TNPSC TRB TET 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 100 வினா விடை | 7th Social Science Part-4
வரலாறு மற்றும் புவியியல் தொடர்பான கேள்விகள் மற்றும் பதில்கள்:
வரலாறு (இந்தியா)
வட இந்திய அரசுகள் (கி.பி. 700 - 1200)
- கவிஞர் சந்த்பார்தை இயற்றிய 'பிருதிவி ராஜ ராசோ' எந்த அரசர்களைப் பற்றி அறிய உதவுகிறது?
- விடை: ராஜபுத்திர அரசர்களைப் பற்றி.
- சித்தூரின் ராணா, மாளவத்தை வெற்றி கொண்டதன் நினைவாக நிறுவிய வெற்றித்தூண் எது?
- விடை: ஜெயஸ்தம்பா.
- பிரதிகார அரசரான வத்சராஜா எந்த நகரைக் கைப்பற்ற விரும்பினார்?
- விடை: கன்னோஜ்.
- இஸ்லாமிய அரசு அரசியல் ரீதியாகவும், மத ரீதியாகவும் ஒரே நபரால் ஆளப்பட்டால், அவ்வரசு எவ்வாறு அழைக்கப்படும்?
- விடை: கலீஃபத்.
- கஜினி மாமூது இயற்கை எய்திய ஆண்டு?
- விடை: கி.பி. 1030.
- டெல்லி சுல்தான் குத்புதீன் ஐபக்கின் மகன் யார்?
- விடை: ஆரம் ஷா.
- கியாசுதீன் பால்பனின் திறமையற்ற மகன் யார்?
- விடை: கைகுபாத்.
- மாலிக் ஜலாலுதீன் கில்ஜி அரசப்பிரதிநிதியாகப் பொறுப்பேற்ற ஆண்டு?
- விடை: 1290.
- ஜலாலுதீன் கில்ஜி யாருடைய பெயரால் நாட்டை ஆண்டார்?
- விடை: சுல்தான் கைகுபாத்.
- அலாவுதீன் கில்ஜி நிலவரியை எந்த முறையில் வசூல் செய்தார்?
- விடை: தானியமாக வசூல் செய்யும் முறை.
- பிரோஷ் ஷா துக்ளக் தனது எத்தனையாவது வயதில் இயற்கை எய்தினார்?
- விடை: 83 வது வயதில்.
- 'தாமர்லைன்' என்றழைக்கப்பட்டு டெல்லியைச் சூறையாடியவர் யார்?
- விடை: தைமூர்.
- பகலூல் லோடியைத் தொடர்ந்து லோடி மரபில் சுல்தானாகப் பொறுப்பேற்றவர் யார்?
- விடை: சிக்கந்தர் லோடி.
- சையது அரச வம்சத்தின் கடைசி சுல்தான் யார்?
- விடை: அலாவுதீன் ஆலம் ஷா.
- சோழர் கால நிர்வாகத்தில் 'நாடுகள் பல கூற்றங்களாகப் பிரிக்கப்பட்டன' என்பதன் பொருள் என்ன?
- விடை: கிராமங்களின் தொகுப்பு.
- காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள உத்திரமேரூரில் கிராம சபை உறுப்பினர்கள் எந்த முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்?
- விடை: குடைவோலை முறை.
- சோழர் காலத்தில் நிலங்களின் உடைமையாளர்களாக இருக்க இயலாத 'உழுகுடி' என்போர் எந்த பிரிவைச் சேர்ந்தவர்கள்?
- விடை: வேளாளரில் ஒரு பிரிவினர்.
- சோழர் காலத்தில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் எவை?
- விடை: யானைத் தந்தங்கள், பவழம், சங்குகள், ஒளிபுகும் கண்ணாடிகள், பாக்கு போன்றவை.
- முதலாம் வரகுணன் என அழைக்கப்படும் பாண்டிய அரசர் யார்?
- விடை: ஜடிலபராந்தக நெடுஞ்சடையன்.
- புகழ்பெற்ற பயணியான மார்க்கோபோலோ காயல் துறைமுகத்திற்கு எந்தெந்த ஆண்டுகளில் வருகை தந்தார்?
- விடை: 1288 மற்றும் 1293.
- பாண்டியர் காலத்தில் நிலத்தின் உண்மையான உடைமையாளர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
- விடை: பூமி புத்திரர் அல்லது வேளாளர்.
- பாண்டிய அரசர்கள் மற்றும் உள்ளூர் தலைவர்களால் உருவாக்கப்பட்ட பிராமணர் குடியிருப்புகளின் பெயர்கள் யாவை?
- விடை: மங்கலம் அல்லது சதுர்வேதிமங்கலம்.
- இரண்டாம் விருபாக்சிராயரைக் கொலை செய்துவிட்டு தம்மையே பேரரசராக அறிவித்துக் கொண்டவர் யார்?
- விடை: சாளுவ நரசிம்மர்.
- விஜயநகரப் பேரரசில் துளுவ வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கிவைத்த படைத்தளபதி யார்?
- விடை: நரசநாயக்கர்.
- அஷ்டதிக்கஜங்களில் மகத்தானவராகக் கருதப்படும் இலக்கிய மேதை யார்?
- விடை: அல்லசானி பெத்தண்ணா.
- கிருஷ்ணதேவராயரைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பேற்ற அவருடைய இளைய சகோதரர் யார்?
- விடை: அச்சுதராயர்.
- அச்சுதராயருக்கு அடுத்து விஜயநகர ஆட்சிக்கு வந்தவர் யார்?
- விடை: முதலாம் வேங்கடர்.
- சுல்தான்களின் சூழ்ச்சியினால் விஜயநகர அரசு இறுதியாக வீழ்ச்சியுற்ற ஆண்டு?
- விடை: 1646.
- விஜயநகர பேரரசு காலத்தில் போர்த்துகீசியக் கட்டுமானக் கலைஞர்களின் உதவியுடன் ஏரி கட்டப்பட்டதாகக் குறிப்பிட்ட பாரசீகப் பயணி யார்?
- விடை: அப்துல்ரஸாக்.
- பாமினி அரசில் நாட்டின் பிரதம மந்திரியோடு இணைந்து செயல்பட்ட அமைச்சர் யார்?
- விடை: பேஷ்வா.
- 'அமிர்-இ-ஜூம்லா' என்பவர் பாமினி அரசில் எத்துறை அமைச்சர்?
- விடை: நிதியமைச்சர்.
- 'சதார்-இ-ஜகான்' என்பவர் பாமினி அரசில் வகித்த பதவி என்ன?
- விடை: தலைமை நீதிபதி, சமயம் மற்றும் அறக்கொடைகளின் அமைச்சர்.
- மாபெரும் மங்கோலிய அரசன் செங்கிஸ்கானின் பதின்மூன்றாவது தலைமுறை வாரிசான முகலாய அரசர் யார்?
- விடை: பாபர்.
- ஷெர்ஷா எந்த ஆண்டு சௌசா என்ற இடத்தில் ஹூமாயூனைத் தோற்கடித்தார்?
- விடை: 1539.
- அக்பர் தனது எத்தனையாவது வயதில் அரசராக முடிசூட்டப் பெற்றார்?
- விடை: பதினான்கு வயது.
- மத்திய இந்தியப் பகுதியைச் சேர்ந்த ராணி துர்க்காவதியைத் தோற்கடித்த முகலாய அரசர் யார்?
- விடை: பாபர்.
- அகமதுநகர் அரசின் பகர ஆட்சியாளராக இருந்த புகழ்பெற்ற ராணி யார்?
- விடை: சந்த் பீவி.
- முகலாயப் பேரரசர் ஷாஜகான் நோய்வாய்ப்பட்ட ஆண்டு எது?
- விடை: 1657.
- ஷாஜகான் ஒரு கைதியாக தனது இறுதிக்காலத்தை எங்கு கழித்தார்?
- விடை: ஆக்ரா கோட்டையிலுள்ள ஷாபர்ஜ் அரண்மனையில்.
- தக்காணத்தில் இளவரசர் அக்பர் யாருடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டார்?
- விடை: சிவாஜியின் மகன் சாம்பாஜியுடன்.
- சிவாஜி தமக்கென ஒரு நாட்டை உருவாக்கி தம்மை மராத்திய பேரரசராக அறிவித்த ஆண்டு எது?
- விடை: 1674.
- முகலாயர் காலத்தில் சுபாக்களை நிர்வகிப்பவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
- விடை: சுபேதார்.
- முகலாயர் காலத்தில் நகரங்களும் பெருநகரங்களும் எந்த அதிகாரிகளால் நிர்வகிக்கப்பட்டன?
- விடை: கொத்தவால்.
- அக்பர் காலத்தில் சராசரி விளைச்சலில் எவ்வளவு பங்கு அரசுக்கு வரியாகச் செலுத்த நிர்ணயம் செய்யப்பட்டது?
- விடை: மூன்றில் ஒரு பங்கு.
- டெல்லியில் தீன்-இ-பானா கட்டடங்களைக் கட்டிய முகலாய அரசர் யார்?
- விடை: ஹூமாயூன்.
- டெல்லியிலுள்ள மிகப்பெரிய ஜூம்மா மசூதியை கட்டியவர் யார்?
- விடை: ஷாஜகான்.
- மராத்திய மன்னர் சிவாஜியின் ஆசிரியரும் குருவுமானவர் யார்?
- விடை: தாதாஜி கொண்டதேவ்.
- மராத்தியர் காலத்தில் பத்தில் ஒரு பங்கு அரசருக்கான கட்டணமாக வசூலிக்கப்பட்ட வரி எது?
- விடை: சர்தேஷ்முகி.
- மராத்திய கிராமங்கள் எந்த அதிகாரிகளால் நிர்வகிக்கப்பட்டன?
- விடை: தேஷ்முக்.
- மராத்திய அஷ்டபிரதானில் உள்துறை அமைச்சர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
- விடை: வாக்கிய - நாவிஸ்.
- மராத்திய அஷ்டபிரதானில் வெளியுறவுத்துறை அமைச்சர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
- விடை: சுமந்த் /துபிர்.
- பாலாஜி விஸ்வநாத் பேஷ்வா ஆன ஆண்டு?
- விடை: 1713.
- பூனேவை தலைநகரமாக அமைத்து ஆட்சி புரிந்த பேஷ்வா யார்?
- விடை: பாலாஜி பாஜிராவ்.
- நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழி எத்தனை பத்திகளைக் கொண்டது?
- விடை: 1,102 பத்திகள்.
- பெரியாழ்வார் தொடக்கத்தில் எவ்வாறு அறியப்பட்டார்?
- விடை: விஷ்ணு சித்தர்.
- 'ஆண்டாள்' என்பதன் பொருளாக அறியப்படுவது என்ன?
- விடை: ஆட்சி புரிபவள்.
- திருமுறையில் உள்ள 12வது நூல் எது?
- விடை: சேக்கிழாரின் பெரியபுராணம்.
- அத்வைதத்தை போதித்த ஆதிசங்கரர் மடங்களை நிறுவிய இடங்கள் எவை?
- விடை: பத்ரிநாத், பூரி, துவாரகா, சிருங்கேரி.
- வேதாந்தப் பள்ளியின் அடிப்படை நூலான பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதியவர் யார்?
- விடை: ஆதிசங்கரர்.
- மீராபாய் எந்த நாட்டின் பட்டத்து இளவரசரின் மனைவி ஆவார்?
- விடை: மேவார் நாடு.
- பரவசமூட்டும் பாடல்கள் மற்றும் களிப்பூட்டும் நடனங்கள் மூலம் கிருஷ்ண வழிபாட்டைப் பிரபலமாக்கியவர் யார்?
- விடை: சைதன்யதேவர்.
- 'சூபி' எனும் சொல் எந்த சொல்லில் இருந்து தோன்றியதாகும்?
- விடை: சுப்.
- பீகாரில் மட்டுமே செயல்பட்ட சுரவார்டியின் கிளை அமைப்பு எது?
- விடை: பிர்தௌசி அமைப்பு.
- கபீரின் கவிதைகளின் தொகுப்புகள் எவை?
- விடை: கிரந்தவளி மற்றும் பைஜக்.
- சீக்கியர்களின் முதல் குருவாகக் கருதப்படுபவர் யார்?
- விடை: குருநானக்.
- குருநானக்கின் போதனைகளை பரப்புரை செய்த இசைக்குழுக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
- விடை: கீர்த்தக்.
- குருநானக் தனக்குப் பின்னரான குருவாக நியமித்த தனது சீடரின் பெயர் என்ன?
- விடை: லேனா.
- 'பாகல்' எனப்படும் திருமுழுக்கு செய்யும் முறை யாருடைய காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது?
- விடை: குரு கோவிந் சிங்.
- மகேந்திரவர்மன் உருவாக்கிய முதல் குடைவரைக் கோவில் எங்கு அமைந்துள்ளது?
- விடை: மண்டகப்பட்டு.
- காஞ்சிபுரத்திலுள்ள வைகுண்டப் பெருமாள் கோவில் யாரால் கட்டப்பட்டது?
- விடை: இரண்டாம் நந்திவர்மன்.
- ஒற்றைக்கல்லில் செதுக்கப்பட்ட முற்றுப்பெறாத வெட்டுவான் கோவில் எங்குள்ளது?
- விடை: கழுகுமலையில்.
- முற்காலப் பாண்டியர்களின் உன்னதமான ஓவியங்கள் காணப்படும் இடங்கள் எவை?
- விடை: சித்தன்னவாசல் மற்றும் திருமலைபுரம்.
- முற்காலச் சோழர்களின் கோவில் கட்டடக்கலை எந்த பாணியைப் பின்பற்றி அமைந்ததாகும்?
- விடை: செம்பியன் மகாதேவி பாணி.
- தஞ்சை பெருவுடையார் சிவன் கோவில் கட்டிமுடிக்கப்பட்ட ஆண்டு?
- விடை: கி.பி.1009.
- கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலின் உயரம் என்ன?
- விடை: 55 மீட்டர்.
- தாராசுரம் கோவில் எந்த கடவுளுக்குப் படைத்தளிக்கப்பட்டதாகும்?
- விடை: ஐராவதீஸ்வரருக்கு.
- தாராசுரம் கோவிலைக் கட்டிய சோழ அரசன் யார்?
- விடை: இரண்டாம் ராஜராஜன்.
- 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிள்ளையார்பட்டி குடைவரைக் கோவில் எந்த அரசர்கள் காலத்தைச் சேர்ந்தது?
- விடை: பிற்காலப் பாண்டியர்கள்.
- வேலூரிலுள்ள ஜலகண்டேஸ்வர் பெருமாள் கோவிலின் கல்யாண மண்டபம் யாருடைய காலக் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டு?
- விடை: விஜய நகர காலம்.
- இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவிலின் கட்டடக் கலைக்குப் பெரும் பங்களிப்பைச் செய்த சிற்றரசர்கள் யார்?
- விடை: சேதுபதிகள்.
- சமணத்தின் ஐம்பெரும் உறுதிமொழிகளில் 'பணம், பொருள், சொத்துக்கள் மீது ஆசை கொள்ளாமை' என்பதைக் குறிக்கும் சொல் எது?
- விடை: அபரிக்கிரகா.
- ஆகம சூத்திரங்கள் எந்த மொழியில் எழுதப்பட்டுள்ளன?
- விடை: அர்த்த-மகதி பிராகிருத மொழி.
- 'கல்பசூத்ராவின் ஜைனசரிதா' எனும் நூல் யாரால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது?
- விடை: பத்ரபாகு.
- சந்திரகுப்த மௌரியரோடு மைசூருக்குப் புலம்பெயர்ந்து குடியேறிய சமண அறிஞர் யார்?
- விடை: பத்ரபாகு.
- காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்த சீனப்பயணி யுவான் சுவாங் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
- விடை: கி.பி.7ஆம் நூற்றாண்டு.
- காஞ்சிபுரம் திருப்பருத்திக் குன்றத்தில் பாலாற்றின் கரையில் அமைந்துள்ள சமணக் கோவில் எது?
- விடை: திரிலோக்கிநாத ஜைனசுவாமி கோவில்.
- கழுகுமலை சமணர் குகைகோவில் எந்த பாண்டிய அரசனால் உருவாக்கப்பட்டது?
- விடை: பராந்தக நெடுஞ்சடையன்.
- பௌத்த இலக்கியங்களில் பௌத்தத் துறவிகளுக்கான விதிமுறைகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
- விடை: வினய பிடகா.
- கௌதமருக்கு முன்பாக வாழ்ந்ததாக நம்பப்படுகிற 24 புத்தர்களின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் நூல் எது?
- விடை: புத்தவம்சா.
- 'விசுத்திமக்கா' என்ற பௌத்த நூலை எழுதிய முதல் பௌத்த உரையாசிரியர் யார்?
- விடை: புத்தகோசா.
- அஸ்வகோஷரால் எழுதப்பட்ட புத்தசரிதா எந்த மொழியில் எழுதப்பட்டது?
- விடை: சமஸ்கிருதத்தில்.
- நாகப்பட்டினத்தில் சூடாமணி விகாரையை கட்டிய ஸ்ரீவிஜயா அரசருக்கு ஆதரவளித்தவர் யார்?
- விடை: ராஜராஜ சோழன்.
- பௌத்தம் சரிவைத் சந்தித்துக் கொண்டிருந்த சமயமென எடுத்துரைக்கும் மகேந்திரவர்மனின் நூல் எது?
- விடை: மத்தவிலாச பிரகாசனம்.
- ஆசீவகர்களை ஆதரித்த மௌரியப் பேரரசர்கள் யார்?
- விடை: அசோகர் மற்றும் தசரதா.
புவியின் உள்ளமைப்பு
- புவி மேலோட்டின் சராசரி அடர்த்தி எவ்வளவு கிலோ மீட்டர்களாக உள்ளது?
- விடை: 5 முதல் 30 கிலோ மீட்டர்கள்.
- பெரும்பாலும் கடல் மேற்பரப்பானது எவ்வகை பாறைகளால் ஆனது?
- விடை: பசால்ட் பாறைகள்.
- புவி மேலோட்டில் உள்ள சியாலின் சராசரி அடர்த்தி என்ன?
- விடை: 2.7 கி/செ.மீ³.
- புவி மேலோட்டையும் கவசத்தையும் பிரிக்கும் எல்லை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- விடை: மோஹோரோவிசிக்.
- திடநிலையில் உள்ள உட்புற புவிக்கருவான நைஃப் எவற்றால் ஆனது?
- விடை: நிக்கல் மற்றும் இரும்பு.
- புவியின் மேலோட்டிற்கும் கவச மேலடுக்கிற்கும் இடையே உள்ள பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
* விடை: மென் பாறைக் கோளம்.


0 Comments