ஒன்பதாம் வகுப்பு தமிழ் 100 வினா விடைகள் 9th Tamil Part 13


ஒன்பதாம் வகுப்பு தமிழ் 100 வினா விடைகள் 9th Tamil Part 13


வாழ்த்து, கம்பர், திருக்குறள்
எண்கேள்விவிடை
1.கம்பர் பிறந்த ஊர்: தேரழுந்தூர். இது எந்த மாவட்டத்தில் உள்ளது?நாகப்பட்டினம் மாவட்டம்
2.சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம் போன்ற நூல்களை இயற்றியவர் யார்?கம்பர்
3.வால்மீகி இராமாயணத்தைத் தழுவி தமிழில் இராமாயணத்தை எழுதியவர் யார்?கம்பர்
4.திருக்குறளில் உள்ள 'திரு' என்பதன் பொருள் யாது?செல்வம், சிறப்பு, அழகு, மேன்மை, தெய்வத்தன்மை
5.நற்குணங்கள் நம்மைவிட்டு நீங்காதிருக்க நாம் போற்றிக் கடைப்பிடிக்க வேண்டியது எது?பொறுமை
6.'வான்மறை' என்னும் சொல் குறிக்கும் இலக்கியம் எது?திருக்குறள்
7.திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மர் யாவர்?தருமர், தாமத்தர், பரிதி, திருமலையர், பரிப்பெருமாள், மணக்குடவர், நச்சர், பரிமேலழகர், மல்லர், காளிங்கர்
8.நன்னூலின் ஆசிரியர் யார்?பவணந்தி முனிவர்
9.நன்னூல் எந்த நூலின் வழிநூல் ஆகும்?தொல்காப்பியத்தின் வழிநூல்
திராவிட மொழிகள்
எண்கேள்விவிடை
1.நடுத்திராவிட மொழிகள் எவை?தெலுங்கு, கோண்டி, கோயா, கூயி, கூவி, கோலாமி, பர்ஜி, கதபா, கோண்டா, நாயக்கி, பெங்கோ, ஜதபு
2.இந்தியா முழுவதும் பரந்து விரிந்திருந்த நாகரிகம் எது?திராவிட நாகரிகம்
3.திராவிடர் பேசிய மொழியே எது?திராவிட மொழி
4.பிறமொழிகள் தோன்றி வளர அடிப்படையான மொழி எது?மூலமொழி
5.ஒரு மூலமொழியிலிருந்து தோன்றி வளரும் மொழியை எவ்வாறு அழைப்பர்?கிளைமொழி
6.'திராவிடம்' என்னும் சொல் பெயரடையாக வந்துள்ள சொற்றொடர்களைக் (திராவிட மொழிகள், திராவிட இனம், திராவிட நாகரிகம்) குறிப்பிட்டவர் யார்?கால்டுவெல்
மதிப்புக்கல்வி, சிறுபஞ்சமூலம், பாஞ்சாலி சபதம்
எண்கேள்விவிடை
1.“இரவின் அறுவடை” நூலின் ஆசிரியர் யார்?புவியரசு
2.புகழ் பெற்ற எழுத்தாளரான ஜார்ஜ் பெர்னாட்ஷா எந்த நாட்டைச் சார்ந்தவர்?அயர்லாந்து
3."கண்வனப்புக் கண்ணோட்டம் கால்வனப்புச் செல்லாமை" என்ற பாடல் வரி இடம்பெறும் நூல் எது?சிறுபஞ்சமூலம்
4.காரியாசன் சார்ந்த சமயம் எது?சமணம்
5.சிறுபஞ்சமூலம் எவ்வகை நூல்களுள் ஒன்று?பதினெண் கீழ்க்கணக்கு
6.பிறரிடம் இரந்து செல்லாமை எதற்கு அழகு?காலுக்கு
7.ஆராய்ச்சிக்கு அழகு எது என சிறுபஞ்சமூலம் கூறுகிறது?முடிவை துணிந்துரைத்தல்
8.இசைக்கு அழகு எது?கேட்போர் நன்றெனப் புகழ்தல்
9.பெரும்பான்மை பொது அறக்கருத்துகளையும் சிறுபான்மை சமய அறக்கருத்துகளையும் கொண்டுள்ள நூல் எது?சிறுபஞ்சமூலம்
10.இந்திர மாநகரை ஆண்டுவந்தவர்கள் யார்?பாண்டவர்கள்
11.துரியோதனின் மாமன் பெயர் யாது?சகுனி
12.துரியோதனின் தந்தை பெயர் யாது?திருதராட்டிரன்
13.திருதராட்டிரனின் தம்பி பெயர் யாது?விதுரன்
14.திருதராட்டினன் அமைத்துள்ள மண்டபத்தை காண பாண்டவர்களை அழைக்கத் தூது சென்றவர் யார்?விதுரன்
15.பாரதியாரின் துணைவியார் பெயர் யாது?செல்லம்மாள்
16.பாஞ்சாலி சபதம் எத்தனை பாகங்களைக் கொண்டது?இரண்டு பாகம்
17.பாஞ்சாலி சபதத்தில் உள்ள பாடல்கள் மொத்தம் எத்தனை?412
18.பாஞ்சாலி சபதத்தில் உள்ள சருக்கங்களின் பெயர்கள் யாவை?சூழ்ச்சிச் சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச்சருக்கம்
19.திருதராட்டிரனின் புதல்வர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்?கௌரவர்கள்
20.பாரதியாரின் பெற்றோர் யாவர்?சின்னசாமி இலக்குமி அம்மையார்
இக்காலக் கவிதைகள், கண்ணதாசன் கவியின்பம்
எண்கேள்விவிடை
1."இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்" என்று பாடியவர் யார்?பாரதியார்
2."எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்ற இந்தவையம்" என்று பாடியவர் யார்?பாரதிதாசன்
3."சாலைகளில் பல தொழில்கள் பெருக வேண்டும், சபைகளிலே தமிழுெந்து முழங்க வேண்டும்" எனப் பாடியவர் யார்?கவிமணி
4."பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும், பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும்" என்று பாடியவர் யார்?நாமக்கல் கவிஞர்
5."ஆங்கிலமோ பிறமொழியோ பயின்றுவிட்டால் அன்னைமொழி பேசுதற்கு நாணுகின்ற" என்று பாடியவர் யார்?முடியரசன்
6.'எழுத்து' என்னும் இதழில் புதுக்கவிதை எழுதியவர்கள் யாவர்?எஸ்.வைத்தீஸ்வரன், தருமு சிவராமு, மணி, சி.சு.செல்லப்பா
7."ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் எல்லாமே எரிகின்றன" என்ற புதுக்கவிதையின் ஆசிரியர் யார்?வல்லிக்கண்ணன்
8."உச்சிமலையிலே ஊறும் அருவிகள் ஒரே வழியில் கலக்குது ஒற்றுமையில்லா மனிதகுலம் உயர்வு தாழ்வு வளர்க்குது" என்று பாடியவர் யார்?பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்
9.இருபதாம் நூற்றாண்டின் கவிதை வளர்ச்சியில் யாருடைய கவிதைகள் மறுமலர்ச்சிக்கு வித்தாக அமைந்தன?பாரதியின் கவிதைகள்
10.இந்திய ஒருமைப்பாட்டின் உயர்வினை விளக்கும் பாரதியின் கவிதை வரி எது?முப்பதுகோடி முகமுடையாள்
11.கற்றோரைக் களிப்பில் ஆழ்த்துவன யாருடைய கவிதைகள்?கவிமணியின் கவிதைகள்
12."கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழின் சொல்லை மணியாகத் தொடுப்பவனும் நீதானோ” எனத் தாலாட்டுப் பாடியவர் யார்?கவிமணி
13.நாமக்கல்லாரின் கவிதைகளில் எச்சிந்தனை மிளிர்கின்றன?காந்திய சிந்தனை
14.பாரதிதாசனைத் தொடர்ந்து இயற்கையின் அழகை எழிலுறப் படம்பித்துக் காட்டுவதில் யாருடைய கவிதைகள் சிறந்து விளங்குகின்றன?வாணிதாசன்
15."செந்தமிழ் சொல் லெடுத்து இசை தொடுப்பேன் வண்ணச் சந்தத்திலே கவிதைச் சரம் தொடுப்பேன்" என்று பாடியவர் யார்?கண்ணதாசன்
16."வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும்" என்ற பாடலின் மூலம் வாழ்வியல் சிந்தனையை கூறுபவர் யார்?கண்ணதாசன்
17."அழகுத்தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ?" என்று குழந்தையின் நடையினை வர்ணித்தவர் யார்?கண்ணதாசன்
18."எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்று பாடியவர் யார்?கண்ணதாசன்
19."உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்" என்ற பாடலைப் பாடியவர் யார்?கண்ணதாசன்
20.கண்ணதாசன் பிறந்த சிறுகூடல்பட்டி எந்த மாவட்டத்தில் உள்ளது?சிவகங்கை மாவட்டம்
21.ஆயிரம் தீவு அங்கயற்கண்ணி, வேலங்குடித் திருவிழா போன்ற புதினங்களைப் படைத்தவர் யார்?கண்ணதாசன்
வகுப்பறை திறன்கள், புறநானூறு, குறுந்தொகை, திருவிளையாடற் புராணம்
எண்கேள்விவிடை
1.வாயசம் என்பதன் பொருள் யாது?காகம்
2.சிறை என்பதன் பொருள் யாது?இறக்கை
3.புறப்பொருள் பற்றி நானூறு பாடல்களைக் கொண்ட நூல் எது?புறநானூறு
4."கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே" என்ற பாடல் வரி இடம்பெறும் நூல் எது?குறுந்தொகை
5.குறைந்த அடியளவால் பாடற்பெற்ற பாடல்களின் தொகுப்பு நூல் எது?குறுந்தொகை
6.வங்கிய சேகரபாண்டியனின் மகன் பெயர் யாது?வங்கிய சூடாமணி பாண்டியன்
7.இறைவனுக்கு சண்பகமாலை சாத்தி வழிபடுவதற்காக சண்பக நந்தவனத்தை ஏற்படுத்தியவன் யார்?வங்கிய சூடாமணி பாண்டியன்
8.பாண்டியரின் குலத்தெய்வம் எது?சொக்கநாதன் (அ) சுந்தர பாண்டியன்
9.தென்னவன் என்று அழைக்கப்படுபவர் யார்?பாண்டியன்
10.மீன்கொடியை உடையவன் யார்?பாண்டியன்
11.பரஞ்சோதியார் பிறந்த திருமறைக்காடு என்னும் ஊர் எந்த மாவட்டத்தில் உள்ளது?நாகை மாவட்டம்
12.சிவபெருமான் திருக்கோவிலின் எதிரே உள்ள அலுகால் பீடத்தில் அரங்கேற்றப்பட்ட நூல் எது?திருவிளையாடற்புராணம்
13.திருவிளையாடற் புராணத்தைப் போற்றி கலி வெண்பா, மதுரைப் பதிற்றுப் பத்தந்தாதி ஆகிய நூல்களை இயற்றியவர் யார்?பரஞ்சோதி முனிவர்
14.திருவிளையாடற் புராணத்தின் மூன்று காண்டங்களின் பெயர்கள் யாவை?மதுரைக்காண்டம், கூடற்காண்டம், திருவாலவாய்க்காண்டம்
15.திருவிளையாடற் புராணத்தில் உள்ள பாடல்கள் மொத்தம் எத்தனை?3363
16.திருவிளையாடற் புராணத்திற்கு உரை எழுதியவர் யார்?பண்டிதமணி ந.மு.வேங்கடசாமி
17."கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி" என்று தொடங்கும் பாடல் இடம் பெறும் நூல் எது?குறுந்தொகை
18.உடல் முழுவதும் கண்களையுடையவன் யார்?இந்திரன்
கடற்பயணம், ஹெலன் கெல்லர், செவிச்சொல், சீட்டுக்கவி, ஆனந்தரங்கர் நாட்குறிப்பு
எண்கேள்விவிடை
1.பொருள் வயிற்பிரிவு எத்தனை வகைப்படும்?தரைவழிப் பிரிதல், நீர்வழிப் பிரிதல் என இருவகைப்படும்
2.தமிழர்களின் எந்த பொருள்கள் மேற்காசிய நாடுகளில் விற்கப்பட்டன?ஏலம், இலவங்கம், இஞ்சி, மிளகு
3.கப்பல் கட்டும் தொழிலாளர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?கலம்செய் கம்மியர்
4.ஆழி, ஆர்கலி, முந்நீர், பௌவம், பரவை எதனைக் குறிக்கும் பெயர்கள்?கடலைக் குறிக்கும் பெயர்கள்
5.கொற்கை முத்தினை சிறப்பித்துக் கூறும் பத்துப்பாட்டு நூல்கள் எவை?மதுரைக்காஞ்சி, சிறுபாணாற்றுப்படை
6.சீனாவிலிருந்து தமிழகத்திற்கு இறக்குமதியான பொருள்கள் யாவை?சீனத்துப்பட்டும் சர்க்கரையும்
7."மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்" என்பது யாருடைய கூற்று?பாரதி
8.இத்தாலி நாட்டு பாதிரியாரான வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன?கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி
9.வீரமாமுனிவருக்கு மதுரைச் சங்கத்தார் அளித்த பட்டப்பெயர் என்ன?தைரியநாதர்
10.மருதநில அரசனது கோட்டையைப் புறநானூறு எதற்கு ஒப்பிட்டுக் கூறுகிறது?நடுக்கடலில் செல்லும் கப்பலுக்கு
11.புகார் நகரத்தில் நிறுத்தப்பட்ட நாவாய்களின் கொடி அசைவதைப் பற்றிக் குறிப்பிடும் நூல் எது?பட்டினப்பாலை
12.காற்றின் துணைகொண்டு இயங்கிய பெரிய நாவாய்க்கு வழங்கப்பட்ட பெயர் என்ன?பாய்மரக்கப்பல்
13.பாஸ்டன் நகரில் உள்ள காதுகேளாதோருக்கான பள்ளி எது?ஹோரஸ்மான்
14.அன்னிசல்லிவான் இறந்தபிறகு ஹெலன் கெல்லருக்கு மொழிப் பெயர்ப்பாளராக பணியாற்றியவர் யார்?பாலிதாம்சன்
15.ஹெலன் கெல்லர் பயின்ற கல்லூரி எது?கேம்பிரிட்ஜ் ரெட்கிளிப்
16.வாஷிங்டன் நகரின் புகழ்பெற்ற பெண்மணி யார்?ஹெலன் கெல்லர்
17.திருக்குறளில் எத்தனை அதிகாரங்களின் பெயர் 'உடைமை' என்னும் சொல்லில் அமைந்துள்ளது?பத்து அதிகாரம்
18.கந்தருவம், கோடை, மா, கிள்ளை போன்றவைகள் எதனைக் குறிக்கும் பெயர்கள்?குதிரையைக் குறிக்கும் பெயர்கள்
19.அந்தகக்கவி வீரராகவரின் தந்தை பெயர் யாது?வடுகநாதர்
20.இலங்கை மன்னன் பரராசசேகரபாடிடம் வீரராகவர் பெற்ற பரிசு யாது?ஒரு யானை, பொற்பந்தம், ஓர் ஊர்
21.திருக்கழுக்குன்ற மாலை, சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களை இயற்றியவர் யார்?அந்தகக்கவி வீரராகவர்
22.தனிப்பாடல் திரட்டு எனும் நூலில் உள்ள பாடல்கள் மொத்தம் எத்தனை?1113
23.ஆனந்தரங்கரின் தந்தை பெயர் யாது?திருவேங்கடம்
24.ஆனந்தரங்கருக்கு 'மன்சுபேதார்' என்னும் பட்டத்தை வழங்கியவர்கள் யார்?முசபர்சங்
25.முசபர்சங் ஆனந்தரங்கருக்கு வழங்கிய குதிரைகள் எத்தனை?மூவாயிரம்
26.ஆனந்தரங்கர் கோவை என்னும் நூலை இயற்றியவர் யார்?தியாகராச தேசிகர்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement