ஒன்பதாம் வகுப்பு தமிழ் 100 வினா விடைகள் 9th Tamil Part 12


ஒன்பதாம் வகுப்பு தமிழ் 100 வினா விடைகள் 9th Tamil Part 12


தமிழ் இலக்கியம் மற்றும் புலவர்கள்
எண்வினாவிடை
1.ஏர் எழுபது, சிலை எழுபது, சரசுவதி அந்தாதி ஆகிய நூல்களை இயற்றியவர் யார்?கம்பர்
2.கம்பர் எந்த மன்னனின் அவைப்புலவராக விளங்கினார்?இரண்டாம் குலோத்துங்க சோழன்
3.கவிச்சக்கரவர்த்தி, கல்வியில் பெரியர் என்றெல்லாம் போற்றப்பட்டவர் யார்?கம்பர்
4.கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்கள் எத்தனை?ஆறு காண்டங்கள்
5.“உலகம் யாவையும் தாமுள வாக்கலும்” என்ற வாழ்த்துப் பாடல் இடம் பெறுள்ள காண்டம் எது?பாலகாண்டம்
6.நாயனார், தேவர், தெய்வப் புலவர், மாதானுபங்கி என்றெல்லாம் அழைக்கப்படுபவர் யார்?திருவள்ளுவர்
7.திருக்குறளில் அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் மொத்தம் எத்தனை?38
8.திருக்குறளில் பொருட்பாலில் உள்ள அதிகாரங்கள் மொத்தம் எத்தனை?70
9.திருக்குறளில் இன்பத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் மொத்தம் எத்தனை?25
10.திருக்குறள் எவ்வகை நூல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது?பதிணென்கீழ்க்கணக்கு
11.திருக்குறள் உரைகளில் யாருடைய உரை சிறந்ததாக கருதப்படுகிறது?பரிமேலழகர்
12.விக்டோரியா மகாராணியார் காலையில் கண்விழித்ததும் முதலில் படிக்கும் நூல் எது?திருக்குறள்
திராவிட மொழிகள்
எண்வினாவிடை
13.இந்திய மானிடவியல் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் எத்தனை மொழிகள் பேசப்படுவதாக தெரிவிக்கின்றது?325
14.நம் நாட்டில் பேசப்பட்டு வரும் மொழிகளின் எண்ணிக்கை எத்தனை?1300க்கு மேல்
15.தென் திராவிட மொழிகள் என்பவை எவை?தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு, தோடா, கோத்தா, கொரகா, இருளா
16.வடதிராவிட மொழிகள் என்பவை எவை?குரூக், மால்தோ, பிராகுய்
17.உலக நாகரிகங்கள் அனைத்திற்கும் தாயாகவும், வழிகாட்டியாகவும் விளங்குவது எந்நாகரிகம்?இந்திய நாகரிகம்
18.உலக நாடுகளின் பழமையான நாகரிகங்களுள் இந்திய நாகரிகமும் ஒன்று என்பது எந்த அகழ்வாய்க்குப் பிறகு நிறுவப்பட்டுள்ளது?மொகஞ்சதாரோ-ஹரப்பா
19.தமிழையும் அதன் கிளை மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளை ஒரு காலத்தில் எவ்வாறு அழைத்தனர்?தமிளியன் (அல்லது) தமுலிக்
20.தமிழ் திரமிள > திரவிட > திராவிட என உருவாயிற்று என்று கூறுபவர் யார்?ஈராஸ் பாதிரியார்
21.எண்பது விழுக்காடு அளவிற்குத் திராவிட மொழிக் கூறுகளைக் கொண்டுள்ள ஒரே திராவிடமொழி எது?தமிழ்
22.பன்னாட்டு மொழியாக விளங்கும் தன்மையை பெற்ற மொழியே எவ்வாறாக அழைக்கப்படும்?செவ்வியல் மொழி
23.திராவிடம் என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர் யார்?குமாரிலபட்டர்
நீதி நூல்கள் மற்றும் காப்பியங்கள் (சிறுபஞ்சமூலம் / பாஞ்சாலி சபதம்)
எண்வினாவிடை
24.நீதிபதியாக இருந்த தமிழ் நாடக ஆசிரியர் யார்?பம்மல் சம்பந்தனார்
25."கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்கும் கணமும் நான் சகித்திட மாட்டேன்" என்று கூறியவர் யார்?வள்ளலார்
26."பாரதியார் உலக கவி!" என்ற வரிகள் கொண்ட பாடலை எழுதியவர் யார்?பாரதிதாசன்
27."நிலமகளே வெல்வாள்!" என்ற தலைப்பில் பாடலை எழுதியவர் யார்?முடியரசன்
28.காரியாசான் யாருடைய மாணவர்?மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர்
29.காரியாசான் உடன் பயின்ற மாணவர் யார்?கணிமேதாவியர்
30.சிறுபஞ்சமூலத்தில் கடவுள் வாழ்த்துடன் சேர்த்து மொத்தம் எத்தனை வெண்பாக்கள் உள்ளது?97 வெண்பாக்கள்
31.சிறுபஞ்சமூலம் கண்ணுக்கு அழகு என எதை கூறுகிறது?இரக்கம் கொள்ளல்
32.சிறுபஞ்சமூலம் அரசனுக்கு அழகு என எதை கூறுகிறது?குடிமக்களை வருந்தாமல் காத்தல்
33.அத்தினாபுரத்தை ஆண்டு வந்த மன்னன் யார்?துரியோதனன்
34.பாரதியாரின் உரைநடைநூல்கள் எவை?ஞானரதம், சந்திரிகையின் கதை, தராசு
35.விதுரனைத் தூதுவிடல் என்ற பாடல் பாஞ்சாலி சபதத்தின் எந்த சருக்கத்தில் அமைந்துள்ளது?சூழ்ச்சிச் சருக்கம்
36.பாரதி படைப்பில் உரிமைக் காப்பியமாகத் திகழ்வது எது?பாஞ்சாலி சபதம்
இக்காலக் கவிதைகள் / கண்ணதாசன் கவியின்பம்
எண்வினாவிடை
37."பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள், தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்" என்று கூறியவர் யார்?பாரதியார்
38."எங்கள் பகைவர் எங்கோ இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டேன்" என்று பாடியவர் யார்?பாரதிதாசன்
39.மணிக்கொடி என்னும் இதழில் புதுக்கவிதை எழுதியவர்கள் யாவர்?ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், கு.ப.இராசகோபாலன், க.நா.சுப்பிரமணியன்
40.புதுக்கவிதையைப் பரவலாக்கப் பாடுபட்டவர்கள் யார்?கோவை வானம்பாடி குழுவினர்
41.மன்னர்களை மட்டுமே மகிழ்வித்து வந்த கவிதை மரபை மாற்றி மக்களை நோக்கி திருப்பிய பெருமைக்குரியவர் யார்?பாரதியார்
42."முல்லைக்கோர் காடுபோலும் முத்துக்கோர் கடலேபோலும்" என்ற பாடல் வரி மூலம் சுரதா யாரை உவமையாக பாராட்டியுள்ளார்?மறைமலையடிகள்
43.பாரதியாரின் வசன கவிதைகள் யாருடைய கவிதை சாயலில் அமைந்திருக்கும்?வால்ட்விட்மன்
44.கண்ணதாசனின் பெற்றோர் பெயர் யாது?சாத்தப்பன், விசாலாட்சி
45."பசுமை நிறைந்த நினைவுகளே! பாடித் திரிந்த பறவைகளே” என்று பசுமை மாறா நினைவுகளைப் பாடியவர் யார்?கண்ணதாசன்
46.ஆட்டனத்தி, ஆதிமந்தி, மாங்கனி, இயேசுகாவியம் போன்றவைகள் யாருடைய படைப்புகள்?கண்ணதாசன்
47.தென்றல், முல்லை, கண்ணதாசன், கடிதம், தமிழ்மலர் போன்ற இதழ்களை தொடங்கி அவற்றின் ஆசிரியராக இருந்தவர் யார்?கண்ணதாசன்
சங்க இலக்கியம் மற்றும் பக்தி இலக்கியம் (புறநானூறு / குறுந்தொகை / திருவிளையாடற் புராணம்)
எண்வினாவிடை
48."இருட்பகை இரவி இருளெனத் தம்மையும் கருதிக் காய்வனோ" என்ற பாடலின் ஆசிரியர் யார்?மனோன்மணியம் பெ.சுந்தரனார்
49."வாரிக் களத்தடிக்கும் வந்தபின்பு கோட்டைபுகும் போரில் சிறந்து பொலிவாகும்" என்று தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?காளமேகப்புலவர்
50.இறையனார் களவியல் உரைக்கு உரை கண்டவர் யார்?மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
51.புறநானூற்றின் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர் யார்?ஜி.யு.போப்
52."நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று" என்று தொடங்கும் குறுந்தொகை பாடலை இயற்றியவர் யார்?தேவகுலத்தார்
53.குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை மற்றும் அடிவரையறை யாது?401 பாடல்கள், 4-8 அடிவரையறை
54.சண்பகப் பாண்டியன் என்று அழைக்கப்பட்டவன் யார்?வங்கிய சூடாமணி பாண்டியன்
55.பரஞ்சோதியார் பிறந்த ஊர் எது?திருமறைக்காடு (வேதாரண்யம்)
56.பரஞ்சோதி முனிவரின் தந்தை பெயர் யாது?மீனாட்சி சுந்தர தேசிகர்
57.வேதாரண்ய புராணம் என்னும் மொழிப்பெயர்ப்பு நூலை இயற்றியவர் யார்?பரஞ்சோதி முனிவர்
58.கந்தபுராணத்தின் ஒரு பகுதியான ஆலாகிய மான்மியத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட நூல் எது?திருவிளையாடற்புராணம்
59.பொற்கிழி பெறச்சென்ற தருமியைத் தடுத்தவன் யார்?நக்கீரன்
பயணங்கள் / சுயசரிதைகள் / நாட்குறிப்பு (கடற்பயணம் / கெலன் கெல்லர் / ஆனந்தரங்கர் நாட்குறிப்பு)
எண்வினாவிடை
60.பழந்தமிழர்கள் பொருளீட்ட செல்வதை தொல்காப்பியர் எவ்வாறு குறிப்பிடுகிறார்?பொருள் வயிற் பிரிவு
61.கரும்பு யாருடைய காலத்தில் சீனாவிலிருந்து தமிழகத்திற்கு கொண்டு வந்து பயிரிடப்பட்டது?அதியமானின் முன்னோர் காலத்தில்
62."திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்று மொழிந்தவர் யார்?ஔவையார்
63.கொற்கைத் துறைமுகத்தில் "முத்துக்குளித்தல்" மிகச் சிறப்பாக நடந்ததைக் குறிப்பிடும் "வெனிசு" நாட்டறிஞர் யார்?மார்க்கோபோலோ
64.கெலன் கெல்லர் பிறந்த ஆண்டு எது?1880
65.யாருடைய உதவியால் கெலன் கெல்லர் பள்ளியில் சேர்ந்தார்?அலெக்சாண்டர் கிரகாம்பெல்
66.பார்வையற்றோருக்கான “தேசிய நூலகத்தை” உருவாக்கியவர் யார்?கெலன் கெல்லர்
67.திருக்குறளில் ஏழு என்னும் எண்ணுப்பெயர் எத்தனை குறட்பாக்களில் இடம்பெற்றுள்ளது?எட்டுக் குறட்பாக்களில்
68."ஏடாயிரங்கோடி எழுதாது தன்மனத்து விரகன்" என்று தொடங்கும் சீட்டுக்கவிப் பாடலை எழுதியவர் யார்?அந்தகக்கவி வீரராகவர்
69.அந்தகக்கவி வீரராகவர் வாழ்ந்த ஊர் எது?பொன்விளைந்த களத்தூர்
70.ஆனந்தரங்கர் பிறந்த ஊர் மற்றும் ஆண்டு எது?சென்னைப் பெரம்பூர், 1709
71.உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் முன்னோடி யார்?பெப்பிசு
72.ஆனந்தரங்கன் பிள்ளைத்தமிழ் என்னும் நூலை இயற்றியவர் யார்?அரிமதி தென்னகன்
சிற்றிலக்கியம் / கலிங்கத்துப்பரணி / திரு.வி.க / உமர்கய்யாம்
எண்வினாவிடை
73.சேரமன்னரின் அடையாளச் சின்னம் எது?வில்
74.சோழ மன்னரின் அடையாளச் சின்னம் எது?புலி
75.இசையாயிரம், உலா, மடல் ஆகிய நூல்களை இயற்றியவர் யார்?செயங்கொண்டார்
76.கலிங்கத்துப் பரணியில் உள்ள தாழிசைகள் மொத்தம் எத்தனை?599
77.கலிங்கத்துப் பரணியைத் "தென்தமிழ்த் தெய்வபரணி” எனப் புகழ்ந்தவர் யார்?ஒட்டக்கூத்தர்
78.திரு.வி.க. அவர்கள் பிறந்த ஊர் மற்றும் நாள் எது?சென்னைக்கு அருகில் துள்ளம், 26.8.1883
79.பெண்ணின் பெருமை, இமயமலை அல்லது தியானம் முதலிய நூல்களை இயற்றியவர் யார்?திரு.வி.க.
80.திரு.வி.க.வின் உரைநடையை மலை என்று புகழ்ந்தவர் யார்?தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
81.கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பிறந்த ஊர் எது?கன்னியாகுமரி மாவட்டம் தேரூர்
82.பாரசீகக் கவிஞர் உமர்கய்யாம் வாழ்ந்த நூற்றாண்டு எது?பதினோராம் நூற்றாண்டு
காப்பியங்கள் / மூலிகைகள் / காமராசர்
எண்வினாவிடை
83.மணிமேகலைக்கு மணிமேகலா தெய்வம் வழங்கிய மூன்று மந்திரங்கள் யாவை?பசியற்றிருக்கவும், விரும்பும் உருவம் எடுக்கவும், வான்வழிச் செல்லவும்
84.மணிமேகலை யாருடைய உதவியால் அமுதசுரபி பாத்திரத்தைப் பெற்றாள்?தீவதிலகையின் உதவியால்
85.மணிமேகலை முதன்முதலில் யாரிடம் பிச்சைப் பெற்றாள்?ஆதிரையிடம்
86.சாத்தனாரின் காலம் எந்நூற்றாண்டு?கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
87.மணிமேகலையில் உள்ள காதைகள் மொத்தம் எத்தனை?30
88.தூதுவளையை ஞானப்பச்சிலை என்று கூறியவர் யார்?வள்ளலார்
89.படுக்கைப் புண் குணமாகவும், சொறி சிரங்கை நீக்கவும் பயன்படும் மூலிகை எது?குப்பைமேனி
90.சுரதா தமிழக அரசின் எந்த விருதினைப் பெற்றுள்ளார்?பாவேந்தர் விருது
91.காமராசர் பிறந்த ஊர் எது?விருதுநகர்
92.காமராசர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு எது?1937
93.பள்ளி வேலை நாட்களை 180லிருந்து 200 ஆக உயர்த்தியவர் யார்?காமராசர்
மகளிர் பெருமை / பிற செய்திகள்
எண்வினாவிடை
94.கவிஞர் வெ.இராமலிங்கனார் பிறந்த ஊர் எது?நாமக்கல் மாவட்டம் மோகனூர்
95."நம்பிக்கைதான் அவரது ஆயுதம்” என்று தில்லையாடி வள்ளியம்மை குறித்து காந்தியடிகள் எந்த இதழில் எழுதி உள்ளார்?இந்தியன் ஒப்பீனியன்
96.கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலையின் பெயர் என்ன?மங்கம்மாள் சாலை
97.இரட்சணிய யாத்திரிகம் என்னும் நூலின் ஆசிரியர் யார்?எச்.ஏ.கிருட்டினனார்
98.கிறித்துவக் கம்பர் எனப் புகழப்பெற்றவர் யார்?எச்.ஏ.கிருட்டினனார்
99.பெருஞ்சித்திரனார் பிறந்த ஊர் எது?சேலம் மாவட்டம் சமுத்திரம்
100.மூன்றும் ஆறும், கோடையும் வசந்தமும், ஊசிகள் ஆகிய நூல்களை இயற்றியவர் யார்?மீரா

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement