு அழைப்பு விடுத்தவர் - தௌலத்கான் லோடி.


பாபருக்கும் இப்ராஹிம் லோடிக்கும் ஏற்பட்ட போர் முதலாம் பானிபட் போர் (1526).


லோடி வம்சம் ஆட்சி செய்த ஆண்டு - 75 ஆண்டுகள்.

No comments:

Popular Posts