TNPSC TRB TET TAMIL | தமிழ் 100 வினா விடைகள் - PART 1


தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கணம் குறித்த வினாக்களும் விடைகளும்

அறிவியல், சமயம் மற்றும் வரலாறு
  1. "மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமி செருவினில் பிழைத்தும்" என்ற உயிரியியல் தொழில்நுட்பத்தை அறிவுறுத்தும் நூல் எது? - திருவாசகம்
  2. திருமங்கையாழ்வார் சொல்லணியில் அமைத்துப் பாடிய நூல் எது? - திருவெழுக்கூற்றிருக்கை
  3. சைவராக இருந்தும் சமண காப்பியமான சீவகசிந்தாமணிக்கு உரை எழுதியவர் யார்? - நச்சினார்க்கினியர்
  4. சிவபெருமான் திருக்கோவிலின் எதிரே உள்ள அறுகால் பீடத்தில் இருந்து அரங்கேறிய நூல் எது? - திருவிளையாடற்புராணம்
  5. சுந்தரர் இறைவனால் ஆட்கொள்ளப் பட்ட இடம் எது? - திருவெண்ணெய் நல்லூர்
  6. ஆதிசங்கரர் 'திராவிட சிசு' என்று குறிப்பிட்டவர் யார்? - திருஞானசம்பந்தர்
  7. 'முக்தி நூல்' என அடைமொழி கொண்ட நூல் யாது? - சீவக சிந்தாமணி
  8. 'தமிழ் மூவாயிரம்' என்னும் வேறுபெயர் கொண்ட நூல் எது? - திருமந்திரம்
  9. யாருடைய அறிவுரைப்படி ஆதிரையிடம் மணிமேகலை முதன்முதலில் பிச்சையேற்றாள்? - அறவணவடிகள்
  10. ஜி.யு. போப் திருவாசகத்தை எந்த மொழியில் மொழிபெயர்த்தார்? - ஆங்கிலம்
  11. நடுவணரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த ஆண்டு எது? - 2004
  12. 'கவி காளமேகம்' எந்த சமயத்திலிருந்து எந்த சமயத்திற்கு மாறினார்? - வைணவத்திலிருந்து சைவத்திற்கு மாறினார்
  13. சீறாப்புராணத்தில் தீர்க்கதரிசனத்தைக் கூறுவது எந்தக் காண்டம்? - நுபுவத்துக் காண்டம்
  14. 'தேம்பாவணி' நூலில் உள்ள படலங்களின் எண்ணிக்கை எத்தனை? - 36 படலங்கள்
  15. அகழாய்வில் 'முதுமக்கள் தாழிகள்' கண்டுபிடிக்கப்பட்ட ஊர் எது? - ஆதிச்சநல்லூர்
இலக்கிய நூல்களும் அடைமொழிகளும்
  1. 'பிள்ளைத் தமிழ்' என்ற பெயரில் ஒரு தனிநூலினைச் செய்த முதல் ஆசிரியர் யார்? - ஒட்டக்கூத்தர்
  2. பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டதாகக் கருதப்படும் நூல் எது? - திருப்பாவை
  3. 'கூடற்தமிழ்' என அடைமொழி பெற்ற நூல் எது? - மதுரைக்காஞ்சி
  4. 'நல்ல' எனும் அடைமொழியைப் பெற்ற நூல் எது? - குறுந்தொகை
  5. 'குட்டித் திருவாசகம்' எனும் அடைமொழியை கொண்ட நூல் யாது? - திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி
  6. 'திருத்தொண்டர் மாக்கதை' எனும் அடைமொழியால் அழைக்கப்பெறும் நூல் யாது? - பெரிய புராணம்
  7. 'சின்னூல்' என்ற அடைமொழி கொண்ட நூல் யாது? - நேமிநாதம்
  8. 'புலவராற்றுப்படை' என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் எது? - திருமுருகாற்றுப்படை
  9. 'மணநூல்' என அழைக்கப்பெறும் நூல் எது? - சீவகசிந்தாமணி
  10. 99 மலர்களைக் கொண்ட நூல் யாது? - குறிஞ்சிப்பாட்டு
  11. குண்டலகேசிக்கு எதிராக எழுந்த வாதநூல் எது? - நீலகேசி
  12. இலக்கியச் செய்திகளோடு அறிவியல் துறைப்பொருள்களையும் முதன் முதலாகச் சேர்த்து விளக்கம் தந்த நூல் எது? - அபிதான சிந்தாமணி
  13. 'மருமக்கள் வழி மான்மியம்' என்ற நூலின் ஆசிரியர் யார்? - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
  14. 'ரூபாயத்' என்பதன் பொருள் என்ன? - நான்கடிச் செய்யுள்
  15. 'மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்' எனப் பாடியவர் யார்? - மோசிகீரனார்
  16. புறநானூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் யார்? - பாரதம் பாடிய பெருந்தேவனார்
  17. நற்றிணைப் பாடல்களைத் தொகுப்பித்தவர் யார்? - பன்னாடு தந்த மாறன் வழுதி
  18. 'கற்றவனுக்குக் கட்டுச் சோறு வேண்டாம்' என்று குறிப்பிடும் இலக்கியம் எது? - பழமொழி நானூறு
  19. 'குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே' எனப் பொருள்படும் நூல் யாது? - இனியவை நாற்பது
  20. போர்க்களம் பாடுதல் என்ற துறையைச் சார்ந்த புறநூல் எது? - களவழி நாற்பது
  21. கம்பராமாயணத்தின் மணிமுடியாக விளங்கும் காண்டம் எது? - சுந்தர காண்டம்
  22. வீரமா முனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூல் எது? - தொன்னூல் விளக்கம்
இலக்கணம்
  1. 'செய்' என்னும் வேர்ச் சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு. - செய்தவன்
  2. கனி முன் நேர் வருவதும் கனி முன் நிரை வருவதும் எவ்வகைத் தளை? - வஞ்சித்தளை
  3. 'மூதூர்' என்பது எத்திணைக்குரிய ஊர்? - மருதம்
  4. 'விருந்து' எனும் சொல்லின் இலக்கணம் யாது? - பண்பாகுபெயர்
  5. 'முந்நீர் வழக்கம் மகடூஉவோடில்லை' என்ற விடைக்கேற்ற வினாவைத் தேர்க. - கடல் கடந்து செல்லக்கூடாதவர் யார்?
  6. 'யாழ் கேட்டு மகிழ்ந்தாள்' இவ்வாக்கியத்தில் 'யாழ்' என்பது எவ்வகை ஆகுபெயர்? - கருவியாகு பெயர்
  7. 'ஏற்பாடு' என்பதன் பொருள் என்ன? - சூரியன் மறையும் நேரம்
  8. 'வள்ளைக்கு உறங்கும் வளநாட' - இதில் 'வள்ளை' என்பதன் பொருள் யாது? - நெல் குத்தும் போது பெண்கள் பாடும் பாட்டு
  9. 'நான்மணிமாலை' என்ற சொற்றொடர் குறிப்பது எவற்றை? - முத்து, பவளம், மரகதம், மாணிக்கம்
புலவர்கள், ஆளுமைகள் மற்றும் கூற்றுகள்
  1. "உடம்பிடை தோன்றிற்றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி அடல் உறச்சுட்டு வேறொர் மருந்தினால் துயரம் தீர்வர்" - இத்தொடரைக் கூறியவர் யார்? - கம்பர்
  2. "எறும்பும் தன்கையில் எண் சாண்" எனப்பாடியவர் யார்? - ஔவையார்
  3. காந்திமதியின் வருகைப்பருவத்துப் பாடலுக்காக வைரக்கடுக்கனைப் பரிசாகப் பெற்ற புலவர் யார்? - அழகிய சொக்க நாதர்
  4. "ஆட்சிக்கும் அஞ்சாமல் யாவரேனும் ஆள்கவெனத் துஞ்சாமல், தனது நாட்டின் மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவான்" - என்று பாடியவர் யார்? - முடியரசன்
  5. பாரதிக்கு 'மகாகவி' என்ற பட்டம் கொடுத்தவர் யார்? - வ.ரா
  6. "ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே எரிகின்றன" - இக்கவிதை வரிகளைப் பாடியவர் யார்? - வல்லிக்கண்ணன்
  7. "வெப்பத் தடுகளத்து வேழங்க ளாயிரமும் கொப்பத் தொருகளிற்றால் கொண்டோன்" - இவ்வரிகள் யாரைக் குறிப்பிடுகிறது? - இராசேந்திரன்
  8. "திருவள்ளுவர் தோன்றிராவிட்டால் தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது" எனக் கூறியவர் யார்? - கி.ஆ.பெ.விசுவநாதம்
  9. துரைமாணிக்கம் என்ற இயற்பெயரைக் கொண்டவர் யார்? - பெருஞ்சித்திரனார்
  10. 'அழுது அடியடைந்த அன்பர்' என்னும் தொடர் யாரைக் குறிக்கிறது? - மாணிக்கவாசகர்
  11. 'என்றுமுள தென்தமிழ்' என்னும் தொடரை இயம்பியவர் யார்? - கம்பர்
  12. 'ஷெல்லிதாசன்' என்று தன்னைக் கூறிக் கொண்டவர் யார்? - சுப்பிரமணிய பாரதியார்
  13. "திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது" - என்று கூறியவர் யார்? - இராஜாஜி
  14. "ஆயுள் நாள் முழுவதும் தமிழ்மகன் தன்னுடன் வைத்துக் கொண்டு அனுபவிக்கக் கூடிய வாடாத கற்பகப் பூச்செண்டு" என்று கவிமணியின் பாடலைப் பாராட்டியவர் யார்? - டி.கே.சிதம்பரம்
  15. "சேமமுற நாள் முழுதும் உழைப்பதனாலே இந்தத் தேசமெல்லாம் செழுத்திடுது" - எனப் பாடியவர் யார்? - மருதகாசி
  16. உவமைக் கவிஞர் சுரதா இயற்றிய நூல் எது? - தேன்மழை
  17. தம்மை நாயகியாகக் கற்பனை செய்து நாரையைத் தூது விட்ட ஆழ்வார் யார்? - நம்மாழ்வார்
  18. "சோவியத்து அறிஞர் தால்சுதாய் வழிகாட்டுதலால் திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்” எனக் கூறியவர் யார்? - காந்தியடிகள்
  19. உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்கப் பாடுபட்ட பெருஞ்சித்திரனாரின் இதழின் பெயர் என்ன? - தமிழ்ச்சிட்டு
  20. 'தமிழ்த்தென்றல்” என அழைக்கப்படுபவர் யார்? - திரு.வி.கல்யாணசுந்தரனார்
  21. மதுரகவி என அழைக்கப்பட்டவர் யார்? - பாஸ்கரதாஸ்
  22. 'வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி' என்று தொடங்கும் பாடலில் பயின்று வரும் முரண் சொற்கள் எவை? - உண்மை - இன்மை
  23. 'தொண்டர் சீர் பரவுவார்' என்று வழங்கப்படுபவர் யார்? - சேக்கிழார்
  24. "நாடக உலகின் இமயமலை” எனப் போற்றப்படுபவர் யார்? - சங்கரதாஸ் சுவாமிகள்
  25. 'விருத்தமெனும் ஒண்பாவிற்கு உயர்கம்பன்' - இதற்கு ஏற்ற வினா என்ன? - விருத்தம் பாடுவதில் உயர்ந்தவர் யார்?
  26. "பகுத்தறிவு கவிராயர்" என அழைக்கப்படுபவர் யார்? - உடுமலை நாராயணக்கவி
  27. மோசிகீரனார் உடல் சோர்வினால் முரசுக் கட்டிலில் உறங்கிய போது கவரி வீசிய மன்னன் யார்? - சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை
  28. கம்பரைப் புரந்தவர் (ஆதரித்தவர்) யார்? - சடையப்ப வள்ளல்
  29. 'புலனழுக்கற்ற அந்தணாளன்' - எனப் பாராட்டப்படுபவர் யார்? - கபிலர்
  30. "வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளர்ந்தார் ஓர்ந்து" எனத் திருக்குறளைப் பாராட்டியவர் யார்? - பரணர்
  31. அறிவுடையார் நட்பு எதனைப் போன்றது? - வளர்பிறையைப் போன்றது
  32. 'விடிவெள்ளி' என்ற புனைப்பெயரைக் கொண்ட கவிஞர் யார்? - ஈரோடு தமிழன்பன்
  33. இந்திய நூலகத் தந்தை எனப்போற்றப் படுகிறவர் யார்? - சீர்காழி சீ.இரா. அரங்கநாதன்
  34. "ஞானபோதினி" என்னும் இதழைத் தொடங்கி வைத்தவர் யார்? - மு.சி. பூர்ணலிங்கம்
  35. முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர் யார்? - குமர குருபரர்
  36. மனிதர்களின் மாறுபட்ட மன விகாரத்தை எடுத்து உணர்த்தும் "ஈஸ்வரலீலை" என்னும் கதைநூலின் ஆசிரியர் யார்? - தி. ஜானகிராமன்
  37. திரு.வி.கல்யாணசுந்தரனாரின் பயண இலக்கிய நூல் எது? - எனது இலங்கைச் செலவு
  38. திரு.வி. கல்யாணசுந்தரனார் எழுதாத நூல் எது? - சித்திரக்கவி
  39. இந்திய அரசு அண்ணல் அம்பேத்கருக்கு "இந்திய மாமணி (பாரத ரத்னா)" என்னும் உயரிய விருதை வழங்கிய ஆண்டு எது? - 1990
பிற செய்திகள்
  1. 'கோவலன் பொட்டல்' என வழங்கப்படும் இடம் எது? - கோவலன் கொலைக்களப்பட்ட இடம்
  2. 'கிளியை வளர்த்துப் பூனையின் கையில் கொடுத்தது போல' - என்னும் உவமை உணர்த்தும் பொருள் யாது? - துன்பம்
  3. 'கடலில் கரைத்த பெருங்காயம் போல' இந்த உவமை வாக்கியம் உணர்த்தும் பொருள் என்ன? - வீணாதல்
  4. 'Pirate' - என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் என்ன? - கடற்கொள்ளையர்
  5. 'தில்லானா மோகனாம்பாள்' என்ற நாவலை எழுதியவர் யார்? - கொத்தமங்கலம் சுப்பு
  6. 'பார்த்திபன் கனவு' என்ற வரலாற்றுப் புதினத்தின் ஆசிரியர் யார்? - கல்கி
  7. 'வேருக்கு நீர்' என்னும் புதினத்திற்காக விருது பெற்றவர் யார்? - இராஜம் கிருஷ்ணன்
  8. "யவனர்" எனப் பழந்தமிழரால் அழைக்கப்பட்டோர் யார்? - கிரேக்கர், உரோமானியர்
  9. தமிழகத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனத்துப் பொருட்கள் எவை? - பட்டும், சருக்கரையும்
விளக்க வினாக்கள்
  1. "பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்" - இத்தொடருக்கு ஏற்ற வினா என்ன? - இகழ்வாரைப் பொறுத்துக் கொள்ள வேண்டுமா?
  2. "மன்னுயிர்க் கெல்லாம் வரம் மரம்தாள்" - இத்தொடரால் அறியப்படுவது என்ன? - மன்னுயிர்க்கு வரம் எது
  3. "ஈன்று புறந் தருதல் என்தலைக் கடனே சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே" - இப்பாடலில் வந்துள்ள தொடை எது? - அடி எதுகையும் அடிஇயைபும் வந்துள்ளன
  4. "கீழிருந்தும் கீழல்லார் கீழல்லவர்" - இத்தொடருக்கு ஏற்ற வினா எது? - கீழிருந்தும் கீழல்லார் யார்?

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement