| அறிஞர் அண்ணாவை "தமிழ் நாடகக்கலைக்கு ஒரு பெர்னாட்ஷா" எனப் பாராட்டியவர் யார்? | கல்கி. |
| சிறுபஞ்சமூலம் என்னும் நூலின் ஆசிரியர் யார்? | காரியாசான். |
| சிறுபஞ்சமூலத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து மூலிகை பொருள்கள் எவை? | கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி. |
| பாஞ்சாலி சபதம் என்னும் நூலை இயற்றியவர்? | பாரதியார். |
| பாரதியின் முப்பெரும் படைப்புகள் எவை? | குயில்பாட்டு, கண்ணன்பாட்டு, பாஞ்சாலி சபதம். |
| பாஞ்சாலி சபதம் எத்தனை சருக்கங்களைக் கொண்டது? | 5. |
| பாட்டுக்கொரு புலவன், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா என்றெல்லாம் போற்றப்பட்டவர் யார்? | பாரதியார். |
| தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி என்றுப் போற்றப்படுபவர் யார்? | பாரதியார். |
| வியாசரின் பாரதத்தை தழுவி பாரதியார் இயற்றிய குறுங்காப்பியம் எது? | பாஞ்சாலி சபதம். |
| பாரதியார் பிறந்த ஊர் எது? | தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம். |
| "தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை" என்றுக் கூறியவர் யார்? | பாரதிதாசன். |
| மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா எனப் பெண்ணின் பெருமையைப் பாடியவர் யார்? | கவிமணி. |
| தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு என்று தமிழரின் சிறப்பைப் பாடியவர் யார்? | நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார். |
| கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்று கூறியவர் யார்? | நாமக்கல் கவிஞர். |
| இலக்கிய வரலாற்றில் "உரைநடைக் காலமாகத்” திகழ்வது எக்காலம்? | 20ம் நூற்றாண்டு. |
| "உவமை கவிஞர்” என்றழைக்கப்படுபவர் யார்? | சுரதா. |
| காந்தியக் கவிஞர் எனப் போற்றப்படுபவர் யார்? | நாமக்கல் கவிஞர். |
| கண்ணதாசனின் இயற்பெயர் யாது? | முத்தையா. |
| கண்ணதாசன் இயற்றிய எந்த புதினத்திற்கு சாகித்ய அகாதமியின் பரிசு கிடைத்தது? | சேரமான் காதலி. |
| நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை யார் கூற்று? | கண்ணதாசன். |
| செல்வத்துப் பயனே ஈதல் என்ற பாடல் வரி இடம் பெறும் நூல் எது? | புறநானூறு. |
| பத்துப்பாட்டில் உள்ள திருமுருகாற்றுப்படையையும், நெடுநல்வாடையையும் இயற்றியவர் யார்? | நக்கீரனார். |
| பண்டையத் தமிழ் மன்னர்களின் வீரம், கொடை, கல்வி முதலியவற்றை அறிய உதவும் நூல் எது? | புறநானூறு. |
| குறுந்தொகை என்ற நூலைத் தொகுத்தவர் யார்? | பூரிக்கோ. |
| குறுந்தொகைக்கு கடவுள் வாழ்த்துப் பாடியவர்? | பாரதம் பாடிய பெருந்தேவனார். |
| திருவிளையாடற் புராணத்தை இயற்றியவர் யார்? | பரஞ்சோதி முனிவர். |
| திருவிளையாடற் புராணத்தில் உள்ள காண்டங்கள் எத்தனை? | 3. |
| திருவிளையாடற் புராணத்தில் உள்ள படலங்கள் எத்தனை? | 64. |
| "தமிழ்த்தென்றல்” என்று அழைக்கப்பட்டவர் யார்? | திரு.வி.க. |
| எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதனை முழு மூச்சாகக் கொண்டவர் யார்? | திரு.வி.க. |
| நான் தனியாக வாழவில்லை, தமிழோடு வாழ்கிறேன் எனக் கூறியவர் யார்? | திரு.வி.க. |
| மேடைத்தமிழின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் யார்? | திரு.வி.க. |
| உமர்கய்யாம் பாடல்களை தமிழில் மொழிப்பெயர்த்தவர் யார்? | கவிமணி. |
| கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகள் யார்? | மணிமேகலை. |
| மணிமேகலையின் ஆசிரியர் யார்? | கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். |
| "இரட்டைக் காப்பியங்கள்" என்பவை எவை? | சிலப்பதிகாரம், மணிமேகலை. |
| மணிமேகலை எச்சமயத்தை சார்ந்த காப்பியம்? | பௌத்தம். |
| “பசிப்பிணி என்னும் பாவி” என்று கூறும் நூல் எது? | மணிமேகலை. |
| உடம்பார் அழியின் உயிரார் அழிவர்" என்று கூறியவர் யார்? | திருமூலர். |
| சுரதாவின் இயற்பெயர் யாது? | இராசகோபாலன். |
| யார் மீது கொண்ட பற்றின் காரணமாக சுரதா அவர்கள் தம் பெயரை சுப்புரத்தினதாசன் என மாற்றிக் கொண்டார்? | பாவேந்தர் பாரதிதாசன் மீது. |
| கர்மவீரர், கல்விக்கண் திறந்த முதல்வர் என்றெல்லாம் புகழப்பெறுபவர் யார்? | காமராசர். |
| காமராசர் முதலமைச்சராக பதவி வகித்த ஆண்டுகள்? | 1954-1963. |
| யாருடைய ஆட்சி காலத்தில் கட்டாய கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டது? | காமராசர். |
| உயர்நிலைப் பள்ளிவரை இலவசக் கல்வியைக் கொண்டுவந்தவர் யார்? | காமராசர். |
| தலைவர்களை உருவாக்குபவர் என அழைக்கப்பட்டவர் யார்? | காமராசர். |
| ஏட்டில் எழுதா கவிதைகள் என்று அழைக்கப்படுவது எதனை? | நாட்டுப்புறப்பாடல்கள். |
| தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் யார்? | நாமக்கல் கவிஞர். |
| ஆங்கிலேயரின் அடக்கு முறைக்கு எதிராக உரிமைக் குரல் எழுப்பிய பெண்களுள் குறிப்பிடத் தகுந்தவர் யார்? | தில்லையாடி வள்ளியம்மை. |
| மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரின் மனைவி பெயர் என்ன? | இராணி மங்கம்மாள். |
| தென்னாட்டைத் தன்னந்தனியே ஆண்ட பெண்ணரசி யார்? | இராணி மங்கம்மாள். |
| பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் யாது? | துரை மாணிக்கம். |
| பாவேந்தர் பாரதிதாசனின் தலைமாணாக்கர் யார்? | பெருஞ்சித்திரனார். |
0 Comments