9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 100 வினா விடை | 9th Social Science Part-3


TNPSC TRB TET 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 100 வினா விடை | 9th Social Science Part-3
முக்கிய வினாக்கள் மற்றும் விடைகள் (வரலாறு, புவியியல்)
எண்வினாவிடை
1ஆஸ்ட்ரோலாபித்திஸைன்கள் எதனை உருவாக்கி கருவிகளாகப் பயன்படுத்தினர்?பிளேக்ஸ் எனப்படும் கற்செதில்களை உருவாக்கிக் கருவிகளாகப் பயன்படுத்தினர்.
2இரு புறமும் செதுக்கப்பட்டதால் கீழ்ப் பழங்கற்காலக் கருவிகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?இருமுகக் கருவிகள் என்று அழைக்கப்பட்டன.
3கர்நாடகாவின் இசாம்பூர் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் பிம்பெத்கா ஆகிய இடங்களில் எவ்வகைக் கருவிகள் கிடைத்துள்ளன?அச்சூலியன் கருவிகள் கிடைத்துள்ளன.
4இடைப் பழங்கற்காலத்தில் உடற்கூரியல் ரீதியாக நவீன மனிதர்கள் சுமார் எத்தனை லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகக் கருதப்படுகிறது?3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகக் கருதப்படுகிறது.
5கருக்கல்லை நன்கு தயார் செய்து உருவாக்கப்பட்ட கருவிகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?லெவலாய்சியன் கருவிகள் எனப்பட்டன.
6சப்-சஹாரா பகுதி என்றழைக்கப்படும் ஆப்பிரிக்காவின் சஹாராவிற்குத் தெற்குப் பகுதியில் தோன்றிய மனிதப் பண்பாடு எது?மேல் பழங்கற்காலப் பண்பாடு.
7மேல் பழங்கற்காலத்தில் ஐரோப்பாவில் வாழ்ந்த மனிதர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?குரோமக்னான் என்று அழைக்கப்பட்டார்கள்.
8பனிக்காலம் முற்றுப்பெற்ற சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த காலகட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?ஹோலோசின் காலகட்டம் எனப்படுகிறது.
9இந்தியாவில் இடைக்கற்காலப் பண்பாடு கி.மு. எந்த வாக்கில் தோன்றியது?கி.மு. 10,000 வாக்கில் தோன்றியது.
10தமிழ்நாட்டில் கொசஸ்தலையாறு பகுதியில் வாழ்ந்த மனித மூதாதையர்கள் எந்த வகையைச் சேர்ந்தவர்கள்?ஹோமோ எரக்டஸ் வகையைச் சேர்ந்தவர்கள்.
11கீழ்ப் பழங்கற்கால மக்கள் செய்பொருட்களுக்கு எவ்வகைப் பாறைகளைப் பயன்படுத்தியுள்ளனர்?பஸால்ட் எனும் எரிமலைப் பாறைகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
12புதிய கற்காலத்தில் மெருகேற்றப்பட்ட கற்கோடாரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?'செல்ட்' என்று அழைக்கப்பட்டன.
13தமிழகத்தில் முதன்முதலில் மண்பாண்டங்களும் வேளாண்மை செய்ததற்கான சான்றும் எங்கு கிடைத்துள்ளன?பையம்பள்ளியில் கிடைத்துள்ளன.
14பெருங்கற்காலத்தில் நடப்பட்ட தூண் போன்ற நடுகற்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?மென்ஹிர் எனப்பட்டன.
15கற்திட்டைகளில் ஒருபுறம் இடப்பட்டிருக்கும் இடு துளை எவ்வாறு அழைக்கப்படும்?'போர்ட் ஹோல்' எனப்படும்.
16புகழ் பெற்ற எகிப்திய பாரோவான டூடன்காமனின் சமாதி எங்குள்ளது?லக்ஸருக்கு அருகே உள்ள அரசர்களின் பள்ளத்தாக்கில் உள்ளது.
17எகிப்தியர்களின் எழுத்து மற்றும் கற்றலின் கடவுளான தோத் எந்தப் பறவையின் முகத்தைக் கொண்டிருந்தது?இபிஸ் என்ற பறவையின் முகத்தைக் கொண்டிருந்தது.
18பொதுவான தகவல் தொடர்புக்கு எகிப்தியர்கள் பயன்படுத்திய சித்திர எழுத்து வடிவம் எது?ஹெரிடிக் எழுத்து (பிக்டோகிராம்) பயன்படுத்தப்பட்டது.
19நெப்போலியனால் பிரான்சுக்கு எடுத்துச் செல்லப்பட்ட ரோசெட்டா கல் தற்போது எங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது?லண்டனில் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
20யூப்ரடிஸ், டைக்ரிஸ் என்ற நதிகள் எங்கு இணைகின்றன?பாரசீக வளைகுடாவில் இணைகின்றன.
21பண்டைய சுமேரியாவில் கில்காமெஷ் காவியம் எத்தனை களிமண் பலகைகளில் எழுதப்பட்டிருந்தது?12 களிமண் பலகைகளில் எழுதப்பட்டிருந்தது.
22அஸிரியர்கள் வழிபட்ட காக்கும் தெய்வத்தின் பெயர் என்ன?லமாஸு என்ற தெய்வமாகும்.
23சுமேரியர்கள் வழிபட்ட காற்று மற்றும் ஆகாயத்திற்கான கடவுளின் பெயர் என்ன?என்லில் என்பதாகும்.
24பாபிலோனியர்கள் எந்தக் கடவுளை வழிபட்டார்கள்?மரடுக் என்ற கடவுளை வழிபட்டார்கள்.
25ஹமுராபி தமது சட்டத் தொகுப்பை எந்தக் கடவுளிடமிருந்து பெறுவது போல் கல்லில் வடிக்கப்பட்ட சிற்பம் உள்ளது?சூரியக் கடவுளான சமாஷிடமிருந்து பெறுவது போல் உள்ளது.
26சுமேரிய நாட்காட்டியில் ஒரு வாரத்திற்கு எத்தனை நாட்கள் இருந்தன?ஏழு நாட்கள் இருந்தன.
27'தி ஸ்பிரிங் அண்ட் ஆடோம் அனல்ஸ்' என்ற நூல் எந்த நாட்டின் அதிகாரபூர்வ அரசு நூலாக அங்கீகரிக்கப்பட்டது?சீன அரசு நூலாக அங்கீகரிக்கப்பட்டது.
28வாழ்க்கைக்கான வழிகாட்டியான 'தாவோ டே ஞிங்' என்ற நூலை எழுதியவர் யார்?லாவோட்சே ஆவார்.
29ஹரப்பாவில் வளர்க்கப்பட்ட மாடுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?ஜெபு என்றழைக்கப்பட்டன.
30சிந்துசமவெளி நாகரிக மக்கள் பயன்படுத்திய செம்மணிக்கல் எவ்வாறு அழைக்கப்பட்டது?கார்னிலியன் என்று அழைக்கப்பட்டது.
31கியூனிஃபார்ம் எழுத்துகளில் காணப்படும் எந்தக் குறிப்பு சிந்து பகுதியைக் குறிப்பதாகும்?மெலுஹா என்ற குறிப்பாகும்.
32தமிழ்நாட்டில் தமிழ் பிராமி கல்வெட்டு காணப்படும் பகுதி எது?அரச்சலூர் என்ற பகுதியாகும்.
33நடுகற்கள் நடப்படுவதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கும் நூல் எது?தொல்காப்பியம் விரிவாக எடுத்துரைக்கிறது.
34மௌரியர் காலத்தில் வட இந்தியாவில் பொதுமக்களால் பேசப்பட்ட மொழி எது?பிராகிருதம் ஆகும்.
35அரிக்கமேடு அகழாய்வை மேற்கொண்ட நம் நாட்டின் தொல்லியல் அறிஞர்கள் யார்?ஏ. கோஷ் மற்றும் கிருஷ்ண தேவா ஆவர்.
36கட்டி வடிவிலான தங்கம், வெள்ளி போன்ற மதிப்புமிக்க உலோகங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?புல்லியன் என்று அழைக்கப்பட்டன.
37பாண்டிய நாட்டில் கிடைத்த முத்துக்கள், கடற்பொருள்களைக் குறிப்பதாகக் கருதப்படும் 'பாண்டிய காவாடகா' என்ற குறிப்பு எந்நூலில் இடம்பெற்றுள்ளது?அர்த்த சாஸ்திரம் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.
38ஆப்பிரிக்காவில் உள்ள ஓசலிஸ் துறைமுகத்திலிருந்து நாற்பது நாள்களில் இந்தியாவை அடைந்துவிடலாம் என்று கூறியவர் யார்?மூத்த பிளினி கூறியுள்ளார்.
39பியூட்டிங்கேரியன் அட்டவணையில் இலங்கைத் தீவு எவ்வாறு குறிக்கப்பட்டுள்ளது?Taprobane எனக் குறிக்கப்பட்டுள்ளது.
40அசோகரின் கல்வெட்டுகளில் பயன்படுத்திய வரிவடிவத்திற்கு என்ன பெயர்?அசோகன் பிராமி என்று பெயர்.
41சேர மன்னர்களின் மூன்று தலைமுறைகளைக் குறிப்பிடும் கல்வெட்டுகள் எங்கு கண்டெடுக்கப்பட்டன?கரூரை அடுத்த புகலூரில் கண்டெடுக்கப்பட்டன.
42சங்ககாலத்தில் வாழ்ந்த பெண்பாற் புலவரான வெண்ணிக்குயத்தியார் எந்த ஊரைச் சேர்ந்தவர்?வெண்ணி என்ற ஊரைச் சேர்ந்தவர்.
43கொடுமணலிலும், குட்டூரிலும் நடந்த அகழாய்வுகளில் வெளிப்பட்டவை எவை?இரும்பு உருக்கு உலைகள் வெளிப்பட்டுள்ளன.
44அரிக்கமேட்டிலும், கடலூருக்கு அருகில் குடிக்காடு என்ற ஊரிலும் எத்தகைய தொழிலகங்கள் இருந்துள்ளன?கண்ணாடி மணி செய்யும் தொழிலகங்கள் இருந்துள்ளன.
45யவனர் என்னும் சொல் எந்த கிரேக்கப் பகுதியிலிருந்து வந்தது?அயோனியா விலிருந்து வந்தது.
46தென்கிழக்கு ஆசியாவைத் தமிழ் இலக்கியங்கள் எவ்வாறு குறிப்பிடுகின்றன?சுவர்ணபூமி என்று குறிப்பிடுகின்றன.
47லத்தீன் எழுத்துகளில் எழுதப்படும் சீனச் சொற்களை உச்சரிக்க மொழியிலாளர்களால் உருவாக்கப்பட்ட முறை எது?பின்இன் (Pinyin) ஒலிபெயர்ப்பு முறை.
48ஜொராஸ்ட்ரியர்களின் புனித நூல் எது?'ஜென்ட் அவெஸ்தா' என்பதாகும்.
49மகாவீரரின் தாயார் திரிசரை எந்த இனத்தைச் சேர்ந்த இளவரசியாவார்?லிச்சாவி இனத்தைச் சேர்ந்த இளவரசியாவார்.
50மகாவீரர் தனது 72 வது வயதில் எங்கு காலமானார்?ராஜகிருகத்திற்கு அருகில் உள்ள பவபுரியில் காலமானார்.
51இந்தியாவில் செதுக்கப்பட்ட மிக உயரமான சமணச் சிலை எங்கு அமைந்துள்ளது?கர்நாடகாவில் உள்ள சிரவணபெலகொலாவில் (பாகுபலியின் சிலை).
52கௌதம புத்தரின் தந்தை சுத்தோதனார் எந்த இனக்குழுவின் தலைவராக இருந்தார்?சாக்கியர்கள் எனும் சத்திரிய இனக்குழுவின் தலைவராக இருந்தார்.
53பௌத்தத்தின் அசல் வடிவமாக புத்தர் போதித்த சிறிய பாதை எவ்வாறு அழைக்கப்பட்டது?ஹீனயானம் என்று அழைக்கப்பட்டது.
54புத்த இலக்கியங்கள் எத்தனை மஹாஜனபதங்களைப் பட்டியலிடுகின்றன?பதினாறு மஹாஜனபதங்களைப் பட்டியலிடுகின்றன.
55மகாஜனபதங்கள் காலத்தில் வரி வசூல் அதிகாரி எவ்வாறு அழைக்கப்பட்டார்?பகதுகர் எனப்பட்டார்.
56மகத நாட்டில் நிலவரி எவ்வாறு அழைக்கப்பட்டது?பாலி என்று அழைக்கப்பட்டது.
57அஜாதசத்ரு வழியில் வந்த அரசர்களை அகற்றிவிட்டு மக்கள் யாரை அரசராக நியமித்தார்கள்?சிசுநாகரை அரசராக நியமித்தார்கள்.
58மௌரிய நிர்வாகத்தில் மாவட்ட நிர்வாகம் யாருடைய கீழ் கொண்டு வரப்பட்டது?ஸ்தானிகா என்பவரின் கீழ் கொண்டு வரப்பட்டது.
59இந்திய வரலாற்றின் இடைக்காலம் எந்த நூற்றாண்டு முதல் எந்த நூற்றாண்டு வரை என வரையறை செய்யப்படுகிறது?கி.பி. 7 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை என வரையறை செய்யப்படுகிறது.
60தென்னிந்தியாவில் 13 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வீழ்ந்த பேரரசு எது?சோழப் பேரரசு வீழ்ந்தது.
61அலாவுதீன் கில்ஜியின் தென்னிந்தியப் படையெடுப்பிற்குத் தலைமையேற்ற படைத்தளபதி யார்?மாலிக்காபூர்.
62பாமினி சுல்தானிய அரசின் சிறந்த நிர்வாகத்திற்கு காரணமான அமைச்சர் யார்?மகமுத் கவான் காரணமாவார்.
63கம்போடியாவில் உள்ள மிகப்பிரமாண்டமான அங்கோர்-வாட் கோவில்கள் யாருடைய பண்பாடு மற்றும் கலையின் செல்வாக்கைக் காட்டுகின்றன?சோழர்கால பண்பாடு மற்றும் கலையின் செல்வாக்கைக் காட்டுகின்றன.
64விஜயநகர அரசின் தலைநகரை பெனுகொண்டாவிற்கும் பின்னர் சந்திரகிரிக்கும் மாற்றியவர்கள் யார்?விஜயநகர அரசர்கள் மாற்றினர்.
65முதல் ஆறு மொகலாயப் பேரரசர்கள் எவ்வாறு குறிப்பிடப்படுகின்றனர்?"மாபெரும் மொகலாயர்கள்” எனக் குறிப்பிடப்படுகின்றனர்.
66சோழர் காலத்தில் ஊர்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?'நாடு' மற்றும் 'கோட்டம்' என்று அழைக்கப்பட்டது.
67விஜயநகர அரசர்களின் பிரதிநிதியாக தமிழ்நாட்டின் பல்வேறு மையங்களில் பணியமர்த்தப்பட்ட இராணுவ அதிகாரிகள் யார்?நாயக் என்றழைக்கப்படும் அதிகாரிகள் ஆவர்.
68வட இந்தியாவில் அக்பர் மொகலாய அரசை ஒருங்கிணைத்த காலத்தில் முக்கிய அரச நிர்வாகப் பொறுப்பில் பணியமர்த்தப்பட்டவர் யார்?தேடர்மால் போன்ற நிர்வாகிகள் ஆவர்.
69இடைக்கால இந்தியாவில் பார்சிகள் மற்றும் யூதர்கள் முறையே எங்கு குடியேறினர்?பார்சிகள் குஜராத்திலும், யூதர்கள் கேரளத்திலும் குடியேறினர்.
70ஸ்ரீரங்கம் கோவிலில் கம்பர் எந்த நூலை முறைப்படி அரங்கேற்றம் செய்தார்?இராமாயணத்தை அரங்கேற்றம் செய்தார்.
71கர்நாடக இசைக்குரிய ராகங்களை வகைப்படுத்தியவர் யார்?கோவிந்த தீட்சிதரின் மகன் வேங்கட மகி வகைப்படுத்தினார்.
72வட இந்தியாவில் கிணறுகளிலிருந்து நீர் இறைக்கப் பயன்படுத்தப்பட்ட சக்கரம் எது?'பாரசீகச் சக்கரம்' பயன்படுத்தப்பட்டது.
73இந்தியாவிலிருந்து பதினேழாம் நூற்றாண்டில் துணிகளுக்கு சிவப்பு வண்ணத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட தாவரத்தின் வேர் எது?சாய் என்னும் தாவரத்தின் வேர் பயன்படுத்தப்பட்டது.
74ஊர் ஊராகச் சென்று வணிகம் செய்யும் நாடோடிச் சமூகத்தினர் பொதுவாக எவ்வாறு அழைக்கப்பட்டனர்?பஞ்சாரா என்றழைக்கப்பட்டனர்.
75கவசத்தின் மேற்பகுதியில் பாறைகள் திடமாகவும் கீழ்ப்பகுதியில் எந்நிலையிலும் காணப்படுகிறது?உருகிய நிலையிலும் காணப்படுகிறது.
76புவியின் கருவம் இரு அடுக்குகளைக் கொண்டது, அதில் உட்கருவம் எந்நிலையில் உள்ளது?திடநிலையிலும் உள்ளது.
77செடிமென்ட் என்ற இலத்தீன் மொழி சொல்லிற்குப் பொருள் என்ன?படிதல் என்பது பொருளாகும்.
78உருமாறிய பாறைகளில், கிரானைட் பாறை உருமாறும்போது என்னவாக மாறுகிறது?நீஸ் ஆக மாறுகிறது.
79புவி அதிர்ச்சியை உருவாக்கும் அலைகளில் மிகவும் வேகமாகப் பயணிக்கக் கூடியவை எவை?முதன்மை அலைகள் (Primary or 'P' - waves).
80சிலி நாட்டில் 1960 ஆம் ஆண்டு ரிக்டர் அலகில் 9.5 ஆகப் பதிவான புவி அதிர்ச்சி ஏற்பட்ட இடம் எது?பயோ-பயோ என்ற இடத்தில்.
81செயல்படும் எரிமலைக்கு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள ஓர் உதாரணம் என்ன?செயின்ட் ஹெலன்ஸ் எரிமலை.
822012-ல் ரஷ்யாவில் உள்ள உலகின் மிக ஆழமான பகுதியாக அந்தஸ்தைப் பெற்ற கிணறு எது?சாவ்யோ கிணறு.
83பாறைகளின் மேற்பரப்பு வெங்காயத் தோல் உரிவது போன்று உரித்தெடுக்கப்படுவதற்கு என்ன பெயர்?பாறை மேல் தகடு உரிதல் என்று பெயர்.
84அமெரிக்காவில் உள்ள எல்லோ ஸ்டோன் தேசிய பூங்காவில் காணப்படும் உலகின் சிறந்த வெப்ப நீரூற்று எது?'ஓல்டு பெய்த்புல்' வெப்ப நீருற்று.
85குறுகிய பள்ளத்தாக்கிற்கு கொலராடோ ஆற்றினால் உருவாக்கப்பட்ட சிறந்த உதாரணம் எது?'கிராண்டு கேன்யான்' இதற்கு சிறந்த உதாரணம் ஆகும்.
86ஆசியாவில் உள்ள மிகப் பெரிய நன்னீர் குருட்டு ஆறு எது?பிஹாரிலுள்ள 'கன்வர் ஏரி' ஆகும்.
87ஸ்லாவிக் மொழியில் 'கார்ஸ்ட்' என அழைக்கப்படுவது எவ்வகை நிலத்தோற்றம்?சுண்ணாம்பு பிரதேச நிலத்தோற்றம் என அழைக்கப்படுகிறது.
88இத்தாலிய மொழியில் செம்மண் என்பதைக் குறிக்கும், சுண்ணாம்பு நிலப்பிரதேசங்களில் உருவாகும் நிலத்தோற்றம் எது?டெர்ரா ரோஸா என்பதாகும்.
89உலகின் மிக ஆழமான உறிஞ்சு துளையான 'சைனோசை ஜியான்காங்' எந்த நாட்டில் உள்ளது?சீனாவில் உள்ளது.
90பனியாறுகள் நகரும் போது ஆற்றுப்பள்ளத்தாக்குகள் மேலும் ஆழமாக அரிக்கப்பட்டு உருவாகும் பள்ளத்தாக்குகள் எவை?U வடிவப் பள்ளத்தாக்குகள் உருவாக்கப்படுகின்றன.
91இன்சல்பர்க் என்ற ஜெர்மானிய வார்த்தையின் பொருள் என்ன?தீவுமலை என்பதாகும்.
92சீனாவில் உள்ள 335 மீட்டர் உயரமுடைய பீடபூமி எதனால் ஆனது?மிக கனமான காற்றடி வண்டல் படிவால் ஆனது.
93வளிமண்டல அழுத்தத்தின் செங்குத்துப்பரவலில், ஒவ்வொரு 300 மீட்டர் உயரத்திற்கும் எத்தனை மில்லிபார் காற்றழுத்தம் குறைகிறது?34 மில்லிபார் அளவு காற்றழுத்தம் குறைகிறது.
94நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?'அமைதி மண்டலம்' எனப்படுகிறது.
95துணை வெப்ப உயர் அழுத்த மண்டலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?'குதிரை அட்சங்கள்' என்றும் அழைக்கப்படுகிறது.
96மேலைக் காற்றுகள் 40° அட்சங்களில் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?'கர்ஜிக்கும் நாற்பதுகள்' எனவும் அழைக்கப்படுகின்றன.
97இந்தியப் பெருங்கடலில் உருவாகும் சூறாவளிகளுக்கு பெயர் சூட்டும் முறை எந்த ஆண்டு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது?கி.பி. 2000-ல் நடத்தப்பட்ட கூட்டத்தில்.
98சூரிய மறைவின் பொழுது பல வண்ணத்தில் காட்சியளிப்பதால் "பெண்குதிரை வால்கள்" என்று அழைக்கப்படும் மேகங்கள் எவை?கீற்று மேகங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
99ஐக்கிய நாடுகளின் கொடியில் சித்தரிக்கப்பட்டுள்ள நிலவரைபடக் கோட்டுச் சட்டம் எது?"சமதள துருவ கோட்டுச் சட்டம்" சித்தரிக்கப்பட்டுள்ளது.
100ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹெலிகாப்டர் விபத்தில் மாயமான போது பயன்படுத்தப்பட்ட தேடல் தொழில்நுட்பம் எது?தொலை நுண்ணுணர்வு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement