Sunday, October 16, 2022

TNPSC G.K - 224 | பொதுத்தமிழ் - பழமொழி நானூறு.

பழமொழி நானூறின் உருவம் :


  • ஆசிரியர் = முன்றுறை அரையனார்.
  • பாடல்கள் = 400.
  • பாவகை = வெண்பா.

பெயர்க்காரணம் :


  • ஒரு கதையோ, வரலாற்று நிகழ்வோ கட்டி உரைக்கப்பட்டு பாடலின் இறுதியில் பழமொழி நீதி சுட்டப்படுவதாலும், நானூறு பாடல்களை உடையதாலும் பழமொழி நானூறு எனப் பெயர்பெற்றது.

வேறு பெயர்கள் :


  • பழமொழி.
  • சொல்வழக்கு.
  • முதுமொழி. 
  • உலக வசனம்.

ஆசிரியர் குறிப்பு :


  • முன்றுறை என்பது ஊர் பெயர் என்றும், அரையன் என்ற பட்டம் பெற்றவர் என்றும் கூறுவர் சிலர்.
  • சமயம் = சமண சமயம். 

நூல் பகுப்பு முறை :


  • இந்நூலின் பெரும் பிரிவுகள் = 5, இயல்கள் = 34.
  • பிரிவு 1 = கல்வி, ஒழுக்கம், புகழ் பற்றியது (9 இயல்கள்).
  • பிரிவு 2 = சான்றோர், நட்பின் இயல்பு பற்றியது (7  இயல்கள்).
  • பிரிவு 3 = முயற்சி, பொருள் பற்றியது (8  இயல்கள்).
  • பிரிவு 4 = அரசர், அமைச்சர், பாடல் பற்றியது (6 இயல்கள்).
  • பிரிவு 5 = இல்வாழ்க்கை, உறவினர், வீடுநெறி பற்றியது (4 இயல்கள்).

பொதுவான குறிப்புகள் :


  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் உள்ள முப்பெரும் அறநூல்கள் = திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு.
  • தொல்காப்பியர் பழமொழியை “முதுமொழி” என்கிறார்.
  • பழமொழி என்ற சொல் முதன் முதலில் அகநானூறில் வருகிறது.
  • இந்நூலை பதிப்பித்தவர் = செல்வகேசவராயசேகர முதலியார்
  • உரையாசிரியர் = திருநாராயண ஐயங்கார். 
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் மிகுதியாக வரலாற்று குறிப்புகளை கூறும் நூல் இதுவே.
  • பழமொழிக்கென அமைந்த முதல் தமிழ் நூல் .

இயல்கள் :


  • கல்வி,  கல்லாதார், அவையறிதல்,  அறிவுடைமை, ஒழுக்கம். 
  • இன்னா செய்யாமை,  வெகுளாமை, பெரியாரை பிழையாமை, புகழ்தலின் கூறுபாடு,  சான்றோர் இயல்பு.
  • சான்றோர் செய்கை, கீழ்மக்கள் இயல்பு, கீழ்மக்கள் செய்கை, நட்பின் இயல்பு, நட்பின் விலக்கு.
  • பிறர் இயல்பை குறிப்பால் உணர்தல், மன்னரை சேர்தொழுகல், பகைதிறம் தெரிதல்,படைவீரர், அமைச்சர்.
  • அரசியல், ஊழ், நன்றியில்  செல்வம், பொருளை பெறுதல், பொருள். 
  • பொருள், தெரிந்து தெளிதல், மறைபிறர் அறியாமை, கருமம் முடித்தல், முயற்சி.
  • இல்வாழ்க்கை, உறவினர், அறம் செய்தல், ஈகை, வீட்டுநெறி.

மேற்கோள் :


  • அணியெல்லாம் ஆடையின் பின்.
  • கடன் கொண்டும் செய்வார் கடன்.
  • கற்றலின் கேட்டலே நன்று.
  • குன்றின்மேல் இட்ட விளக்கு.
  • தனிமரம் காடாதல் இல்.
  • திங்களை நாய்க் குரைத் தற்று.
  • நுணலும் தன் வாயால் கெடும்.

No comments:

Popular Posts