6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 100 வினா விடை | 6th Social Science Part-2


TNPSC TRB TET 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 100 வினா விடை | 6th Social Science Part-2


வரலாறு, தொல்லியல் மற்றும் அரசுகள் - வினாக்கள் மற்றும் விடைகள்

வரலாறு மற்றும் தொல்லியல்
  1. வரலாற்றுக்கு முந்தைய காலம் என்பது எதற்கும் எதற்கும் இடைப்பட்ட காலம்?
    • விடை: கற்கருவிகளைப் பயன்படுத்தியதற்கும் எழுதும் முறைகளைக் கண்டுபிடிப்பதற்கும் இடைப்பட்ட காலம்.
  2. விலங்குகளுக்கு முதன்முதலாக மருத்துவமனை அமைத்துத் தந்த இந்திய அரசர் யார்?
    • விடை: அசோகர்.
  3. நமது தேசியக் கொடியில் உள்ள 24 ஆரக்கால் சக்கரம் எதிலிருந்து பெறப்பட்டது?
    • விடை: சாரநாத் கற்றூண் முத்திரையிலிருந்து.
  4. அசோகர் குறித்த வரலாற்று ஆவணங்களைச் சார்லஸ் ஆலன் எந்தப் பெயரில் நூலாக வெளியிட்டார்?
    • விடை: The Search for the India's Lost Emperor.
  5. 'தம்மா' என்பது பிராகிருத சொல், இதன் சமஸ்கிருதச் சொல் என்ன?
    • விடை: தர்மா.
  6. மனிதன் சுமார் எத்தனை இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நடக்கத் தொடங்கினான்?
    • விடை: 20 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்.
  7. ஆஸ்ட்ரலோபிதிகஸ் மனிதர்கள் எங்கு தோன்றினர்?
    • விடை: கிழக்கு ஆப்பிரிக்கா.
  8. இறந்தவர்களைப் புதைக்கும் பழக்கம் கொண்டிருந்த, ஜெர்மனியில் சான்றுகள் கிடைக்கப்பெற்ற பழங்கால மனிதன் யார்?
    • விடை: நியாண்டர்தால்.
  9. பீகிங் மனிதன் எங்கு வாழ்ந்தான்?
    • விடை: சீனா.
  10. லண்டன் பகுதியில் வாழ்ந்த பழங்கால மனிதன் எவ்வாறு அழைக்கப்பட்டான்?
    • விடை: ஹைடல்பர்க் மனிதன்.
  11. தொல்பழங்காலப் பாறை ஓவியங்கள் காணப்படும் பொறிவரை எந்த மாவட்டத்தில் உள்ளது?
    • விடை: நீலகிரி மாவட்டம்.
  12. ஹரப்பா மற்றும் மொஹஞ்ச-தாரோ நகரங்களை அகழாய்வு செய்ய ஆரம்பித்த ஆண்டு எது?
    • விடை: 1920.
  13. ஹரப்பாவிற்கும் மொஹெஞ்ச-தாரோவிற்கும் பொதுவான அம்சங்கள் இருப்பதை 1924ல் கண்டறிந்தவர் யார்?
    • விடை: ஜான் மார்ஷல்.
  14. ஹரப்பா நாகரிகத்தின் பரப்பளவு எவ்வளவு?
    • விடை: 13 லட்சம் சதுர கி.மீ.
  15. மொஹஞ்ச-தாரோவில் இருந்த 20 தூண்கள் மற்றும் 4 வரிசைகளைக் கொண்ட மிகப்பெரிய பொதுக் கட்டடம் எது?
    • விடை: கூட்ட அரங்கு.
  16. சிந்து வெளிப் பகுதியிலுள்ள மெலுக்கா என்னும் இடத்தில் இருந்து அணிகலன் வாங்கிய அக்காடிய அரசன் யார்?
    • விடை: நாரம்-சின்.
  17. குஜராத் மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தந்தத்திலான அளவுகோல் எவ்வளவு சிறிய அளவீட்டைக் கொண்டுள்ளது?
    • விடை: 1704 மி.மீ.
  18. நடன மாது எனப் பெயரிடப்பட்ட வெண்கலத்தாலான சிறிய பெண் சிலை எங்கு கிடைத்தது?
    • விடை: மொஹெஞ்ச-தாரோ.
  19. சிந்துவெளி மக்கள் ஆபரணங்கள் செய்ய எந்த நிற மணிக்கற்களைப் பயன்படுத்தினர்?
    • விடை: சிவப்பு நிற மணிக்கற்கள்.
  20. மனித வரலாற்றில் முதல் எழுத்து வடிவம் யாரால் உருவாக்கப்பட்டது?
    • விடை: சுமேரியர்களால்.
  21. செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களைக் கொண்ட தானியக் களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்ட ராகிகர்கி எந்த மாநிலத்தில் உள்ளது?
    • விடை: ஹரியான மாநிலம்.
  22. சிந்துவெளி நாகரிகத்துக்கு முன்னோடியாகக் கருதப்படும் மெஹெர்கர் எந்த ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது?
    • விடை: போலன் ஆற்றுப் பள்ளத்தாக்கு.
சங்க காலம் மற்றும் பண்டைய தமிழகம்
  1. பட்டினப்பாலை நூலின் ஆசிரியர் யார்?
    • விடை: கடியலூர் உருத்திரங்கண்ணனார்.
  2. சந்திர குப்தரின் அமைச்சரான சாணக்கியர் மதுரையைப் பற்றி எந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்?
    • விடை: அர்த்தசாஸ்திரம்.
  3. சீன வரலாற்றாசிரியர் யுவான் சுவாங் கூடுதல் படிப்புக்காக எங்கு இருந்த கடிகைக்கு வந்தார்?
    • விடை: காஞ்சி.
  4. தமிழ்நாட்டில் 'ஏரிகளின் மாவட்டம்' என்று அழைக்கப்படுவது எது?
    • விடை: காஞ்சிபுரம்.
  5. சோழநாடு, பாண்டிய நாடு, சேரநாடு மற்றும் தொண்டைநாடு ஆகியவை எதற்குப் புகழ் பெற்றவை?
    • விடை: சோழநாடு - சோறுடைத்து, பாண்டிய நாடு - முத்துடைத்து, சேரநாடு - வேழமுடைத்து, தொண்டைநாடு - சான்றோருடைத்து.
  6. சேர அரசர்களைப் பற்றிய செய்திகளை வழங்கும் சங்க கால நூல் எது?
    • விடை: பதிற்றுப்பத்து.
  7. தனது பெயரில் நாணயங்களை வெளியிட்ட சங்க கால சேர அரசன் யார்?
    • விடை: சேரல் இரும்பொறை.
  8. கரிகாலன் மூவேந்தர்கள் மற்றும் பதினொன்று வேளிர் தலைவர்களை தோற்கடித்த இடம் எது?
    • விடை: வெண்ணி.
  9. சேரர்களின் அடையாள மாலை மற்றும் துறைமுகம் யாவை?
    • விடை: பனம்பூ மாலை, முசிறி/தொண்டி.
  10. குறுநில மன்னர்களில் 'ஆய்' என்னும் பெயர் எந்தப் பழந்தமிழ்ச் சொல்லில் இருந்து பெறப்பட்டது?
    • விடை: ஆயர்.
  11. சங்க காலத்தில் நிலவரியே வருவாயின் முக்கிய ஆதாரம், அது எவ்வாறு அழைக்கப்பட்டது?
    • விடை: இறை.
  12. சங்க காலத்தில் எறியீட்டி எவ்வாறு குறிப்பிடப்பட்டது?
    • விடை: தோமாரம்.
  13. சங்க காலத்தில் நெய்தல் திணை மக்களின் கடவுளாக வணங்கப்பட்டவர் யார்?
    • விடை: வருணன்.
  14. பதிற்றுப்பத்தில் இடம்பெற்றுள்ள கொடுமணல் ஊர் எந்த மாவட்டத்தில் உள்ளது?
    • விடை: ஈரோடு மாவட்டம்.
  15. இறந்துபோன வீரனின் நினைவைப் போற்றும் வகையில் நடப்படும் கல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    • விடை: நடுகல்.
வேத காலம்
  1. ஆரியர்கள் எந்தக் கணவாய் வழியாக மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவிற்குள் வந்தனர்?
    • விடை: இந்துகுஷ் மலைகளிலுள்ள கைபர் கணவாய்.
  2. ரிக்வேதகால ஆரியர்களின் வாழ்விடமான 'சப்தசிந்து' என்பதன் பொருள் என்ன?
    • விடை: ஏழு ஆறுகள் ஓடும் நிலப்பகுதி.
  3. ரிக் வேத கால அரசியலில் குடும்பத்தின் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
    • விடை: குலபதி.
  4. பின் வேதகாலத்தில் உருவான அரசுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
    • விடை: ஜனபதங்கள் அல்லது ராஷ்டிரங்கள்.
  5. வேதகாலத்தில் 'பாலி' என்ற வரியின்படி விவசாய மகசூழில் அல்லது கால்நடைகளில் எவ்வளவு பங்கு அரசனுக்குச் செலுத்த வேண்டும்?
    • விடை: 1/6 பங்கு.
  6. வேதகால மக்களின் முதன்மைப் பயிரான 'யவா' என்பது எதைக் குறிக்கிறது?
    • விடை: பார்லி.
  7. வேதகாலப் பண்பாடு எவ்வகை மட்பாண்டப் பண்பாடு என்று அழைக்கப்படுகிறது?
    • விடை: வர்ணம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டப் பண்பாடு.
  8. ரிக்வேத கால மக்கள் பயன்படுத்திய நிஷ்கா, சத்மனா என்பவை எவ்வகை நாணயங்கள்?
    • விடை: தங்க நாணயங்கள்.
  9. ரிக்வேத காலத்தில் பயன்படுத்தப்பட்ட 'கிருஷ்ணாலா' என்பது எவ்வகை நாணயம்?
    • விடை: வெள்ளி நாணயம்.
  10. நான்கு ஆஸ்ரமங்களில் ஒன்றான 'வனப்பிரஸ்தம்' என்பதன் பொருள் என்ன?
    • விடை: காடுகளுக்குச் சென்று தவம் செய்தல்.
  11. 'மெகாலித்' (Megalith) என்ற சொல் எம்மொழியிலிருந்து பெறப்பட்டது?
    • விடை: கிரேக்கச் சொல்.
சமணம் மற்றும் பௌத்தம்
  1. சமணத் தீர்த்தங்கரரான மகாவீரர் பிறந்த இடம் எது?
    • விடை: வைசாலிக்கு அருகேயுள்ள குந்தகிராமம், பீகார்.
  2. மகாவீரரின் பெற்றோர் பெயர்கள் யாவை?
    • விடை: சித்தார்த்தர், திரிசலா.
  3. பன்னிரண்டரை ஆண்டுகால தவத்திற்குப் பின்னர் மகாவீரர் அடைந்த எல்லையற்ற அறிவின் பெயர் என்ன?
    • விடை: கைவல்ய.
  4. மகாவீரரின் தலைமைச் சீடரான கௌதமசுவாமி தொகுத்த போதனைகளின் பெயர் என்ன?
    • விடை: ஆகம சித்தாந்தம்.
  5. முற்போக்கானவர்களாகக் கருதப்பட்டு வெள்ளை நிற ஆடைகளை அணியும் சமணப் பிரிவினர் யார்?
    • விடை: சுவேதாம்பரர்.
  6. சிலப்பதிகாரத்தில் கோவலனும் கண்ணகியும் மதுரைக்குச் செல்லும்போது உடன் சென்ற சமணப் பெண் துறவி யார்?
    • விடை: கவுந்தியடிகள்.
  7. காஞ்சிபுரத்திலுள்ள திருப்பருத்திக் குன்றம் கிராமம் முன்னர் எவ்வாறு அழைக்கப்பட்டது?
    • விடை: ஜைனக் காஞ்சி.
  8. புத்தரின் பெற்றோர் பெயர்கள் யாவை?
    • விடை: சுத்தோதனா, மாயாதேவி.
  9. புத்தரின் முதல் போதனைச் சொற்பொழிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    • விடை: தர்ம சக்ர பரிவர்த்தனா.
  10. பௌத்த சங்கத்தின் துறவிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
    • விடை: பிட்சுக்கள்.
  11. புத்தருடைய உடல் உறுப்புகளின் எஞ்சிய பாகங்கள் மீது கட்டப்பட்ட பௌத்த நினைவுச்சின்னங்கள் எவை?
    • விடை: ஸ்தூபி.
  12. புத்தரின் உருவங்களை வணங்கிய பௌத்தப் பிரிவு எது?
    • விடை: மகாயானம்.
  13. முதல் பௌத்த மாநாடு நடைபெற்ற இடம் மற்றும் அதனைத் தலைமையேற்றவர் யார்?
    • விடை: இராஜகிருகம், அரசர் அஜாதசத்ரு.
  14. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற பௌத்த தர்க்கவியல் அறிஞர் யார்?
    • விடை: தின்னகர்.
  15. பாரசீகத்தில் ஜொராஸ்டிரியனிசத்தை தோற்றுவித்தவர் யார்?
    • விடை: ஜொராஸ்டர்.
மௌரியப் பேரரசு மற்றும் அதன் பின்
  1. ஆறாம் நூற்றாண்டில் மொத்தம் எத்தனை மகாஜனபதங்கள் இருந்தன?
    • விடை: பதினாறு.
  2. சிசுநாக வம்சத்தைச் சேர்ந்த எந்த அரசர் தலைநகரை ராஜகிரகத்திலிருந்து பாடலிபுத்திரத்திற்கு மாற்றினார்?
    • விடை: காலசோகா.
  3. சந்திரகுப்த மௌரியரைத் தென்னிந்தியாவிற்கு அழைத்துச் சென்ற சமணத்துறவி யார்?
    • விடை: பத்ரபாகு.
  4. உண்ணா நோன்பிருந்து உயிர் துறக்கும் சமணச் சடங்கின் பெயர் என்ன?
    • விடை: சல்லேகனா.
  5. எதிரிகளை அழிப்பவன் என்று பொருள்படும் 'அமிர்தகதா' என்று கிரேக்கர்களால் அழைக்கப்பட்டவர் யார்?
    • விடை: பிந்துசாரர்.
  6. 'தேவனாம்பிரியர்' என்றழைக்கப்பட்ட அசோகரின் பட்டப்பெயருக்குப் பொருள் என்ன?
    • விடை: கடவுளுக்கு பிரியமானவன்.
  7. அசோகர் கல்வெட்டுகளில் சாஞ்சியில் பயன்படுத்தப்பட்ட எழுத்துமுறை எது?
    • விடை: பிராமி.
  8. மௌரியர்களின் காலத்தில் நகர நிர்வாகம் எந்த அதிகாரியின் கீழ் இருந்தது?
    • விடை: நகரிகா.
  9. மௌரியர்கள் காலத்தில் அரசினுடைய செப்பு நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
    • விடை: மாஸகாஸ்.
  10. சுதர்சனா ஏரி உருவாக்கப்பட்டதைப் பதிவு செய்துள்ள கல்வெட்டு எது?
    • விடை: ருத்ரதாமனின் ஜுனாகத் மற்றும் கிர்னார் கல்வெட்டு.
  11. கலிங்கநாட்டு அரசன் காரவேலனுடைய புகழ்பெற்ற கல்வெட்டு எது?
    • விடை: ஹதிகும்பா கல்வெட்டு.
  12. காளிதாசர் இயற்றிய மாளவிகாக்னிமித்ரா நாடகத்தின் கதாநாயகன் என கருதப்படுபவர் யார்?
    • விடை: அக்னிமித்ரா.
  13. கௌதமிபாலஸ்ரீயால் வெளியிடப்பட்ட மெய்க்கீர்த்தி (பிரசஸ்தி) எது?
    • விடை: நாசிக் மெய்க்கீர்த்தி.
  14. அமராவதியில் புகழ்பெற்ற பௌத்த ஸ்தூபிகளைக் கட்டியவர்கள் யார்?
    • விடை: சாதவாகனர்கள்.
  15. சாகர்களின் ஆட்சியானது காந்தாரப்பகுதியில் யாரால் நிறுவப்பட்டது?
    • விடை: மாவோஸ் அல்லது மோகா.
  16. தூய சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட முதல் கல்வெட்டுக் குறிப்பு எது?
    • விடை: ருத்ரதாமனுடைய ஜுனாகத் மற்றும் கிர்னார் கல்வெட்டு.
  17. புனித தாமஸிடம் தொடர்புடைய, கிறித்துவத்திற்கு மதம் மாறிய இந்தோ-பார்த்திய அரசர் யார்?
    • விடை: கோண்டோ பெர்னஸ்.
குப்தர் காலம்
  1. முதலாம் சந்திரகுப்தரால் வெளியிடப்பட்ட தங்க நாணயங்களில் யாருடைய உருவங்கள் இடம்பெற்றிருந்தன?
    • விடை: சந்திரகுப்தர் மற்றும் குமாரதேவி.
  2. சமுத்திரகுப்தரால் தென்னிந்தியாவில் தோற்கடிக்கப்பட்ட பல்லவ நாட்டு அரசர் யார்?
    • விடை: விஷ்ணுகோபன்.
  3. 'பிரசஸ்தி' என்ற சமஸ்கிருத சொல்லின் பொருள் என்ன?
    • விடை: ஒருவரைப் பாராட்டி புகழ்வது.
  4. விக்கிரமாதித்யர் (இரண்டாம் சந்திரகுப்தர்) அவையிலிருந்த அகராதியியல் ஆசிரியர் யார்?
    • விடை: அமர சிம்ஹர்.
  5. குப்தப் பேரரசின் அங்கீகரிக்கப்பட்ட கடைசி அரசர் யார்?
    • விடை: விஸ்ணுகுப்தர்.
  6. பல்வேறு இடங்களுக்குச் சென்று வணிகம் செய்த குப்தர் கால வணிகர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
    • விடை: சார்த்தவாகா.
  7. பூமி தனது அச்சில் சுழலுகிறது எனும் உண்மையை அறிவித்த முதல் இந்திய வானியல் ஆய்வாளர் யார்?
    • விடை: ஆரியப்பட்டர்.
  8. குப்தர்களின் பொற்காசுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
    • விடை: தினாரா.
பல்லவர் மற்றும் சாளுக்கியர்
  1. களப்பிரர்களை அழித்து ஒரு வலுவான பல்லவ அரசை உருவாக்கிய மன்னன் யார்?
    • விடை: சிம்மவிஷ்ணு.
  2. மத்தவிலாசப்பிரகசனம் என்ற நாடகத்தைச் சமஸ்கிருத மொழியில் எழுதிய பல்லவ அரசன் யார்?
    • விடை: முதலாம் மகேந்திரவர்மன்.
  3. சிறுத்தொண்டர் எனப் பிரபலமாக அறியப்பட்ட முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதி யார்?
    • விடை: பரஞ்சோதி.
  4. காஞ்சிபுரத்திலுள்ள வைகுண்டப்பெருமான் கோவிலைக் கட்டிய பல்லவ மன்னன் யார்?
    • விடை: நந்திவர்மன்.
  5. கிராதார்ஜுனியம் எனும் வடமொழிக் காப்பியத்தை வடித்த சமஸ்கிருத அறிஞர் யார்?
    • விடை: பாரவி.
  6. அய்கோல் கல்வெட்டை சமஸ்கிருத மொழியில் எழுதிய இரண்டாம் புலிகேசியின் அவைக்களப் புலவர் யார்?
    • விடை: ரவிகீர்த்தி.
  7. வெசாரா பாணியிலான கோவில் விமானங்களைக் கட்டும் முறையை வளர்ச்சி பெறச் செய்தவர்கள் யார்?
    • விடை: சாளுக்கியர்கள்.
  8. கன்னட இலக்கியத்தின் மூன்று ரத்தினங்கள் என கருதப்படுபவர்கள் யார்?
    • விடை: ஆதிகவி பம்பா, ஸ்ரீ பொன்னா, ரன்னா.
  9. கீழடி அகழாய்வு மாதிரிகளை 2017ல் இந்திய தொல்லியல் துறை எந்த நிறுவனத்திற்கு கணிக்க அனுப்பியது?
    • விடை: பீட்டா அனாலடிக் நிறுவனம், புளோரிடா.
புவியியல்
  1. புவிக்கு அருகில் காணப்படும் விண்மீன் திரள் மண்டலங்கள் எவை?
    • விடை: ஆண்ட்ரோமெடா மற்றும் மெகல்லனிக் க்ளவுடஸ்.
  2. சூரியக் குடும்பத்தின் மொத்த நிறையில் சூரியன் எத்தனை சதவிகிதம் உள்ளது?
    • விடை: 99.8 சதவிகிதம்.
  3. புவி வினாடிக்கு எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது?
    *   விடை: 30 கிலோமீட்டர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement