ஒன்பதாம் வகுப்பு தமிழ் 100 வினா விடைகள் 9th Tamil Part 14


ஒன்பதாம் வகுப்பு தமிழ் 100 வினா விடைகள் 9th Tamil Part 14


தலைப்பு வாரியான வினாக்கள் மற்றும் விடைகள்

வாழ்த்து / கம்பர் / திருக்குறள் / நன்னூல்
  1. நன்னூல் கொண்டுள்ள அதிகாரங்கள் எத்தனை?
    விடை: இரண்டு (எழுத்து, சொல்).
  2. தொல்காப்பியத்தின் வழிநூல் எனக் கருதப்படுவது எது?
    விடை: அகத்தியம்.
  3. முன்னூல் தொல்காப்பியம் எனில், பின்னூல் எது?
    விடை: நன்னூல்.
  4. அறம், பொருள், இன்பம், வீடு அடைதலைப் பயனாய் கூறுவது எந்நூல்?
    விடை: நன்னூல்.
  5. திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மரின் பெயர்கள் யாவை?
    விடை: தருமர், தாமத்தர், பரிதி, திருமலையர், பரிப்பெருமாள், மணக்குடவர், நச்சர், பரிமேலழகர், மல்லர், காளிங்கர்.
திராவிட மொழிகள்
  1. நடுத்திராவிட மொழிகள் எனப்படுபவை எவை?
    விடை: தெலுங்கு, கோண்டி, கோயா, கூயி, கூவி, கோலாமி, பர்ஜி, கதபா, கோண்டா, நாயக்கி, பெங்கோ, ஜதபு.
  2. இந்தியா முழுவதும் பரந்து விரிந்திருந்த நாகரிகம் எது?
    விடை: திராவிட நாகரிகம்.
  3. திராவிடர்கள் பேசிய மொழியே எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    விடை: திராவிட மொழியாகும்.
  4. பிறமொழிகள் தோன்றி வளர அடிப்படையாக அமைந்த மொழி எது?
    விடை: மூலமொழி.
  5. ஒரு மூலமொழியிலிருந்து தோன்றி வளரும் மொழியை எவ்வாறு அழைப்பர்?
    விடை: கிளைமொழி.
  6. "திராவிட மொழிகள், திராவிட இனம், திராவிட நாகரிகம் முதலிய சொற்றொடர்களில் திராவிடம் எனும் சொல் பெயரடையாக வந்துள்ளது" என்று கூறியவர் யார்?
    விடை: கால்டுவெல்.
மதிப்புக்கல்வி / சிறுபஞ்சமூலம் / பாஞ்சாலி சபதம்
  1. “இரவின் அறுவடை” நூலின் ஆசிரியர் யார்?
    விடை: புவியரசு.
  2. புகழ் பெற்ற எழுத்தாளரான ஜார்ஜ் பெர்னாட்ஷா எந்த நாட்டைச் சார்ந்தவர்?
    விடை: அயர்லாந்து.
  3. காரியாசன் எந்தச் சமயத்தைச் சார்ந்தவர்?
    விடை: சமணம்.
  4. சிறுபஞ்சமூலம் எவ்வகை நூல்களுள் ஒன்று?
    விடை: பதினெண் கீழ்க்கணக்கு.
  5. பிறரிடம் இரந்து செல்லாமை எதற்கு அழகு?
    விடை: காலுக்கு.
  6. ஆராய்ச்சிக்கு அழகு எது என சிறுபஞ்சமூலம் கூறுகிறது?
    விடை: முடிவை துணிந்துரைத்தல்.
  7. இசைக்கு அழகு எது?
    விடை: கேட்போர் நன்றெனப் புகழ்தல்.
  8. பெரும்பான்மை பொது அறக்கருத்துகளையும் சிறுபான்மை சமய அறக்கருத்துகளையும் கொண்டுள்ள நூல் எது?
    விடை: சிறுபஞ்சமூலம்.
  9. இந்திர மாநகரை ஆண்டுவந்தவர்கள் யாவர்?
    விடை: பாண்டவர்கள்.
  10. துரியோதனின் மாமன் பெயர் யாது?
    விடை: சகுனி.
  11. துரியோதனின் தந்தை பெயர் யாது?
    விடை: திருதராட்டிரன்.
  12. திருதராட்டிரனின் தம்பி பெயர் யாது?
    விடை: விதுரன்.
  13. திருதராட்டினன் அமைத்துள்ள மண்டபத்தைக் காண பாண்டவர்களை அழைக்கத் தூது சென்றவர் யார்?
    விடை: விதுரன்.
  14. பாரதியாரின் துணைவியார் பெயர் யாது?
    விடை: செல்லம்மாள்.
  15. பாஞ்சாலி சபதம் எத்தனை பாகங்களைக் கொண்டது?
    விடை: இரண்டு பாகம்.
  16. பாஞ்சாலி சபதத்தில் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?
    விடை: 412.
  17. பாஞ்சாலி சபதத்தில் உள்ள சருக்கங்களின் பெயர்கள் யாவை?
    விடை: சூழ்ச்சிச் சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச்சருக்கம்.
  18. திருதராட்டிரனின் புதல்வர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்?
    விடை: கௌரவர்கள்.
  19. பாரதியாரின் பெற்றோர் யாவர்?
    விடை: சின்னசாமி இலக்குமி அம்மையார்.
இக்காலக் கவிதைகள் / கண்ணதாசன் கவியின்பம்
  1. பாரதியார் வாழ்ந்த காலம் யாது?
    விடை: 11.12.1882 - 11.09.1921.
  2. "இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்" என்று பாடியவர் யார்?
    விடை: பாரதியார்.
  3. "எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்ற இந்தவையம்" என்று பாடியவர் யார்?
    விடை: பாரதிதாசன்.
  4. "சாலைகளில் பல தொழில்கள் பெருக வேண்டும், சபைகளிலே தமிழுெந்து முழங்க வேண்டும்" எனப் பாடியவர் யார்?
    விடை: கவிமணி.
  5. "பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும், பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும்" என்று பாடியவர் யார்?
    விடை: நாமக்கல் கவிஞர்.
  6. "ஆங்கிலமோ பிறமொழியோ பயின்றுவிட்டால் அன்னைமொழி பேசுதற்கு நாணுகின்ற" என்று பாடியவர் யார்?
    விடை: முடியரசன்.
  7. 'எழுத்து' என்னும் இதழில் புதுக்கவிதை எழுதியவர்கள் யாவர்?
    விடை: எஸ்.வைத்தீஸ்வரன், தருமு சிவராமு, மணி, சி.சு.செல்லப்பா.
  8. "ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் எல்லாமே எரிகின்றன" என்ற புதுக்கவிதையின் ஆசிரியர் யார்?
    விடை: வல்லிக்கண்ணன்.
  9. "உச்சிமலையிலே ஊறும் அருவிகள் ஒரே வழியில் கலக்குது ஒற்றுமையில்லா மனிதகுலம் உயர்வு தாழ்வு வளர்க்குது" என்று பாடியவர் யார்?
    விடை: பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்.
  10. இருபதாம் நூற்றாண்டின் கவிதை வளர்ச்சியில் யாருடைய கவிதைகள் மறுமலர்ச்சிக்கு வித்தாக அமைந்தன?
    விடை: பாரதியின் கவிதைகள்.
  11. இந்திய ஒருமைப்பாட்டின் உயர்வினை விளக்கும் பாரதியின் கவிதை வரி எது?
    விடை: முப்பதுகோடி முகமுடையாள்.
  12. கற்றோரைக் களிப்பில் ஆழ்த்துவன யாருடைய கவிதைகள்?
    விடை: கவிமணியின் கவிதைகள்.
  13. நாமக்கல்லாரின் கவிதைகளில் எச்சிந்தனை மிளிர்கின்றன?
    விடை: காந்திய சிந்தனை.
  14. பாரதிதாசனைத் தொடர்ந்து இயற்கையின் அழகை எழிலுறப் படம்பித்துக் காட்டுவதில் யாருடைய கவிதைகள் சிறந்து விளங்குகின்றன?
    விடை: வாணிதாசன்.
  15. "செந்தமிழ் சொல் லெடுத்து இசை தொடுப்பேன் வண்ணச் சந்தத்திலே கவிதைச் சரம் தொடுப்பேன்" என்று பாடியவர் யார்?
    விடை: கண்ணதாசன்.
  16. "வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும்" என்ற பாடலின் மூலம் வாழ்வியல் சிந்தனையை கூறுபவர் யார்?
    விடை: கண்ணதாசன்.
  17. "அழகுத்தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ?" என்று குழந்தையின் நடையினை வர்ணித்தவர் யார்?
    விடை: கண்ணதாசன்.
  18. "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்று பாடியவர் யார்?
    விடை: கண்ணதாசன்.
  19. "உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்" என்ற பாடலைப் பாடியவர் யார்?
    விடை: கண்ணதாசன்.
  20. கண்ணதாசன் பிறந்த சிறுகூடல்பட்டி என்னும் ஊர் எந்த மாவட்டத்தில் உள்ளது?
    விடை: சிவகங்கை மாவட்டம்.
  21. ஆயிரம் தீவு அங்கயற்கண்ணி, வேலங்குடித் திருவிழா போன்ற புதினங்களைப் படைத்தவர் யார்?
    விடை: கண்ணதாசன்.
வகுப்பறை திறன்கள் / புறநானூறு / குறுந்தொகை / திருவிளையாடற் புராணம்
  1. வாயசம் என்பதன் பொருள் யாது?
    விடை: காகம்.
  2. சிறை என்பதன் பொருள் யாது?
    விடை: இறக்கை.
  3. புறப்பொருள் பற்றி நானூறு பாடல்களைக் கொண்ட நூல் எது?
    விடை: புறநானூறு.
  4. "கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே" என்ற பாடல் வரி இடம்பெறும் நூல் எது?
    விடை: குறுந்தொகை.
  5. குறைந்த அடியளவால் பாடற்பெற்ற பாடல்களின் தொகுப்பு நூல் எது?
    விடை: குறுந்தொகை.
  6. வங்கிய சேகரபாண்டியனின் மகன் பெயர் யாது?
    விடை: வங்கிய சூடாமணி பாண்டியன்.
  7. இறைவனுக்கு சண்பகமாலை சாத்தி வழிபடுவதற்காக சண்பக நந்தவனத்தை ஏற்படுத்தியவன் யார்?
    விடை: வங்கிய சூடாமணி பாண்டியன்.
  8. பாண்டியரின் குலத்தெய்வம் எது?
    விடை: சொக்கநாதன் (அ) சுந்தர பாண்டியன்.
  9. தென்னவன் என்று அழைக்கப்படுபவர் யார்?
    விடை: பாண்டியன்.
  10. மீன்கொடியை உடையவன் யார்?
    விடை: பாண்டியன்.
  11. பரஞ்சோதியார் பிறந்த திருமறைக்காடு என்னும் ஊர் எந்த மாவட்டத்தில் உள்ளது?
    விடை: நாகை மாவட்டத்தில்.
  12. சிவபெருமான் திருக்கோவிலின் எதிரே உள்ள அலுகால் பீடத்தில் அரங்கேற்றப்பட்ட நூல் எது?
    விடை: திருவிளையாடற்புராணம்.
  13. திருவிளையாடற் புராணத்தைப் போற்றி கலி வெண்பா, மதுரைப் பதிற்றுப் பத்தந்தாதி ஆகிய நூல்களை இயற்றியவர் யார்?
    விடை: பரஞ்சோதி முனிவர்.
  14. திருவிளையாடற் புராணத்தின் மூன்று காண்டங்களின் பெயர்கள் யாவை?
    விடை: மதுரைக்காண்டம், கூடற்காண்டம், திருவாலவாய்க்காண்டம்.
  15. திருவிளையாடற் புராணத்தில் உள்ள மொத்த பாடல்கள் எத்தனை?
    விடை: 3363.
  16. திருவிளையாடற் புராணத்திற்கு உரை எழுதியவர் யார்?
    விடை: பண்டிதமணி ந.மு.வேங்கடசாமி.
  17. உடல் முழுவதும் கண்களையுடையவன் யார்?
    விடை: இந்திரன்.
கடற்பயணம் / கெலன் கெல்லர் / செவிச்சொல் / சீட்டுக்கவி / ஆனந்தரங்கர் நாட்குறிப்பு
  1. பழந்தமிழரின் பொருளீட்டச் செல்வதை தொல்காப்பியர் குறிக்கும் 'காலில் பிரிவு' என்பதன் பொருள் யாது?
    விடை: தரைவழிப் பிரிதல்.
  2. தொல்காப்பியர் குறிக்கும் 'கலத்தில் பிரிவு' என்பதன் பொருள் யாது?
    விடை: நீர்வழிப் பிரிதல்.
  3. தமிழ்நாட்டில் விற்கப்பட்ட பிற நாட்டுப் பொருள்கள் எவை?
    விடை: முத்து, பவளம், ஆரம், அகில், வெண்துகில், சங்கு.
  4. "விளைந்து முதிர்ந்த விழுமுத்து" என கூறும் நூல் எது?
    விடை: மதுரைக்காஞ்சி.
  5. தமிழ் சொல்லான 'அரிசி' என்பதற்கு கிரேக்கத்தில் வழங்கும் பெயர் யாது?
    விடை: ஒரைஸா.
  6. தமிழ் சொல்லான 'கருவூர்' என்பதற்கு கிரேக்கத்தில் வழங்கும் பெயர் யாது?
    விடை: கரோரா.
  7. தமிழ் சொல்லான 'காவிரி' என்பதற்கு கிரேக்கத்தில் வழங்கும் பெயர் யாது?
    விடை: கபிரில்.
  8. கரிகாலனின் முன்னோர் காற்றின் போக்கினை அறிந்து கலம் செலுத்தினர் என்பதைக் கூறும் நூல் எது?
    விடை: புறநானூறு.
  9. பொன்னைச் சுமந்து வந்த யவனர்கள், அதற்கு ஈடாக மிளகைப் பெற்றுச் சென்ற செய்தியைக் கூறும் நூல் எது?
    விடை: அகநானூறு.
  10. கடற்கரையை அடுத்து இருக்கும் ஊர் எது?
    விடை: பட்டினம் பாக்கம்.
  11. பழந்தமிழகத்தின் வணிகப்பொருட்களைப் பற்றிக் குறிப்பிடும் நூல்கள் யாவை?
    விடை: பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி.
  12. கெலன் கெல்லர் இயற்கை எய்திய ஆண்டு மற்றும் நாள் எது?
    விடை: 1968 சூன் முதல் நாள்.
  13. அந்தகக்கவி வீரராகவர் பிறந்த ஊர் யாது?
    விடை: காஞ்சி மாவட்டம், பூதூர்.
  14. பிறவிலேயே கண்ணொளி இழந்த கவிஞர் யார்?
    விடை: அந்தகக்கவி வீரராகவர்.
  15. தனிப்பாடல் திரட்டு எனும் நூலில் வீரராகவர் இயற்றிய பாடல்கள் எத்தனை?
    விடை: 39.
  16. ஆனந்தரங்கர் யாரிடம் கல்வி பயின்றார்?
    விடை: எம்பார்.
  17. சொஸ்த என்பதன் பொருள் யாது?
    விடை: தெளிந்த அல்லது உரிமையுடைய.
  18. லிகிதம் என்பதன் பொருள் யாது?
    விடை: கடிதம் அல்லது ஆவணம்.
முத்தொள்ளாயிரம் / கலிங்கத்துப்பரணி / திரு.வி.க / உமர்கய்யாம்
  1. மு.வரதராசனாரின் தம்பி எழில் எதைப் பற்றி வகுத்து அனுப்புமாறு கடிதம் எழுதியிருந்தார்?
    விடை: ஆக்கவேலை முறை பற்றி.
  2. “அடக்கி ஒழுகுவதற்கு யாரும் இல்லை. அதனால் தான் வீழ்ச்சி நேர்ந்தது" என்று கூறியவர் யார்?
    விடை: விவேகானந்தர்.
  3. செயங்கொண்டாரின் காலம் யாது?
    விடை: கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டு.
  4. "ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி" என்று கூறும் நூல் எது?
    விடை: பன்னிரு பாட்டியல்.
  5. பிரான்சு நாட்டின் ஒரு பகுதியாகவும் பரப்பளவில் சிறியதாகவும் பெரும்பாலும் தமிழர்கள் வாழும் பகுதியாகவும் உள்ள தீவு எது?
    விடை: ரியூனியன் தீவு.
  6. திரு.வி.க தமிழ் இலக்கியங்களையும் சைவ சித்தாந்த சாத்திரங்களையும் யாரிடம் கற்றார்?
    விடை: கதிரைவேலர்.
  7. திரு.வி.க நடத்திய இதழ்கள் யாவை?
    விடை: தேசபக்தன், நவசக்தி.
  8. உமர்கய்யாம் அவர்களின் முழுப்பெயர் யாது?
    விடை: கியாதுதீன் அபுல்பாத் உமர்கய்யாம்.
மணிமேகலை / மூலிகைகள் / காமராசர் / பிற செய்திகள்
  1. இளங்கோவடிகளும், சீத்தலைச் சாத்தனாரும் எந்த சங்கத்தைச் சார்ந்த புலவர்கள்?
    விடை: கடைசங்க காலப் புலவர்கள்.
  2. சொல்லில் ஏற்படும் குற்றங்கள் எவை என மணிமேகலை கூறுகிறது?
    விடை: பொய்பேசுதல், புறங்கூறுதல், கடுஞ்சொல், பயனற்றசொல்.
  3. சான்றாண்மையைத் தாங்கும் தூண்கள் எவை?
    விடை: அன்புடைமை, நாணம், பிறர்க்கு உதவுதல், உயிர்களிடத்து இரக்கம், உண்மை பேசுதல்.
  4. காமராசர் மணிமண்டபம் அமைந்துள்ள இடம் எது?
    விடை: கன்னியாகுமரி.
  5. தில்லையாடி வள்ளியம்மை பிறந்த இடம் யாது?
    விடை: தென்ஆப்பிரிக்காவில் ஜோகன்ஸ்பர்க்.
  6. விசயரங்கச் சொக்கநாதன் எந்த ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்?
    விடை: 1688.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement