Sunday, October 09, 2022

TNPSC G.K - 202 | பொதுத்தமிழ் - குறிஞ்சிப்பாட்டு.

குறிஞ்சிப்பாட்டின் உருவம் :


  • திணை - குறிஞ்சித்திணை
  • பா வகை - ஆசிரியப்பா
  • அடி எல்லை - 261

வேறு பெயர்கள் :


  • பெருங்குறுஞ்சி(நச்சினார்கினியர், பரிமேழலகர்)
  • களவியல் பாட்டு
  •  கோல் குறிஞ்சி

புலவர் :


  • பாடிய புலவர் - கபிலர்
  • ஆரிய அரசன் பிரகதத்தனுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதற்காக

அறத்தோடு நிற்றல் துறையின் நிலைகள் :


  • எளித்தல்
  • ஏத்தல்
  • வேட்கை உரைத்தல்
  • ஏதீடு
  • தலைப்பாடு
  • உண்மை செப்பும் கிளவி
  • கூறுதல் உசாதல்

பொதுவான குறிப்புகள் :


  • ஆரிய அரசன் பிரகதத்தனுக்கு தமிழ் அகப்பொருள் மரபை அறிவுறுத்த கபிலர் இயற்றியது.
  • அறத்தோடு நிற்றல் துறையில் இயற்றப்பட்டுள்ளது.
  • கோவை நூல்களுக்கு குறிஞ்சிப்பாட்டு வழிக்காட்டியது என்பர்.
  • 99 வகையான மலர்களை கபிலர் குறிப்பிட்டுள்ளார்
  • தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்கள் தான் முதன் முதலில் குறிஞ்சிப்பாட்டின் ஏடுகளை திரட்டி ஒழுங்குப்படுத்தி பதிப்பித்தார்.
  • “இம்மலர்க் குவியலை 34 அடிகளில் உரைத்தமையால் கபிலர் இயற்கையை வருணிப்பதில் உலகிலேயே தலைச்சிறந்தவர் ஆகிறார்” எனத் தனிநாயகம் அடிகள் பாராட்டுகிறார்.
  • தமிழ் என்பதற்கு அகம் என்று பொருள் கூறுகிறது

முக்கிய அடிகள் :


  • முத்தினும்மணியினும் பொன்னினும் அத்துணை
  • நேர்வரும் குரைய களம் கொடின் புணரும்
  • சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின்
  • மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்தல்
  • ஆசறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை
  • எளிய என்னார் தொல்மருங்கு அறிஞர்
  • இகல்மீக் கடவும் இருபெரும் வேந்தர்
  • வினையிடை நின்ற சான்றோர் போல
  • இருபேர் அச்சமோடு யானும் ஆற்றலோன்

No comments:

Popular Posts