TNPSC TRB TET 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 100 வினா விடை | 9th Social Science Part-1
வரலாறு மற்றும் காலவரிசை
- புவி சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவானதாகக் கருதப்படுகிறது.
- தொல்லுயிர் ஊழியல் (Proterozic) காலத்தில் முதலில் தோன்றியவை பல செல் உயிரினங்கள்.
- ஆஸ்ட்ரோலாபித்திஸைன் என்பதன் பொருள்: தெற்கத்திய மனிதக் குரங்கு.
- வரலாறு எழுதுவது பண்டைய கிரேக்கர்கள் காலத்தில் தொடங்கியது.
- 'வரலாற்றின் தந்தை' என்று அழைக்கப்படுபவர்: கிரேக்கத்தின் ஹெரோடோடஸ்.
- உலகின் மிகத் தொன்மையான அருங்காட்சியகம்: என்னிகால்டி நன்னா அருங்காட்சியகம்.
- சார்லஸ் டார்வின் 'உயிரினங்களின் தோற்றம்' என்ற நூலை வெளியிட்ட ஆண்டு: 1859.
- பண்டைய மனிதகுல வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவும் முக்காலக் கொள்கையை முன்மொழிந்தவர்: சி.ஜே. தாம்சன்.
- மனிதர்களுக்கு மரபணு ரீதியாக மிக நெருக்கமான பெருங்குரங்கு இனம்: சிம்பன்சி.
- ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதர்களின் மூதாதையர்கள்: ஹோமினின்.
- முதன்முதலில் கருவிகள் செய்த மனித மூதாதையர் இனம்: ஹோமோ ஹெபிலிஸ்.
- கைக்கோடாரிகளைச் செய்த மூதாதையர்கள்: ஹோமோ எரக்டஸ்.
- நவீன மனிதர்கள்: ஹோமோ சேப்பியன்ஸ்.
- கைக்கோடாரிகள் முதன்முதலில் கண்டெடுக்கப்பட்ட இடம்: பிரான்ஸில் உள்ள செயின்ட் அச்சூல்.
- கூரிய வெட்டுமான உள்ள கல்லாலான உளி: பியூரின்.
- பனிக்காலம் தற்காலத்திற்கு எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது: 8,000 ஆண்டுகளுக்கு முன்பு.
- சுமார் 17000 வருடங்கள் பழமையான லாஸ்கா பாறை ஓவியங்கள் காணப்படும் இடம்: மேற்கு பிரான்ஸ் பகுதி.
- எகிப்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம், ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி: பிறை நிலப்பகுதி.
- சென்னைக்கு அருகில் பல்லாவரத்தில் பழங்கற்காலக் கருவிகளை முதன்முறையாகக் கண்டுபிடித்தவர்: சர் இராபர்ட் புரூஸ் ஃபூட்.
- தூத்துக்குடி அருகே உள்ள இடைக்கற்கால கற்கருவிகள் கிடைத்த சிவப்பு மணல் குன்றுகள் பகுதி: தேரி.
- இரும்புக்காலத்தில் உலோக வேலை செய்பவர்கள்: கம்மியர்கள்.
- எகிப்தை 'நைல் நதியின் நன்கொடை' என்று குறிப்பிட்டவர்: கிரேக்க வரலாற்றாளர் ஹெரோடோடஸ்.
- தெய்வீக சக்தி பொருந்தியவராகக் கருதப்பட்ட எகிப்திய அரசர்: பாரோ.
- எகிப்தியர்களின் எழுத்து முறை: சித்திர எழுத்துமுறை.
- சிங்க உடலும் மனித முகமும் கொண்ட பிரம்மாண்டமான சிலை: ஸ்பிங்க்ஸின் பிரம்மாண்டமான சிலை.
- எகிப்தியர்களின் முதன்மையான கடவுளான சூரியக் கடவுள்: ரே (அல்லது அமோன்).
- சூரியக் கடிகாரம், நீர் கடிகாரம், கண்ணாடி ஆகியவற்றைக் கண்டுபிடித்தவர்கள்: எகிப்தியர்கள்.
- மெசபடோமியா என்பதன் பொருள்: இரண்டு ஆறுகளுக்கிடையே உள்ள பகுதி.
- மெசபடோமியாவின் பழமையான நாகரிகம்: சுமேரியர்களுடையது.
- சுமேரியர்கள் உருவாக்கிய முக்கோண வடிவ எழுத்து முறை: கியூனிபார்ம்.
- உலகின் முதல் காவியமாகக் கருதப்படுவது: கில்காமெஷ் காவியம்.
- மாபெரும் சட்டங்களை இயற்றியதற்காகப் புகழ் பெற்ற பாபிலோனின் ஆறாவது அரசர்: ஹமுராபி.
- உலகின் முதல் இராணுவ அரசு எனக் கருதப்படுவது: அஸிரிய பேரரசு.
- 60-ஐ அடிப்படையாகக் கொண்ட ஒரு எண் முறையைக் கண்டுபிடித்தவர்கள்: மெசபடோமியர்கள்.
- குயவர்களின் சக்கரத்தை முதலில் கண்டுபிடித்தவர்கள்: சுமேரியர்கள்.
- 'சீனாவின் துயரம்' என அழைக்கப்படும் ஆறு: மஞ்சள் ஆறு (ஹோவாங்ஹோ).
- நாடோடிகளின் படையெடுப்புகளைத் தடுக்க சீனப் பெருஞ்சுவரைக் கட்டியவர்: ஷி ஹுவாங் டி.
- 'போர்க் கலை' என்ற நூலை எழுதிய இராணுவ உத்தியாளர்: சட் ட்சூ.
- காகிதம் மற்றும் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர்கள்: சீனர்கள்.
- சிந்துசமவெளி நாகரிகம் எவ்வாறு அழைக்கப்படுகிறது: ஹரப்பா நாகரிகம்.
- ஹரப்பா மக்கள் பயன்படுத்தாத விலங்கு: குதிரை.
- தமிழ் மொழி முதன்முதலில் எழுதப்பட்ட வரிவடிவம்: தமிழ் பிராமி.
- தமிழின் பழமையான இலக்கண நூல்: தொல்காப்பியம்.
- இந்தியத் தொல்லியல் துறையால் அகழாய்வு செய்யப்பட்ட புதுச்சேரிக்கு அருகிலுள்ள சங்க காலத் துறைமுகப்பட்டினம்: அரிக்கமேடு.
- கௌடில்யர் என்ற சாணக்கியர் இயற்றிய நூல்: அர்த்த சாஸ்திரம்.
- இலங்கையின் புத்த சமய வரலாற்றைக் கூறும் பாலி மொழி நூல்: மகாவம்சம்.
- எரித்திரியன் கடலின் பெரிப்ளஸ் என்ற நூலில் பெரிப்ளஸ் என்பதன் பொருள்: கடல் வழிகாட்டி.
- லத்தீன் மொழியில் இயற்கை வரலாறு என்ற நூலை எழுதியவர்: மூத்த பிளினி.
- 'பட்டினப்பாலை' நூலை எழுதிய சங்க காலப்புலவர்: கடியலூர் உருத்திரங்கண்ணனார்.
- சங்க காலத்தில் உப்பு வணிகர்கள்: உமணர்கள்.
- கன்பூசியஸ் பிறந்த இடம்: சீனா.
- தாவோயிசத்தைத் தோற்றுவித்தவர்: லாவோட்சே.
- ஜொராஸ்ட்ரியனிசத்தைத் தோற்றுவித்தவர்: பாரசீகத்தைச் சேர்ந்த ஜொராஸ்டர்.
- சமணமதத்தை தோற்றுவித்தவர்: மகாவீரர்.
- சமண மதத்தின் முதல் தீர்த்தங்காரர்: ரிஷபர்.
- புத்த மதத்தை தோற்றுவித்தவர்: கௌதம புத்தர்.
- கௌதம புத்தரின் இயற்பெயர்: சித்தார்த்தர்.
- புத்தர் தனது முதல் போதனையைச் செய்த இடம்: சாரநாத்.
- ஆசிவகம் என்ற பிரிவைத் தோற்றுவித்தவர்: மக்கலி கோசலர்.
- சந்திரகுப்தரின் அமைச்சரான சாணக்கியர் எழுதிய நூல்: அர்த்தசாஸ்திரம்.
- கி.பி. 1526-ல் வட இந்தியாவில் மொகலாயர் அரசை நிறுவியவர்: பாபர்.
- கி.பி. 1347-ல் பாமினி சுல்தானியத்தை உருவாக்கியவர்: அலாவுதீன் பாமான்ஷா.
- "கங்கையும் கடாரமும் கொண்ட சோழன்" என்ற பட்டத்தைப் பெற்றவர்: முதலாம் இராஜேந்திரன்.
- விஜயநகர அரசை நிறுவிய சங்கம வம்சத்தைச் சேர்ந்த சகோதரர்கள்: ஹரிஹரர் மற்றும் புக்கர்.
- வாஸ்கோடகாமா கேரளக் கடற்கரையை வந்தடைந்த ஆண்டு: கி.பி. 1498.
- சோழர் காலத்தில் பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கு அளிக்கப்பட்ட கிராமங்கள்: பிரம்மதேயம்.
- சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர்: குருநானக்.
- பெரியபுராணத்தை எழுதியவர்: சேக்கிழார்.
- புவிமேலோட்டில் சிலிகா மற்றும் அலுமினியம் அதிகம் காணப்படுவதால் இவ்வடுக்கு: சியால் என அழைக்கப்படுகிறது.
- புவியின் கவசத்திற்குக் கீழ் உள்ள அடுக்கான கருவத்தில் நிக்கல் மற்றும் இரும்பு அதிகம் இருப்பதால்: நைஃப் என அழைக்கப்படுகிறது.
- தீப்பாறைகளுக்கு உதாரணம்: கிரானைட், பசால்ட்.
- புவி அதிர்வுகளை பதிவு செய்யும் கருவியின் பெயர்: நில அதிர்வு மானி (Seismometer) அல்லது சீஸ்மோகிராப்.
- சுனாமி என்ற சொல்லின் பொருள்: துறைமுக அலைகள்.
- உறங்கும் எரிமலைக்கு ஒரு உதாரணம்: ஃபியூஜி எரிமலை (ஜப்பான்).
- உலகிலேயே மிக அதிக உயரமான நீர்வீழ்ச்சி: ஏஞ்சல் நீர்வீழ்ச்சி (வெனிசுலா).
- உலகின் மிகப் பெரிய டெல்டா: கங்கை, பிரம்மபுத்திரா டெல்டா.
- வளிமண்டலத்தில் 78% அளவுக்கு அதிகம் காணப்படும் வாயு: நைட்ரஜன்.
- வளிமண்டலத்தில் அனைத்து வானிலை நிகழ்வுகளும் நடைபெறும் அடுக்கு: வளிமண்டல கீழடுக்கு (Troposphere).
- ஓசோன் மூலக்கூறுகள் அதிகம் உள்ளதால் 'ஓசோனோஸ்பியர்' என்று அழைக்கப்படும் அடுக்கு: மீள் அடுக்கு (Stratosphere).
- காற்றின் வேகத்தை அளக்கப் பயன்படும் கருவி: காற்று வேகமானி (Anemometer).
- புவியின் சுழற்சி காரணமாக காற்று தன் பாதையிலிருந்து விலகி வீசுவது: கொரியாலிஸ் விளைவு.
- இந்தியாவில் அதிக மழைபெறும் பகுதி: மௌசின்ரான்.
- பசிபிக் பெருங்கடலில் உள்ள மிகவும் ஆழமான பகுதி: மரியானா அகழியில் உள்ள சேலஞ்சர் பள்ளம்.
- 'ஆயிரம் ஏரிகளின் நிலம்' என்று அழைக்கப்படும் நாடு: பின்லாந்து.
- சூழ்நிலை மண்டலத்தைப் பற்றி படிக்கும் அறிவியல் பிரிவின் பெயர்: சூழலியல் (Ecology).
- தமக்கு வேண்டிய உணவை தானே தயாரித்துக்கொள்ளும் தாவரங்கள்: தற்சார்பு உயிரிகள் (உற்பத்தியாளர்கள்).
- 1972-ஆம் ஆண்டு மனிதன் சுற்றுச்சூழலை உருவாக்கி வடிவமைக்கிறான் என அறிவித்த மாநாடு: ஸ்டாக்ஹோம் மாநாடு.
- இந்தியாவில் முதன் முதலாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட ஆண்டு: கி.பி 1872.
- உலக மக்கள்தொகை தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் நாள்: ஜூலை 11.
- உலகிலேயே மிகப் பெரிய நகரம்: டோக்கியோ.
- உலகின் முதல் நிலவரைபடத்தை வரைந்த கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர்: அனாக்ஸிமேன்டர்.
- முதன் முதலாக வான்வழி புகைப்படங்களை எடுத்த முதல் நபர்: பெலிக்ஸ் நடார்.
- தேசிய வருமானத்தை அளவிடும் சிறந்த குறியீடான தனிநபர் வருமானத்தை அறிய, நாட்டு வருமானத்தை எதனால் வகுக்க வேண்டும்: நாட்டின் மொத்த மக்கள் தொகையால்.
- தென் இந்தியாவின் மூன்றாவது பெரிய ஆறு: காவிரி ஆறு.
- மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி என்று மக்களாட்சிக்கு வரையறை கூறியவர்: ஆபிரகாம் லிங்கன்.
- இந்தியாவில் தேசிய வாக்காளர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது: ஜனவரி 25.
- 1976-ஆம் ஆண்டு எந்த சட்ட திருத்தத்தின் மூலம் அடிப்படை கடமைகள் அரசமைப்பில் இணைக்கப்பட்டன: 42 வது சட்ட திருத்தம்.
- தகவல் அறியும் உரிமைச் சட்டம் இந்தியாவில் இயற்றப்பட்ட ஆண்டு: 2005 அக்டோபர்.
- தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிராகத் தொடர்ச்சியாகப் போராடியவர்: நெல்சன் மண்டேலா.
- நவீன உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடித்தளமிட்டதால் 'உள்ளாட்சி அமைப்புகளின் தந்தை' எனப்படுபவர்: ரிப்பன் பிரபு.


0 Comments