- அண்டத்தைப் பற்றிய படிப்பிற்கு என்ன பெயர் - காஸ்மொலஜி.
- பெருவெடிப்பு எப்போது ஏற்பட்டது? சுமார் 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு .
- நமது பால்வெளி விண்மீன் திரள் மண்டலம் எப்பொழுது உருவானது?சுமார் 10 பில்லியன் வருடங்களுக்கு முன் .
- புவிக்கு அருகில் காணப்படும் விண்மீன் திரள் மண்டலங்கள் யாவை? ஆண்ட்ரூ மேடா மற்றும் மேகல்லிக் கிளௌட்ஸ்.
- ஒளியின் திசைவேகம் யாது? வினாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர்.
- ஒலீயின் திசைவேகம் யாது? வினாடிக்கு 330 மீட்டர்.
- சூரிய குடும்பம் எப்போது உருவானது? சுமார் 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பு.
- சூரிய குடும்பத்தில் சூரியனின் மொத்த நிறை எவ்வளவு? 99.8 சதவீதம்.
- சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை யாது? 6000 °C.
- சூரிய ஒளி புவியை வந்தடைய ஆகும் காலம்? 8.3 நிமிடங்கள்.
- சூரியன் பூமியைவிட எத்தனை மடங்கு பெரியது? சுமார் 1.3 மில்லியன் மடங்கு .
- சூரியனை கிழக்கிலிருந்து மேற்காக சுற்றும் கோள்கள் யாவை? வெள்ளி மற்றும் யுரேனஸ்.
- வாள் விசும்பின் கோள்மீன் சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறு என்று கூறும் தமிழ் நூல் எது? சிறுபாணாற்றுப்படை.
- சூரியனுக்கு அருகில் உள்ள கோள்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? புவி நிகர் கோள்கள்.
- வெளிப்புற கோள்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? வளிமகோள்கள்.
- இரட்டைக் கோள்கள் என்று அழைக்கப்படுவது எது? பூமி மற்றும் வெள்ளி.
- வெள்ளி கோள் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள ஆகும் காலம் எவ்வளவு? 243 நாட்கள்.
- அன்பு மற்றும் அழகைக் குறிக்கும் ரோமானிய கடவுள் பெயர் என்ன? வீனஸ்.
- நிலவிற்கு அடுத்தபடியாக இரவில் பிரகாசமாக தெரியும் விண்வெள்ளி பொருள் எது? வெள்ளி கோள்.
- சூரிய குடும்பத்தில் ஐந்தாவது பெரிய கோள் எது? பூமி.
- புவியின் துருவ விட்டம் எவ்வளவு? 12,714 கிலோமீட்டர்.
- புவியின் நிலநடுக்கோட்டு விட்டம் எவ்வளவு? 12,756 கிலோமீட்டர்.
- புவி சூரியனை சுற்றி வரும் வேகம் எவ்வளவு? வினாடிக்கு 30 கிலோமீட்டர்.
- சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தொலைவு எவ்வளவு? 150 மில்லியன் கிலோமீட்டர்.
- சூரிய குடும்பத்தில் இரண்டாவது சிறிய கோள் எது? செவ்வாய்.
- ரோமானிய போர்க்கடவுள் இன் பெயர் என்ன? மார்ஸ்.
- எந்தக் கோளின் மேற்புறத்தில் இரும்பு ஆக்சைடு உள்ளது? செவ்வாய்.
- செவ்வாய் கோளின் துணைக்கோள்கள் யாவை? போபஸ் மற்றும் டிமஸ்.
- செந்நிறக் கோள் என்றழைக்கப்படும் கிரகம் எது? செவ்வாய்.
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக மங்கள்யான் என்ற விண்கலம் எப்பொழுது அனுப்பப்பட்டது? செப்டம்பர் 24 2014.
- செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்பிய நாடுகளின் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது? நான்காவது இடம்.
- ரோமானியர்களின் முதன்மை கடவுள் பெயர் என்ன? ஜூபிடர்.
- தன் அச்சில் மிகவும் வேகமாக சுழல கூடிய கிரகம் எது? வியாழன்.
- மிக அதிகமான துணைக்கோள்கள் கொண்டுள்ள கிரகம் எது? வியாழன்.
- வியாழன் கிரகத்திற்கு எத்தனை நிலவுகள் உள்ளன? 67.
- சனி கிரகத்தில் எத்தனை நிலவுகள் உள்ளன? 62 37. இறை நோஸ் கிரகத்தில் எத்தனை நிலவுகள் உள்ளன? 27.
- நெப்டியூன் கிரகத்தில் எத்தனை நிலவுகள் உள்ளன? 14.
- பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள ஆகும் காலம் எவ்வளவு? 23 மணி நேரம் 56 நிமிடங்கள் நான்கு வினாடிகள்.
- வெள்ளி கிரகம் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எவ்வளவு காலம் ஆகும்? 243 நாட்கள்.
- ரோமானிய வேளாண் கடவுளின் பெயரால் அழைக்கப்படும் கிரகம் எது? சனி கிரகம்.
- ரோமானிய முதன்மை கடவுளின் பெயரால் அழைக்கப்படும் கோள் எது? வியாழன்.
- ரோமானிய போர் கடவுளின் பெயரால் அழைக்கப்படும் கோள் எது? செவ்வாய் .
- ரோமானிய கடவுள்களின் தூதுவர் பெயரால் அழைக்கப்படும் கோள் எது? புதன்.
- சனிக் கோளின் மிகப்பெரிய துணைக்கோள் எது? டைட்டன்.
- சூரிய குடும்பத்தில் காணப்படும் துணைக் கோள்களில் நைட்ரஜன் மற்றும் மீத்தேன் ஆகிய வாயுக்களும் கொண்ட வளிமண்டலம் மற்றும் மேகங்கள். சூழ்ந்து காணப்படுகின்ற ஒரே துணைக்கோள் எது? டைட்டன்.
- நீரைவிட தன் ஈர்ப்பு திறன் குறைவாக உள்ள கோள் எது? சனிக்கோள்.
- உருளும் கோள் என்று அழைக்கப்படுவது எது? யுரேனஸ்.
- தொலைநோக்கியால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கோள் எது? யுரேனஸ்.
Tuesday, October 04, 2022
TNPSC G.K - 171 | பேரண்டம் மற்றும் சூரிய குடும்பம்.
Labels:
INDIAN_GEOGRAPHY,
தெரிந்துகொள்ளுங்கள்-1_1
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
ஜனவரி 22 : சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சிக்கு 15 லட்சம் வாசகர்கள் வருகைப் புரிந்தனர். இதில், ரூ.16 கோடிக்கும் மேல் புத்தகங்கள் விற்றுத...
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
TAMIL G.K 1261-1280 | TNPSC | TRB | TET | 94 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம் 1261. 9-ஆம் வக...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
TNPSC தேர்வுக்கு தயாராகும் அன்பர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். இந்த யூ ட்யூப் தளத்தில் வரும் ஆடியோவை ப்ளே செய்து கொண்டே கீழே உள்ள ப...
-
சிந்து சமவெளி நாகரிகம் /ஹரப்பா நாகரிகம் : பழைய கற்காலம்- கி.மு 10,000 முன்பு. புதிய கற்காலம் கி.மு 10000 - 4000. செம்பு கற்காலம் கி.ம...
-
மனிதனுக்கு முதன் முதலில் தெரிந்த உலோகம் எது? செம்பு தாமிரம் சிந்து சமவெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம் சிந்துவெளி பகுதியை அகழ்வாய்வு செய்த...
-
இளம் உயிரி கன்னி இனப்பெருக்கம் என்றால் என்ன? இளம் உயிரி கன்னி இனப்பெருக்கத்தில் இளவுயிரியே கன்னி இனப்பெருக்கத்தின் மூலம் புதிய தலைமுறை இள...
1 comment:
Guideflare
Post a Comment