TNPSC TRB TET 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 100 வினா விடை | 7th Social Science Part-16
வரலாறு மற்றும் கலாசாரம் குறித்த வினாவிடைத் தொகுப்பு
I. தென்னிந்திய அரசுகள் மற்றும் கலைகள்
- விஜயநகர அரசர்களால் கட்டப்பட்ட வித்தாலா மற்றும் விருப்பாக்சா கோவில்கள் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவை?
விடை : 15 ஆம் நூற்றாண்டு. - பெரியபுராணம் யாரால் இயற்றப்பட்ட சமய இலக்கியமாகும்?
விடை : சேக்கிழார். - பன்னிரு ஆழ்வார்களால் இயற்றப்பட்ட நாலாயிர திவ்விய பிரபந்தத்தை தொகுத்தவர் யார்?
விடை : நாதமுனி. - அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் இயற்றப்பட்ட தேவாரத்தை தொகுத்தவர் யார்?
விடை : நம்பியாண்டார் நம்பி. - மாணிக்கவாசகர் இயற்றிய புகழ் பெற்ற சமய இலக்கியம் எது?
விடை : திருவாசகம். - மதுரா விஜயம் மற்றும் அமுக்த மால்யதா ஆகிய இலக்கியங்கள் எந்த பேரரசுடன் தொடர்புடையவை?
விடை : விஜய நகர பேரரசு. - விஜயநகரப் பேரரசில் குமார கம்பணாவின் மனைவியான கங்காதேவி எழுதிய நூல் எது?
விடை : மதுரா விஜயம். - விஜயநகரப் பேரரசின் சங்கம வம்சத்தின் தலைசிறந்த அரசர் யார்?
விடை : இரண்டாம் தேவராயர். - சாளுவ வம்சத்தின் ஆட்சியைத் தோற்றுவித்த படைத்தளபதி யார்?
விடை : சாளுவ நரசிம்மர். - தலைக்கோட்டைப் போரின் மற்றொரு பெயர் என்ன?
விடை : ராக்சக தங்கடி. - பண்டைய சோழ அரசு எந்த ஆற்றின் கழிமுகப்பகுதியை மையப்பகுதியாகக் கொண்டிருந்தது?
விடை : காவிரி ஆற்றின் கழிமுகப்பகுதி. - சோழப் பேரரசின் மாபெரும் வல்லமை பெற்ற பேரரசராக விளங்கியவர் யார்?
விடை : முதலாம் ராஜராஜன். - தன்னை 'கங்கை கொண்டான்' என்று பிரகடனப்படுத்திய சோழ அரசர் யார்?
விடை : முதலாம் ராஜேந்திரன். - ஸ்ரீவிஜய பேரரசைக் கைப்பற்ற முதலாம் ராஜேந்திர சோழனுக்குத் துணைபுரிந்தது எது?
விடை : அவருடைய கடற்படை. - உள்நாட்டுக் கலகம் ஒன்றில் கொல்லப்பட்ட விஜயாலயனின் வழிவந்த கடைசி சோழ அரசர் யார்?
விடை : அதிராஜேந்திரன். - முதலாம் குலோத்துங்கன் யாருடைய மகனாவார்?
விடை : ராஜராஜ நரேந்திரன் மற்றும் அம்மங்கா தேவி. - சோழர் கால நிர்வாகத்தில் கிராமங்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?
விடை : கூற்றங்கள். - சோழர்களின் நிலவரியான 'காணிக்கடன்' மகசூலில் எவ்வளவு வரியாக வசூலிக்கப்பட்டது?
விடை : 3ல் 1பங்கு. - சோழர் காலத்தில் உள்நாட்டு வணிகத்தில் தீவிரமாக ஈடுபட்ட வணிகக் குழு எது?
விடை : மணி- கிராமத்தார். - தஞ்சை பெருவுடையார் கோவிலின் விமானம் எத்தனை அடிகள் உயரம் கொண்டது?
விடை : 216 அடிகள். - தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலைக் கட்டிய சோழ அரசன் யார்?
விடை : இரண்டாம் ராஜராஜன். - களப்பிரர்களை கி.பி. 6ஆம் நூற்றாண்டில் வெற்றிகொண்டு பாண்டியப் பகுதியை மீட்ட மன்னர் யார்?
விடை : கடுங்கோன். - சுமார் 8000 சமணர்களைக் கழுவேற்றியதாகக் கூறப்படும் பாண்டிய அரசன் யார்?
விடை : அரிகேசரி மாறவர்மன். - மானூர் கல்வெட்டு எந்த மாவட்டம் மற்றும் எந்த ஆண்டைச் சேர்ந்த செய்திகளைக் கொண்டுள்ளது?
விடை : திருநெல்வேலி மாவட்டம், கி. பி. 800. - விசிஷ்டாத்வைதம் தத்துவத்தை முன்வைத்த வைணவச் சிந்தனையாளர் யார்?
விடை : இராமானுஜர்.
- ராஜபுத்திர அரசுகளின் கூட்டமைப்பான ராஜபுதனத்தில் மிகவும் புகழ் பெற்ற பகுதி எது?
விடை : சித்தூர். - சித்தூரின் ராணா மாளவத்தை வெற்றி கொண்டதன் நினைவாக எந்த வெற்றித்தூணை நிறுவினார்?
விடை : ஜெயஸ்தம்பா. - ராஜபுத்ர என்னும் சமஸ்கிருத சொல்லின் பொருள் என்ன?
விடை : வழித்தோன்றல். - ராஜபுத்திரர்களின் சூரிய மற்றும் சந்திர குல வழித்தோன்றல்களுள் முக்கியமானவர்கள் யார்?
விடை : பந்தேல்கண்டின் சந்தேலர்கள். - அக்னிகுலத் தோன்றல்களான சோலங்கிகள் என அழைக்கப்படும் ராஜபுத்திரர்கள் யார்?
விடை : சாளுக்கியர்கள். - பிரதிகார அரசரான முதலாம் நாகபட்டருக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்றவர் யார்?
விடை : வத்சராஜா. - பிரதிகார அரசர் வத்சராஜாவைத் தொடர்ந்து பொறுப்பேற்ற அரசர்கள் யார்?
விடை : நாகபட்டர் மற்றும் ராமபத்ரா. - பால அரசை வடஇந்திய அரசியலில் ஒரு வலிமைமிக்க சக்தியாக உருவாக்கிய கோபாலரின் மகன் யார்?
விடை : தருமபாலர். - பௌத்த மதத்தின் மிகச்சிறந்த ஆதரவாளரான தர்மபாலரால் உருவாக்கப்பட்ட மடாலயம் எது?
விடை : விக்கிரமசீலா மடாலயம். - பால வம்சத்தின் தேவபாலருக்குப் பின் எத்தனை அரசர்கள் அப்பகுதியை ஆட்சி செய்தனர்?
விடை : ஐந்து அரசர்கள். - இரண்டாம் பால வம்சத்தை தோற்றுவித்த முதலாம் மகிபாலர் எந்த ஆண்டு அரியணை ஏறினார்?
விடை : 988 ஆம் ஆண்டு. - திபெத்தில் பௌத்தம் நிறுவப்பட காரணமாக இருந்த சமயப் பரப்பாளர்கள் எந்த வம்சத்தைச் சேர்ந்தவர்கள்?
விடை : பாலர்கள். - சௌகான்கள் அரச வம்சத்தை தோற்றுவித்த சிம்மராஜ் தனது தலைநகரை எங்கு நிறுவினார்?
விடை : சாகம்பரி. - முதல் தரெயின் போரில் முகமது கோரியை 1191 ஆம் ஆண்டு தோற்கடித்த அரசர் யார்?
விடை : பிருதிவிராஜ் சௌகான். - பிருதிவிராஜ் சௌகான் எந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாம் தரெயின் போரில் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்?
விடை : 1192. - பிருதிவிராஜ ராசோ எனும் நீண்ட காவியத்தை இயற்றிய கவிஞர் யார்?
விடை : சந்த பார்தை. - ராஜஸ்தானி பாணியிலான ஓவியங்கள் காணப்படும் இடங்களில் இரண்டு எவை?
விடை : பிக்கனேர் மற்றும் ஜோத்பூர். - ராஜபுத்திரர்களின் கட்டடக் கலைக்குச் சான்றான சந்தேரி மற்றும் அசிர்கார் ஆகியவை எதைக் குறிக்கின்றன?
விடை : கோட்டைகள். - ஜோத்பூரிலிருந்து 32 மைல் தொலைவில் உள்ள ஓசியான் என்னுமிடத்தில் எத்தனை கோவில்கள் உள்ளன?
விடை : பதினாறு இந்து மற்றும் சமணக் கோவில்கள். - உமையது அரசின் படைத்தளபதியான முகமது பின் காசிம் சிந்துவின் மீது படையெடுத்த ஆண்டு எது?
விடை : கி.பி. 712. - கஜினி மாமூதின் படையெடுப்பின் போது இந்தியா வந்து 10 ஆண்டுகள் தங்கியிருந்த அறிஞர் யார்?
விடை : அல்-பரூனி. - கஜினி மாமூது இந்தியாவின் மீது பதினேழு முறை படையெடுத்தபோது 1001-ல் தோற்கடிக்கப்பட்ட ஷாகி அரசர் யார்?
விடை : ஜெயபாலர். - கஜினி மாமூது பஞ்சாபிலுள்ள நாகர்கோட் மற்றும் தானேஸ்வர் நகரங்களை சூறையாடிய ஆண்டு எது?
விடை : 1011. - கஜினி மாமூது மரணமடைந்த ஆண்டு எது?
விடை : கி.பி. 1030. - டெல்லியில் குவ்வத்-உல்-இஸ்ஸாம் மஸ்ஜித் எனும் மசூதியைக் கட்டிய சுல்தான் யார்?
விடை : குத்புதீன் ஐபக். - போலோ விளையாட்டின் போது குதிரையிலிருந்து தவறிவிழுந்து இறந்த டெல்லி சுல்தான் யார்?
விடை : குத்புதீன் ஐபக். - இல்துமிஷின் திறமையற்ற மகனின் பெயர் என்ன?
விடை : ஆரம் ஷா. - துருக்கியப் பிரபுக்கள் 40 பேரைக் கொண்ட 'சகல்கானி' குழுவை உருவாக்கியவர் யார்?
விடை : இல்துமிஷ். - ரஸ்ஸியா சுல்தானா கொலை செய்யப்பட்ட ஆண்டு எது?
விடை : 1240. - அலாவுதீன் கில்ஜியால் சித்தூர் கோட்டை சூறையாடப்பட்டபோது பெண்கள் பின்பற்றிய மரபுவழிச் சடங்கு எது?
விடை : ஜவ்ஹர் சடங்கு. - துக்ளக் அரச வம்சத்தைச் சேர்ந்த ஜானாகான் எந்தப் பெயரில் அரியணை ஏறினார்?
விடை : முகமது பின் துக்ளக். - பிரோஷ் ஷா துக்ளக் இயற்கை எய்தியபோது அவரது வயது என்ன?
விடை : 83 வயது. - சையது அரச வம்சத்தின் கடைசி சுல்தான் அலாவுதீன் ஆலம் ஷா பதவியைத் துறந்த ஆண்டு எது?
விடை : 1451. - ஆக்ரா நகரை நிர்மாணித்து அதனைத் தலைநகராக ஆக்கிய லோடி வம்ச அரசர் யார்?
விடை : சிக்கந்தர் லோடி. - பாமினி அரசை நிறுவிய அலாவுதீன் ஹசன் பாமன்ஷா தனது அரசைப் பிரித்த நான்கு மாகாணங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
விடை : தராப். - பாமினி அரசில் ஏனைய அமைச்சர்களின் பணிகளை மேற்பார்வையிட்ட அமைச்சர் யார்?
விடை : வஸிரி - குல்.
- ஹூமாயூனை சௌசாவிலும் கன்னோஜிலும் தோற்கடித்த ஆப்கானியப் பிரபு யார்?
விடை : ஷெர்ஷா சூர். - ஹூமாயூன் டெல்லியை மீண்டும் கைப்பற்றி ஆட்சியமைத்த ஆண்டு எது?
விடை : 1555. - இரண்டாம் பானிப்பட் போரில் ஹெமுவைத் தோற்கடித்த அக்பரின் பகர ஆளுநர் யார்?
விடை : பைராம்கான். - அக்பரின் உடல் ஆக்ராவுக்கு அருகே எங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது?
விடை : சிக்கந்தராவில். - ஜஹாங்கீர் என்ற பெயரின் பொருளாக அறியப்படுவது என்ன?
விடை : உலகத்தைக் கைப்பற்றியவர். - ஷாஜகான் என்ற பெயரின் பொருள் என்ன?
விடை : உலகத்தின் அரசர். - ஒளரங்கசீப் சூட்டிக்கொண்ட 'ஆலம்கீர்' என்னும் பட்டத்தின் பொருள் என்ன?
விடை : உலகைக் கைப்பற்றியவர். - மராத்திய அரசில் ஒட்டுமொத்த வருமானத்தில் நான்கில் ஒரு பங்கு பாதுகாப்பு கட்டணமாக வசூலிக்கப்பட்ட வரி எது?
விடை : சௌத். - மராத்திய அஷ்டபிரதானில் 'அமத்தியா' அல்லது 'மஜீம்தார்' என்பவரின் பொறுப்பு என்ன?
விடை : நிதியமைச்சர். - மூன்றாம் பானிப்பட்போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
விடை : 1761.
- சுல்தான் நஸ்ருதின் மாமூதுவால் ஆதரிக்கப்பட்ட மின்கஜ் உஸ் சிராஜ் எழுதிய நூல் எது?
விடை : தபகத்-இ-நஸிரி. - அபுல் பாசல் எழுதிய வரலாற்று நூல்களான அயினி அக்பரி மற்றும் அக்பர் நாமா எந்த நூற்றாண்டில் எழுதப்பட்டன?
விடை : 16 ஆம் நூற்றாண்டு. - தசுக்-இ-ஜாஹங்கீரி எனும் நூலை 17 ஆம் நூற்றாண்டில் எழுதியவர் யார்?
விடை : ஜாஹாங்கீர். - தாரிக்-இ-பதானி அல்லது பதானியின் வரலாறு எனப்படும் சிறந்த நூல் எந்த ஆண்டு எழுதப்பட்டது?
விடை : கி.பி. 1595. - விதோபா குறித்து அபங்கா அல்லது கீர்த்தனைகளை இயற்றிய மகாராஷ்டிர கவிஞர் யார்?
விடை : துக்காராம். - சீக்கியர்களின் முதல் குருவாகக் கருதுப்படுபவர் யார்?
விடை : குருநானக். - சமணத்தின் ஐம்பெரும் உறுதிமொழிகளில் 'திருமணம் செய்து கொள்ளாமை' என்பதைக் குறிக்கும் சொல் எது?
விடை : பிரம்மச்சரியா. - பௌத்த பிட்சுக்களுக்கான விதிமுறைகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
விடை : வினய பிடகா. - கௌதமருக்கு முன்பாக வாழ்ந்ததாக நம்பப்படுகிற 24 புத்தர்களின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் நூல் எது?
விடை : புத்தவம்சா.
- ஜிட்டல் எனப்படும் செப்பு நாணயங்கள் யாருடைய காலகட்டத்தை அறிய உதவுகின்றன?
விடை : டெல்லி சுல்தான்கள். - டங்கா எனப்படும் வெள்ளி நாணயங்களை அறிமுகப்படுத்திய டெல்லி சுல்தான் யார்?
விடை : இல்துமிஷ். - அலாவுதீன் கில்ஜி எந்த உலோகத்தாலான நாணயங்களை வெளியிட்டார்?
விடை : தங்க நாணயங்கள். - முகமதுபின் துக்ளக் எந்த உலோகத்தாலான நாணயங்களை அடையாளப் பணமாக வெளியிட்டார்?
விடை : செப்பு நாணயங்கள். - 1 வெள்ளி டங்கா என்பது எத்தனை ஜிட்டல் நாணயங்களுக்குச் சமமானதாகும்?
விடை : 48 ஜிட்டல். - மார்கோபோலோ எந்த நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற அறிஞர் ஆவார்?
விடை : வெனிஸ் நாடு. - மொராக்கோ நாட்டு அறிஞரான இபன் பதூதாவின் பயண நூல் எந்தப் பெயரில் அழைக்கப்படுகிறது?
விடை : ரிக்ளா. - விஜயநகரப் பேரரசுக்கு 1443 இல் மத்திய ஆசியாவின் ஹீரட் நகரிலிருந்து வந்த பயணி யார்?
விடை : அப்துர் ரஸாக். - போர்த்துகீசியப் பயணியான டோமிங்கோ பயஸ் எந்த ஆண்டு விஜயநகருக்கு வருகை தந்தார்?
விடை : 1522. - சுயசரிதை எனப் பொருள்படும் 'தஜூக்' என்பது எந்த மொழிச் சொல்லாகும்?
விடை : பாரசீகச் சொல். - அராபியச் சொல்லான 'தாரிக்' அல்லது 'தாகுயூக்' என்பதன் பொருள் என்ன?
விடை : வரலாறு.
- புவியின் கொள்ளளவில் கவசம் (Mantle) எத்தனை சதவீதம் உள்ளது?
விடை : 84%. - சுனாமி என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
விடை : ஜப்பானிய சொல். - காக்கசாய்டு என அழைக்கப்படும் மனித இனத்தவர் எந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்?
விடை : ஐரோப்பியர்கள். - இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள மொழிகளின் எண்ணிக்கை எத்தனை?
விடை : 22 மொழிகள். - உலக மக்கள் தொகை நாள் எந்த தேதியில் கடைபிடிக்கப்படுகிறது?
விடை : ஜூலை 11. - சீனாவில் உள்ள த்ரீகார்ஸ் அணை நீர் மின் சக்தி திட்டம் எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
விடை : யாங்ட்ஸி நதி. - பொருளியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
விடை : ஆடம்ஸ்மித். - இந்திய சட்டப்படி, ஒருவர் வாகன ஓட்டுநர் உரிமம் பெறும் வயது என்ன?
விடை : 18. - ரக் ஷாபந்தன் விழாவை 1905 ஆம் ஆண்டு பெருமளவில் மக்கள் பங்கேற்புடன் தொடங்கியவர் யார்?
விடை : ரவீந்திரநாத் தாகூர்.


0 Comments