Thursday, October 06, 2022

TNPSC G.K - 189 | பொதுத்தமிழ் - நற்றிணை.

நற்றிணையின் உருவம் :


  • திணை - அகத்திணை
  • பாவகை - ஆசிரியப்பா
  • பாடல்கள் - 400
  • புலவர்கள் - 175
  • அடி எல்லை - 9 - 12

தொகுப்பு :


  • தொகுத்தவர் - தெரியவில்லை
  • தொகுப்பிதவர் - பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி

வேறுபெயர்கள் :


  • நற்றிணை நானூறு
  • தூதின் வழிகாட்டி

நூல் பெயர்க்காரணம் :


  • நல் + திணை - நற்றிணை
  • திணை - நிலம், குடி, ஒழுக்கம்
  • நற்றிணை என்பதற்கு “நல்ல ஒழுக்கலாறு” என்று பொருள்.
  • திணை என்ற பெயர் பெற்ற ஒரே நூல் நற்றிணை மட்டுமே.

உரை, பதிப்பு :


  • நற்றிணைக்கு முதலில் உரை எழுதியவர் - பின்னந்தூர் நாராயணசாமி.
  • நற்றிணையை முதலில் பதிப்பித்தவர் - பின்னந்தூர் நாராயணசாமி.

கடவுள் வாழ்த்து :


  • இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடியவர் - பாரதம் பாடிய.
  • பெருந்தேவனார்.
  • இந்நூலின் கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள் - திருமால்.

நற்றிணையில் தொடரால் பெயர் பெற்றவர்கள்:


  • மலையனார்
  • தனிமகனார்
  • தும்பிசேர்கீரனார்
  • வண்ணப்புறச் சுந்தரத்தனார்
  • மடல் பாடிய மாதங்கீரனார்

நற்றிணை குறிப்பிடும் அரசர்கள்:


  • அதியமான் அஞ்சிக் காரி
  • அழிசி குட்டுவன்
  • ஆய் சேந்தன்
  • உதியன் நன்னன்
  • ஓரி பாண்டியன் நெடுஞ்செழியன்
  • கிடைக்காதவை:
  • 234ஆம் பாடல் கிடைக்கவில்லை.
  • “சான்றோர் வருந்திய வருத்தமும்” எனத் தொடங்கும் இறையனார்
  • களவியல் உரை மேற்கோள் பாடல் அது என்பர்.

பொதுவான குறிப்புகள்:


  • வௌவால்களும் கனவு காணும் என்ற அறிவியல் உண்மை
  • கூறப்பட்டுள்ளது.
  • பிற்காலத்தில் சிறந்து விளங்கிய தூது என்ற இலக்கியத்திற்கு
  • வழிகாட்டியாகக் குருகு, நாரை ஆகியவற்றை தூது விடும் பண்பு
  • இதில் கூறப்பட்டுள்ளது.எனவே நற்றிணையை “தூதின் வழிகாட்டி”
  • என்பர்.
  • உழவர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது சுறா மீன்
  • தாக்கியதால் ஏற்பட்ட காயம் நரம்பினால் தைத்ததை கூறுகிறது
  • எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக அமையபெற்றது நற்றிணை
  • நல் என்று அடைமொழி பெற்று போற்றப்படுவது நற்றிணை
  • ஓரறிவு உயிர்களையும் விரும்பும் உயரிய பண்பு, விருந்தோம்பல்,
  • அறவழியில் பொருளிட்டல் முதலியன பற்றிக் கூறுகிறது
  • நற்றினை பேரெல்லை 12 இருப்பினும் போதனார் இயற்றிய 110, 379
  • ம் பாடல்கள் 13அடி உடையது
  • வணிகர்களுக்கு வழங்கப்படும் பட்டம் காவிதி, எட்டி
  • குழுவாக வணிகம் செய்வோர்க்கு வணிக சாந்து என்று பெயர்

ஆசிரியர்களில் சிலர் :


  • நக்கண்ணையார் பெண்பாற் புலவர் பெருங்கோழி நாய்கன் மகள்
  • நக்கண்ணையார் கூறப்படுவார் உறையூர் வீரை வேண்மான் வெளியன்
  • தித்தன் என்னும் சோழ மன்னனின் மகன் போரவை கோப்பெருநற்கிள்ளி
  • மல்லன் என்பானை போரில் வென்றதை கூறுகிறது புறநானூற்றில் 83 84
  • 85 பாடல்களைப் பாடியுள்ளார் மிளைகிழான் நல்வேட்டனார்
  • மிளை என்னும் ஊரில் பிறந்தவராதலால் மிளைகிழான் நல்வேட்டனார்
  • இவர் நற்றிணையில் 4 பாடல்களும் குறுந்தொகையில் 1 பாடல்
  • இயற்றியுள்ளார்

முக்கிய அடிகள்:


  • விளையா டாயமோடு வெண்மணல் அழுத்தி
  • மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
  • நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்பப்
  • நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
  • முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பினும்
  • நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்
  • நீரின்றி அமையா உலகம்போலத்
  • தம்மின்றி அமையா நம்நயந்து அருளி – (கபிலர்)
  • இளமையிற் சிறந்த வளமையும் இல்லை
  • சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவில்
  • ஒருமுலை இழந்த திருமா உண்ணி
  • நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
  • வெல்வம் அன்று
  • இறவுப்புற தன்ன பிணர்படு தடவுமுதற்- நக்கண்ணயார்

No comments:

Popular Posts