Saturday, October 15, 2022

TNPSC G.K - 217 | பொதுத்தமிழ் - திணைமொழி ஐம்பது.

திணைமொழி ஐம்பது  திணைமொழி ஐம்பதின்  உருவம்:


  • ஆசிரியர் - கண்ணஞ் சேந்தனார்
  •  பாடல்கள் - 50(5*10-50)
  • திணை - ஐந்து அகத்திணைகளும்
  • திணை வைப்பு முறை - குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல்
  •  பாவகை   - வெண்பா
  • உரையாசிரியர் -நடராச பிள்ளை

பெயர்க்காரணம்:


  • திணைக்கு பத்து பாடல் வீதும் ஐம்பது பாடல்களைக் கொண்டதால் திணைமொழி ஐம்பது எனப் பெயர்பெற்றது.

பொதுவான குறிப்புகள்:


  • இசைக்கருவிகள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
  • இந்நூலில் 46 பாடல்கள் இன்னிசை வெண்பா ஆகும்.
  •  4 பாடல்கள் நேரிசை வெண்பா ஆகும்
  •  குறிஞ்சித் திணையை முதலாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
  • சேந்தனாரின் தந்தை சாத்தந்தையார் என்பார்
  • சோழன் போரவைக்கொப்பெருனற் கிள்ளியை பாடியவர் என உ.வே.சா கூறுகிறார்.

நூலின் சிறப்பு:


  •  நூலின் அனைத்துப் பாடல்களும் எதுகை, மோனை கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.
  •  நச்சினார்கினியரால் இந்நூலின் சில பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன

முக்கிய அடிகள்:


  • அரிபரந்த உண்கண்ணாள் ஆற்றாமை நும்மின்... தெரிவார்யார் தேடும் இடத்து துணிகடல் ... சேர்ப்பான் துறந்தான்கொல் தோழி!... தணியும் என்தோள் வளை ... 

No comments:

Popular Posts