Thursday, September 29, 2022

TNPSC G.K - 123 | பொதுத்தமிழ் - மணிமேகலை

  • மணிமேகலையை இயற்றியவர் - கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.

  • மணிமேகலையின் தோழியாய் அமைந்து நண்பர்களுக்கெல்லாம் ஒரு இலக்கணமாக அமைந்தவள் - சுதமதி.

  • மணிமேகலையின் அமுதசுரபியில் முதன் முதலில் அன்னமிட்டவர் - ஆதிரை.

  • மணிமேகலையில் உள்ள காதைகள் - 30.

  • மணிமேகலை பெரிதும் வலியுறுத்துவது - பசிப்பிணி நீக்கம்.

  • மணிமேகலையின் வேறு பெயர் - மணிமேகலைத் துறவு.

  • மணிமேகலை பிறந்த ஊர் - பூம்புகார்.

  • மணிமேகலை மறைந்த ஊர் - காஞ்சிபுரம்.

  • அமுதசுரபி முற்பிறவியில் யாரிடம் இருந்தது - ஆபுத்திரன்.

  • மணிமேகலை நூல் முழுவதும் எந்தப் பாவினால் ஆனது - ஆசிரியப்பா.

  • மணிமேகலை தான் கற்ற வித்தையைப் பயன்படுத்தி யாராக உருமாறினாள் - காயசண்டிகை.

  • யாரின் உதவியால் மணிமேகலை அமுதசுரபியைப் பெறுகிறாள் - தீவதிலகை.

  • சீத்தலைச் சாத்தனாரின் காலம் - கி.பி.2ஆம் நூற்றாண்டு.

  • மணிமேகலை எந்த தீவில் அமுதசுரபியைக் கண்டெடுத்தாள் - மணிபல்லவம்.

  • தமிழின் முதல் சமயபௌத்த காப்பியம் - மணிமேகலை.

  • காயசண்டிகையின் கணவர் பெயர் - காஞ்சனன்.

  • ஆபுத்திரன் வரலாற்றை மணிமேகலைக்குச் சொன்னவர் யார் - அறவண அடிகள்.

  • மணிமேகலை காப்பியம் வலியுறுத்துவது எது - துறவறம்.

  • மணிமேகலை எக்கதைக்களத்தை ஒத்து இருப்பதால் இரட்டைக் காப்பியம் என்றழைக்கப்படுகிறது - சிலப்பதிகாரம்.

  • மணிமேகலையை பின்தொடர்ந்த அரச குமாரன் - உதயகுமாரன்.

No comments:

Popular Posts