Sunday, October 16, 2022

TNPSC G.K - 230 | பொதுத்தமிழ் - நான்மணிக்கடிகை.

நான்மணிக்கடிகையின் உருவம்:


  • ஆசிரியர் = விளம்பி நாகனார்
  • ஊர் =விளம்பி
  • பாடல்கள் = 2 + 104
  • பாவகை = வெண்பா

பெயர்க்காரணம்:


  • நான்கு + மணி + கடிகை = நான்மணிக்கடிகை
  • கடிகை = துண்டு, ஆபரணம், தோள்வளை. நான்கு மணிகள் பதிக்கப் பெற்ற  தோள்வளை போல் நான்கு நீதி மணிகளால் நிலைநாடாப்பட்ட பாடல்களைக் கொண்ட நூல்.
  • நான்மணிகள் முத்து பவளம் மரகதம்,மாணிக்கம்  

கடவுள் வாழ்த்து:


  • முதல் இரண்டு கடவுள் வாழ்த்து பாடலிலும் நான்கு கருத்துக்கள் உள்ளன.
  • கடவுள் வாழ்த்து திருமாலைப் பற்றியது.

பொதுவான குறிப்புகள்:


  • ஒவ்வொரு பாடலிலும் நாலு கருத்துக்கள் உள்ளன.
  • நூலில் வடமொழி கலப்பு அதிகம்.
  • இந்நூல் தொல்காப்பியர் கூறும் அம்மை என்ற வனப்பிற்கு உரியது.
  • ஜி.யு.போப் இந்நூலின் 7,100 ஆகிய இரு பாடல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார்.
  • இந்நூலின் மிகப் பிரபலமான அடி = “யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி”
  • கீழ்கணக்கு நூல்களில் 2 கடவுள் வாழ்த்து கொண்ட ஓரே நூல்
  • காலம்  நூற்றாண்டு  என டி.வி. சதாசிவ பண்டாரத்தார்  கருத்து. 
  • பழைய உரையாசிரியர்  பேராசிரியர்,  நச்சினார்கினியார் 
  • உரையாசிரியர்  பாலசுந்தரம் பிள்ளை 

முக்கிய அடிகள்:


  • யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி
  • இந்நிலத்தே மன்னுதல் வேண்டின் இசைநடுக
  • தன்னொடு செல்வது வேண்டின் அறம் செய்க
    வெல்வது வேண்டின் வெகுளிவிடல்
  • இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்
  • வளமில்லாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்
  • ஈன்றாளோடு எண்ணக் கடவுளும் இல்
  • கொண்டானிற் சிறந்த கேளிர் பிறர்இல்
  • மனைக்கு விளக்கம் மடவாள்
    மடவாளுக்கு விளக்கம் புதல்வர்
    புதல்வர்க்கு விளக்கம் கல்வி
    கல்விக்கு இலக்கம் புகழ்சால் உணர்வு

No comments:

Popular Posts