Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

TAMIL G.K MCQ FOR TNPSC | TRB | 101-150

TAMIL G.K MCQ FOR TNPSC | TRB | 101-150

101. ஸ்டீபன் ஹாக்கிங் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட ஆண்டு?

A. 1985.

B. 1963.

C. 1988.

D. 2012.

Answer: B. 1963.


102. ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய 'காலத்தின் சுருக்கமான வரலாறு' என்ற நூல் வெளிவந்த ஆண்டு?

A. 1963.

B. 1985.

C. 1988.

D. 2012.

Answer: C. 1988.


103. 'வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது' என்று கூறியவர் யார்?

A. ஸ்டீபன் ஹாக்கிங்.

B. ஐன்ஸ்டைன்.

C. நியூட்டன்.

D. பாரதியார்.

Answer: A. ஸ்டீபன் ஹாக்கிங்.


104. உயிரினங்களில் ஆறறிவுடைய மக்களை எவ்வாறு வழங்குவர்?

A. அஃறிணை.

B. பலவின்பால்.

C. ஒன்றன்பால்.

D. உயர்திணை.

Answer: D. உயர்திணை.


105. 'என் அம்மை வந்தாள்' என்பது என்ன வழுவமைதி ஆகும்?

A. காலவழுவமைதி.

B. பால் வழுவமைதி.

C. திணை வழுவமைதி.

D. மரபு வழுவமைதி.

Answer: C. திணை வழுவமைதி.


106. 'குடியரசுத்தலைவர் நாளை தமிழகம் வருகிறார்' என்பது என்ன வழுவமைதி ஆகும்?

A. திணை வழுவமைதி.

B. பால் வழுவமைதி.

C. காலவழுவமைதி.

D. இட வழுவமைதி.

Answer: C. காலவழுவமைதி.


107. Nanotechnology என்பதற்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

A. உயிரித் தொழில்நுட்பம்.

B. மீநுண்தொழில்நுட்பம்.

C. விண்வெளித் தொழில்நுட்பம்.

D. புற ஊதாக் கதிர்கள்.

Answer: B. மீநுண்தொழில்நுட்பம்.


108. "ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு" என்றவர் யார்?

A. மு.கு ஜகந்நாத ராஜா.

B. தொல்காப்பியர்.

C. மணவை முஸ்தபா.

D. பாரதியார்.

Answer: C. மணவை முஸ்தபா.


109. மொழிபெயர்த்தல் என்ற தொடரை தொல்காப்பியர் தனது தொல்காப்பிய நூலின் எந்த இயலில் குறிப்பிட்டுள்ளார்?

A. பொருளதிகாரம்.

B. சொல்லதிகாரம்.

C. எழுத்ததிகாரம்.

D. மரபியல்.

Answer: D. மரபியல்.


110. "மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்" என்று கூறும் செப்பேடு எது?

A. தளவாய்புரம் செப்பேடு.

B. சின்னமனூர்ச் செப்பேடு.

C. வேள்விக்குடி செப்பேடு.

D. லெய்டன் செப்பேடு.

Answer: B. சின்னமனூர்ச் செப்பேடு.


111. இரவீந்திரநாத் தாகூர் வங்க மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பு எது?

A. அமர் சோனார் பங்களா.

B. கீதாஞ்சலி.

C. சித்ரா.

D. கோரா.

Answer: B. கீதாஞ்சலி.


112. "சென்றிடுவீர் எட்டுத்திற்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்று கூறியவர் யார்?

A. குலோத்துங்கன்.

B. பாரதியார்.

C. பாரதிதாசன்.

D. மு.வரதராசனார்.

Answer: B. பாரதியார்.


113. சதாவதானம் என்ற கலையில் சிறந்து விளங்கியவர் யார்?

A. குலசேகராழ்வார்.

B. பரஞ்சோதி முனிவர்.

C. கா.ப. செய்குதம்பிப் பாவலர்.

D. கம்பர்.

Answer: C. கா.ப. செய்குதம்பிப் பாவலர்.


114. செய்குதம்பிப் பாவலர் எந்த ஆண்டு சென்னை விக்டோரியா அரங்கில் 'சதாவதானி' என்ற பாராட்டைப் பெற்றார்?

A. மார்ச் 10, 1950.

B. மார்ச் 10, 1874.

C. மார்ச் 10, 1907.

D. மார்ச் 10, 1949.

Answer: C. மார்ச் 10, 1907.


115. திருவிளையாடற் புராணத்தின் ஆசிரியர் யார்?

A. அதிவீரராம பாண்டியர்.

B. குமரகுருபரர்.

C. பரஞ்சோதி முனிவர்.

D. கம்பர்.

Answer: C. பரஞ்சோதி முனிவர்.


116. பாண்டியன் என்னை இகழவில்லை சொல்லின் வடிவாக உன் இடதுபுறம் வீற்றிருக்கும் பார்வதி தேவியையும், சொல்லின் பொருளாக விளங்கும் உண்மையுமே அவமதித்தான்' என்று சினத்துடன் கூறியவர் யார்?

A. கபிலர்.

B. மோசிகீரனார்.

C. இடைக்காடனார்.

D. பரஞ்சோதி முனிவர்.

Answer: C. இடைக்காடனார்.


117. திருவிளையாடற் புராணத்தில் எத்தனை காண்டங்கள் உள்ளன?

A. 64.

B. 3.

C. 6.

D. 96.

Answer: B. மூன்று.


118. புதிய நம்பிக்கை என்ற துணைப்பாடத்தின் ஆசிரியர் யார்?

A. கி.ராஜநாராயணன்.

B. கமலாலயன்.

C. உதயசங்கர்.

D. மு.வரதராசனார்.

Answer: B. கமலாலயன்.


119. ஐய வினாவுக்கு எடுத்துக்காட்டு என்ன?

A. இந்தக் கவிதையின் பொருள் யாது?

B. ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா?

C. இச்செயலை செய்தது மங்கையா? மணிமேகலையா?

D. நீ கடைக்குச் செல்கிறாயா?

Answer: C. இச்செயலை செய்தது மங்கையா? மணிமேகலையா?.


120. உற்றது உரைத்தல் விடைக்கு எடுத்துக்காட்டு என்ன?

A. கால் வலிக்கும்.

B. கட்டுரை எழுத தெரியும்.

C. வராமல் இருப்பேனா.

D. கால் வலிக்கிறது.

Answer: D. கால் வலிக்கிறது.


121. நிரல்நிறைப் பொருள்கோள் எத்தனை வகைப்படும்?

A. 3.

B. 2.

C. 4.

D. 6.

Answer: B. இரண்டு.


122. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது என்ற குறளில் பயின்று வரும் பொருள்கோள் எது?

A. எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்.

B. ஆற்றுநீர்ப் பொருள்கோள்.

C. கொண்டு கூட்டுப் பொருள்கோள்.

D. முறை நிரல்நிறைப் பொருள்கோள்.

Answer: D. முறை நிரல்நிறைப் பொருள்கோள்.


123. கரகாட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A. மயிலாட்டம்.

B. கரகம், கும்பாட்டம்.

C. தேவராட்டம்.

D. தப்பாட்டம்.

Answer: B. கரகம், கும்பாட்டம்.


124. கரகாட்டத்திற்கு அடிப்படையாக கருதப்படுவது எது?

A. கும்பாட்டம்.

B. குடக்கூத்து.

C. மயிலாட்டம்.

D. ஒயிலாட்டம்.

Answer: B. குடக்கூத்து.


125. கரகாட்டத்தின் துணை ஆட்டம் எது?

A. ஒயிலாட்டம்.

B. மயிலாட்டம்.

C. தேவராட்டம்.

D. பொய்க்கால் குதிரையாட்டம்.

Answer: B. மயிலாட்டம்.


126. வானத்து தேவர்கள் ஆடிய ஆட்டம் எனப் பொருள் கொள்ளப்படுவது எது?

A. மயிலாட்டம்.

B. ஒயிலாட்டம்.

C. தேவராட்டம்.

D. சேர்வையாட்டம்.

Answer: C. தேவராட்டம்.


127. தப்பு ஆட்டத்தின் வேறு பெயர் என்ன?

A. பறை.

B. தப்பட்டை, தப்பு.

C. உறுமி.

D. குடம்.

Answer: B. தப்பட்டை, தப்பு.


128. பாட்டும், வசனமும் இல்லாத ஆட்டம் எது?

A. தெருக்கூத்து.

B. கரகாட்டம்.

C. புலியாட்டம்.

D. தோற்பாவை கூத்து.

Answer: C. புலியாட்டம்.


129. கூத்துப்பட்டறை நா.முத்துச்சாமி பெற்ற விருதுகள் யாவை?

A. சாகித்திய அகாதெமி விருது.

B. இந்திய அரசின் தாமரைத் திரு விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது.

C. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விருது.

D. ஜான் வீலர் விருது.

Answer: B. இந்திய அரசின் தாமரைத் திரு விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது.


130. தோலால் ஆன பாவையை கொண்டு நிகழ்த்தப்படும் கலை எவ்வாறு பெயர் பெற்றது?

A. பொம்மலாட்டம்.

B. கையுறைப் பாவைக்கூத்து.

C. தோற்பாவை கூத்து.

D. தெருக்கூத்து.

Answer: C. தோற்பாவை கூத்து.


131. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தெருவிற்கு எந்த மன்னன் பெயர் சூட்டப்பட்டுள்ளது?

A. குலேச பாண்டியன்.

B. சேரல் இரும்பொறை.

C. கரிகால் வளவன்.

D. இராசராச சோழன்.

Answer: D. இராசராச சோழன்.


132. "இந்த பூவை தொடுப்பது எப்படி " என்ற கவிதையை இயற்றியவர் யார்?

A. உமா மகேஸ்வரி.

B. குமரகுருபரர்.

C. கம்பர்.

D. பாரதியார்.

Answer: A. உமா மகேஸ்வரி.


133. குமரகுருபரர் இயற்றிய முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் எந்த வகை இலக்கியம்?

A. காப்பியம்.

B. சிற்றிலக்கியம் (பிள்ளைத்தமிழ்).

C. சங்க இலக்கியம்.

D. நீதி நூல்.

Answer: B. சிற்றிலக்கியம் (பிள்ளைத்தமிழ்).


134. பிள்ளைத்தமிழில் இரு பாலருக்கும் பொதுவான பருவங்கள் எத்தனை?

A. 3.

B. 10.

C. 7.

D. 5.

Answer: C. 7.


135. குமரகுருபரர் எந்தெந்த மொழிகளில் புலமைமிக்கவர்?

A. தமிழ், இந்தி.

B. தமிழ், ஆங்கிலம்.

C. தமிழ், வடமொழி, இந்துஸ்தானி.

D. தமிழ், தெலுங்கு, கன்னடம்.

Answer: C. தமிழ், வடமொழி, இந்துஸ்தானி.


136. கம்பர் கம்பராமாயணத்திற்கு இட்ட பெயர் என்ன?

A. கம்பரராமாயணம்.

B. ராமாயணம்.

C. இராமாவதாரம்.

D. கவிபாடும்.

Answer: C. இராமாவதாரம்.


137. கம்பரை ஆதரித்த வள்ளல் யார்?

A. குலேச பாண்டியன்.

B. சடையப்ப வள்ளல்.

C. நன்னன்.

D. கரிகால் வளவன்.

Answer: B. சடையப்ப வள்ளல்.


138. பாய்ச்சல் சிறுகதை எந்தச் சிறுகதைத் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது?

A. சாயாவனம்.

B. தொலைந்து போனவர்கள்.

C. தக்கையின் மீது நான்கு கண்கள்.

D. விசாரணை கமிஷன்.

Answer: C. தக்கையின் மீது நான்கு கண்கள்.


139. சா. கந்தசாமி எந்தப் புதினத்திற்காக சாகித்திய அகாதமி விருது பெற்றார்?

A. சாயாவனம்.

B. பாய்ச்சல்.

C. விசாரணை கமிஷன்.

D. சுடுமண் சிலைகள்.

Answer: C. விசாரணை கமிஷன்.


140. அகத்திணை என்றால் என்ன?

A. புறப்பொருள் பற்றியது.

B. அரசன் பற்றியது.

C. அன்புடைய தலைவன் தலைவி இடையிலான உறவுநிலைகளைக் கூறுவது.

D. நிலமும் பொழுதும் பற்றியது.

Answer: C. அன்புடைய தலைவன் தலைவி இடையிலான உறவுநிலைகளைக் கூறுவது.


141. ஐந்திணைகளுக்கு உரியன யாவை?

A. முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள்.

B. ஆண்பால், பெண்பால்.

C. திணை, பால்.

D. காண்டம், படலம்.

Answer: A. முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள்.


142. மருத நிலத்திற்குரிய பெரும்பொழுதுகள் யாவை?

A. கார்காலம்.

B. இளவேனில், முதுவேனில், பின்பனி.

C. ஆறு பெரும்பொழுதுகள்.

D. குளிர்காலம், முன்பனிக்காலம்.

Answer: C. ஆறு பெரும்பொழுதுகள்.


143. நெய்தல் நிலத்திற்குரிய சிறுபொழுது எது?

A. யாமம்.

B. மாலை.

C. வைகறை.

D. எற்பாடு.

Answer: D. எற்பாடு.


144. குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வம் எது?

A. திருமால்.

B. இந்திரன்.

C. முருகன்.

D. கொற்றவை.

Answer: C. முருகன்.


145. பாலை நிலத்தின் உணவு என்ன?

A. மலைநெல், தினை.

B. வரகு, சாமை.

C. மீன், உப்புக்குப் பெற்ற பொருள்.

D. சூறையாடலால் வரும் பொருள்.

Answer: D. சூறையாடலால் வரும் பொருள்.


146. மருத நிலத்தின் பறவைகள் எவை?

A. கிளி, மயில்.

B. காட்டுக்கோழி, மயில்.

C. நாரை, நீர்க்கோழி, அன்னம்.

D. கடற்காகம்.

Answer: C. நாரை, நீர்க்கோழி, அன்னம்.


147. நெய்தல் நிலத்தின் பண் எது?

A. குறிஞ்சிப்பண்.

B. முல்லைப்பண்.

C. செவ்வழிப்பண்.

D. பஞ்சுரபண்.

Answer: C. செவ்வழிப்பண்.


148. குறிஞ்சி நிலத்தின் தொழில் என்ன?

A. ஏறுதழுவுதல், நிரை மேய்த்தல்.

B. நெல்லரிதல், களை பறித்தல்.

C. மீன் பிடித்தல், உப்பு விளைத்தல்.

D. தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல்.

Answer: D. தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல்.


149. Aesthetics என்பதன் தமிழ்ச் சொல் என்ன?

A. முருகியல், அழகியல்.

B. கலைச்சொல்.

C. ஆய்வேடு.

D. குறியீட்டியல்.

Answer: A. அழகியல், முருகியல்.


150. Terminology என்பதன் தமிழ்ச் சொல் என்ன?

A. ஆய்வேடு.

B. கலைச்சொல்.

C. அறிவாளர்.

D. சின்னம்.

Answer: B. கலைச்சொல்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement