TNPSC TRB TET 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் 100 வினா-விடை | Tamil Part-60
பழமொழி நானூறு - ஆசிரியர் குறிப்பு| எண் | வினா | விடை |
|---|
| 901 | 'பழமொழி நானூறு' நூலின் ஆசிரியர் யார்? | முன்றுறை அரையனார் |
| 902 | முன்றுறை அரையனார் எந்த ஊரைச் சேர்ந்தவர்? | முன்றுறை |
| 903 | அரையன் என்ற சொல் எதனைக் குறிக்கும்? | அரசன் |
| 904 | 'ஆற்றுணா' என்பதைப் பிரித்து எழுதுக? | ஆறு + உணா |
ஜவஹர்லால் நேரு பற்றிய தகவல்கள்| எண் | வினா | விடை |
|---|
| 905 | நேரு இந்திய நாட்டின் விடுதலைக்காக எந்த ஆண்டில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார்? | 1921 ஆம் ஆண்டு |
| 907 | நேரு இந்திராகாந்திக்கு எந்தச் சிறைச்சாலையிலிருந்து கடிதம் எழுதினார்? | அல்மோரா சிறைச்சாலை |
| 915 | அல்மோரா சிறை எந்த மாநிலத்தில் உள்ளது? | உத்தராஞ்சல் மாநிலம் |
| 917 | நேருவின் மனைவியின் பெயர் என்ன? | கமலா நேரு |
| 918 | சிறைச்சாலையில் நேருவின் உற்ற நண்பனாய் இருந்தது எது? | புத்தகம் |
| 906 | இந்திராகாந்தி எந்தப் பல்கலைக்கழகத்தில் படித்தார்? | ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் |
உலகப் பிரபலங்கள் - அறிமுகம்| எண் | வினா | விடை |
|---|
| 908 | சேக்ஸ்பியர் என்பவர் யார்? | ஆங்கில நாடக ஆசிரியர் |
| 909 | மில்டன் என்பவர் யார்? | சிறந்த ஆங்கிலக் கவிஞர் |
| 910 | பிளேட்டோ என்பவர் யார்? | கிரேக்கச் சிந்தனையாளர் |
| 911 | காளிதாசர் எந்த மொழியின் நாடக ஆசிரியர்? | வடமொழி |
| 912 | பெர்னார்ட்ஷா என்பவர் யார்? | ஆங்கில நாடக ஆசிரியர் |
| 913 | டால்ஸ்டாய் எந்த நாட்டு எழுத்தாளர்? | இரஷ்ய நாடு |
| 914 | பெட்ரண்ட் ரஸ்ஸல் என்பவர் யார்? | சிந்தனையாளர் மற்றும் கல்வியாளர் |
விசுவபாரதி கல்லூரி| எண் | வினா | விடை |
|---|
| 916 | விசுவபாரதி கல்லூரியில் பணிபுரிந்த பேராசிரியர் யார்? | கிருபளானி |
சித்தர்கள் பற்றிய தகவல்| எண் | வினா | விடை |
|---|
| 919 | கடுவெளிச்சித்தர் எந்த இறைவனை வழிபட்டார்? | வெட்ட வெளியையே கடவுளாக வழிபட்டார் |
| 920 | சித்தர்கள் எத்தனை ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் வாழ்ந்தவர்கள்? | சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன் |
பெரியார் பற்றிய விவரங்கள்| எண் | வினா | விடை |
|---|
| 921 | பெரியார் எங்குப் பிறந்தார்? | ஈரோடு |
| 922 | பெரியாரின் பெற்றோர் யாவர்? | வெங்கடப்பர், சின்னத்தாயம்மாள் |
| 923 | பெரியாரின் இயற்பெயர் என்ன? | இராமசாமி |
| 930 | பெரியார் பிறந்த ஆண்டு என்ன? | 17.09.1879 |
| 931 | பெரியார் மறைந்த ஆண்டு என்ன? | 24.12.1973 |
| 924 | சொந்தமாகச் சிந்தித்துப் புரிந்து கொள்ள நினைக்கிறவர் யார்? | பெரியார் |
| 925 | பெரியார் வாழ்ந்த காலம் முழுவதும் எதற்கு முதலிடம் கொடுத்தார்? | அறிவுக்கே |
| 929 | பெண்களுக்கு முக்கியம் என்று பெரியார் எவற்றைக் கூறினார்? | அறிவும், சுயமரியாதையும் |
| 926 | மக்கள் அனைவரும் எந்த ஓர் இனமாக எண்ணவேண்டும் என்றார் பெரியார்? | மனிதசாதி |
| 927 | வைக்கம் எந்த மாநிலத்தில் உள்ளது? | கேரளா |
| 928 | வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டவர் யார்? | பெரியார் |
| 932 | பெரியார் தம் வாழ்நாளில் எத்தனை கிலோமீட்டர் தூரம் பயணம் செய்தார்? | 13,12,000 கிலோ மீட்டர் |
| 933 | சமூகத் தொண்டிற்காகப் பெரியார் எத்தனை கூட்டங்களில் உரையாற்றினார்? | 10,700 கூட்டங்கள் |
| 934 | நடுவண் அரசு எந்த ஆண்டு பெரியாரின் அஞ்சல் தலையை வெளியிட்டது? | 1978 ஆம் ஆண்டு |
சொற்பொருள்| எண் | சொல் | பொருள் |
|---|
| 935 | "அவல்" என்பதன் பொருள் என்ன? | பள்ளம் |
| 936 | "மிசை" என்பதன் பொருள் என்ன? | மேடு |
| 937 | "நல்லை" என்பதன் பொருள் என்ன? | நன்றாக இருப்பாய் |
புறநானூறு - தகவல்கள்| எண் | வினா | விடை |
|---|
| 938 | புறநானூறு எவ்வகை நூல்களுள் ஒன்று? | எட்டுத்தொகை நூல்கள் |
| 939 | தமிழர்களின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூல் எது? | புறநானூறு |
ஔவையார் பற்றிய குறிப்பு| எண் | வினா | விடை |
|---|
| 940 | ஆத்திசூடி பாடிய ஔவையாரும் சங்கப்பாடல் பாடிய ஔவையாரும் ஒருவரா? | இல்லை, இருவரும் வேறு வேறானவர் |
கவிஞர் தாராபாரதி| எண் | வினா | விடை |
|---|
| 941 | தாராபாரதி தமிழக அரசின் எந்த விருதைப் பெற்றார்? | நல்லாசிரியர் விருது |
| 942 | புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு ஆகிய நூல்களை இயற்றியவர் யார்? | கவிஞர் தாராபாரதி |
மற்ற தலைவர்கள் பற்றிய குறிப்புகள்| எண் | வினா | விடை |
|---|
| 943 | கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படுபவர் யார்? | வ.உ.சிதம்பரனார் |
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்| எண் | வினா | விடை |
|---|
| 944 | பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பிறந்த ஆண்டு எது? | 1908 ஆம் ஆண்டு அக்டோபர் 30 |
| 945 | முத்துராமலிங்கத்தேவரின் பெற்றோர் யாவர்? | உக்கிரபாண்டித்தேவர், இந்திராணி அம்மையார் |
| 946 | முத்துராமலிங்கத்தேவர் எந்தப் பள்ளியில் தொடக்கக் கல்வியைப் பெற்றார்? | கமுதியிலுள்ள தொடக்கப் பள்ளி |
| 947 | முத்துராமலிங்கத்தேவர் உயர்நிலைப் படிப்பை எங்கு பயின்றார்? | பசுமலை மற்றும் இராமநாதபுரம் |
தமிழ்த் தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார்| எண் | வினா | விடை |
|---|
| 948 | திரு.வி.கலியாணசுந்தரனார் பிறந்த ஊர் எது? | காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள துள்ளம் |
| 949 | துள்ளம் தற்பொழுது எவ்வாறு அழைக்கப்படுகிறது? | தண்டலம் |
| 950 | திரு.வி.க வின் பெற்றோர் யாவர்? | விருத்தாசலனார், சின்னம்மையார் |
| 953 | திரு.வி.க வாழ்ந்த காலம் என்ன? | 26.08.1883 முதல் 17.09.1953 வரை |
| 955 | திரு.வி.க பணியாற்றிய பள்ளி எது? | சென்னை இராயப்பேட்டை வெஸ்லி பள்ளி |
| 951 | திரு.வி.க வின் தமிழ் நடையைப் போற்றி அவர் எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறார்? | தமிழ்த்தென்றல் |
| 952 | மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை ஆகிய நூல்களை இயற்றியவர் யார்? | திரு.வி.கலியாணசுந்தரனார் |
| 954 | பொதுமை வேட்டல் நூலில் எத்தனை பாக்கள் உள்ளன? | 430 பாக்கள் |
திருவள்ளுவர் மற்றும் திருக்குறள்| எண் | வினா | விடை |
|---|
| 956 | திருவள்ளுவரின் தாயார் பெயர் என்ன? | ஆதி |
| 957 | திருவள்ளுவரின் தந்தை பெயர் என்ன? | பகவன் |
| 958 | திருவள்ளுவர் செய்த தொழில் என்ன? | நெசவுத் தொழில் |
| 959 | "தேவர்", "முதற்பாவலர்", "பொய்யில் புலவர்" ஆகிய சிறப்புப் பெயர்களைக் கொண்டவர் யார்? | திருவள்ளுவர் |
| 960 | திருக்குறளில் உள்ள குறட்பாக்களின் எண்ணிக்கை எத்தனை? | 1330 |
| 961 | திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது? | 107 மொழிகளில் |
செம்மொழிகள் மற்றும் தமிழ்மொழிச் சிறப்பு| எண் | வினா | விடை |
|---|
| 962 | உலகத்தில் எத்தனைக்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன? | 6000-த்திற்கும் மேற்பட்ட மொழிகள் |
| 963 | திருந்திய செவ்வியல்புகள் பொருந்திய மொழிகள் எவ்வாறு அழைக்கப்படும்? | செம்மொழிகள் |
| 964 | கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம், சீனம் போன்ற மொழிகளைச் செம்மொழிகள் எனப் பட்டியலிட்டவர் யார்? | ச.அகத்தியலிங்கம் |
| 965 | இன்று பேச்சு வழக்கில் இல்லாத செம்மொழிகள் எவை? | கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் |
| 966 | "தமிழ்மொழி அழகான சித்திர வேலைப்பாடமைந்த வெள்ளித்தட்டு" எனக் கூறியவர் யார்? | டாக்டர் கிரௌல் |
| 967 | "தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமன்றித் தழைத்தோங்கவும் செய்யும்" என்று கூறியவர் யார்? | கால்டுவெல் |
| 968 | 'எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்பது எந்த நூலின் நூற்பா? | தொல்காப்பியம் |
தமிழில் இலக்கணம்| எண் | வினா | விடை |
|---|
| 969 | வடமொழியில் எத்தனை வகையான எண்கள் உள்ளன? | மூன்று (ஒருமை, இருமை, பன்மை) |
தமிழர்களின் குடியிருப்புகளின் பெயர்கள்| எண் | வினா | விடை |
|---|
| 970 | தமிழர்கள் தம் குடியிருப்புகளைப் பொதுவாக எந்தப் பெயரால் குறித்தனர்? | ஊர் |
| 971 | மலையின் உயரத்திற்குக் குறைவான நிலப்பகுதியை எவ்வாறு கூறினர்? | குன்று |
| 972 | குன்றிலும் உயரத்தில் குறைந்ததைக் குறிக்கும் சொற்கள் எவை? | கரடு, பாறை |
| 973 | மரங்கள் பெயரில் அமைந்த ஊர்களுக்கு எடுத்துக்காட்டு தருக? | ஆற்காடு, ஆலங்காடு |
| 974 | ஆடு மாடுகள் அடைக்கப்படும் இடத்திற்கு என்ன பெயர்? | பட்டி |
| 975 | ஆறுகள் பாயும் இடங்களில் அமைந்த ஊர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? | ஆற்றூர் (ஆத்தூர்) |
| 976 | பரதவர் வாழ்ந்த ஊர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? | கீழக்கரை, கோடியக்கரை, நீலாங்கரை |
| 977 | நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எத்தனை பாளையங்களாகப் பிரித்தனர்? | 72 பாளையங்கள் |
| 978 | "மதிரை" என்ற சொல் கல்வெட்டுகளில் காணப்பட்டு காலப்போக்கில் எவ்வாறு மருவியது? | மதுரை |
| 979 | "கோவன்புத்தூர்" என்ற சொல் தற்போது எவ்வாறு வழங்கப்படுகிறது? | கோயமுத்தூர் (கோவை) |
சுட்டெழுத்து| எண் | வினா | விடை |
|---|
| 980 | எந்தச் சுட்டெழுத்து தற்போது வழக்கத்தில் இல்லை? | உ |
புலவர்கள் மற்றும் ஆசிரியர்கள்| எண் | வினா | விடை |
|---|
| 981 | "நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே" என்ற புறநானூற்றுப் பாடலைப் பாடியவர் யார்? | மோசிகீரனார் |
| 982 | மோசிகீரனார் வாழ்ந்த ஊர் எது? | தென்பாண்டி நாட்டிலுள்ள மோசி |
| 983 | முரசுக் கட்டிலில் உறங்கிய மோசிகீரனாருக்குக் கவரி வீசிய மன்னன் யார்? | சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை |
| 984 | முதுமொழிக்காஞ்சி என்ற நூலை இயற்றியவர் யார்? | மதுரைக் கூடலூர்கிழார் |
| 985 | மதுரைக் கூடலூர்கிழார் எங்குப் பிறந்தார்? | கூடலூர் |
| 986 | முதுமொழிக்காஞ்சி எந்தத் திணையின் துறைகளுள் ஒன்று? | காஞ்சித்திணை |
| 987 | உ.வே.சாமிநாதரின் ஆசிரியர் யார்? | மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் |
| 988 | மீனாட்சிசுந்தரனார் பிறந்த ஊர் எது? | திருச்சி மாவட்டத்திலுள்ள எண்ணெய்க் கிராமம் |
| 989 | மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் எத்தனைக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்? | எண்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் |
| 990 | மீனாட்சிசுந்தரனாரின் குறிப்பிடத்தக்க மாணவர்கள் யாவர்? | குலாம்காதர் நாவலர், சவரிராயலு, உ.வே.சாமிநாதர் |
| 991 | கோவூர்கிழார் எங்குப் பிறந்தார்? | உறையூருக்கு அருகிலுள்ள கோவூர் |
| 992 | நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இருந்த பகையை நீக்கியவர் யார்? | கோவூர்கிழார் |
| 993 | கடையேழு வள்ளல்களுள் ஒருவரான திருமுடிக்காரி எந்தப் பகுதியை ஆண்டார்? | மலையமான் நாடு |
கணிதமேதை இராமானுஜம்| எண் | வினா | விடை |
|---|
| 994 | கணிதமேதை இராமானுஜம் பிறந்த ஆண்டு எது? | 1887 டிசம்பர் 22 |
| 995 | இராமானுஜத்தின் பெற்றோர் யாவர்? | சீனிவாசன், கோமளம் |
| 996 | எந்த எண்ணிற்கு மதிப்பு உண்டு என்று இராமானுஜம் தன் ஆசிரியரிடம் கூறினார்? | சுழியத்திற்கு (0) |
| 997 | இராமானுஜம் எந்தத் துறைமுகத்தில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார்? | சென்னைத் துறைமுகம் |
| 998 | இராமானுஜத்தின் கணிதத் திறமையைக் கண்டறிந்த இங்கிலாந்துப் பேராசிரியர் யார்? | ஹார்டி |
| 999 | இங்கிலாந்துப் பல்கலைக்கழகம் இராமானுஜத்திற்கு எந்த உயரிய பட்டத்தை வழங்கியது? | எஃப்.ஆர்.எஸ் (F.R.S) |
| 1000 | நடுவண் அரசு 1962-இல் இராமானுஜத்தின் 75-ஆவது பிறந்த நாளன்று எதை வெளியிட்டது? | அஞ்சல் தலை |
0 Comments